தனியார் நிறுவனம் மீது புகார் : சட்டவிரோதமாக கொட்டப்படும் கழிவுகளால் சீர்கேடு!
Jan 14, 2026, 09:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தனியார் நிறுவனம் மீது புகார் : சட்டவிரோதமாக கொட்டப்படும் கழிவுகளால் சீர்கேடு!

Murugesan M by Murugesan M
Sep 1, 2025, 08:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளும் கழிவுகளும் பாண்டியன் கோட்டைப் பகுதியில் கொட்டப்படுவதால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு நிலவுவதாகப் புகார் எழுந்துள்ளது. சட்டத்திற்கு விரோதமாகக் கழிவுகளை கொட்டும் தனியார் ஒப்பந்த நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை அவனியாபுரம் அடுத்துள்ள வெள்ளக்கல் குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகின்றன. அந்தக் குப்பைகளை அள்ளி கிடங்குகளில் கொட்ட ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள அவர்லேண்ட் எனும் தனியார் நிற்வனம் அண்மைக்காலமாகவே திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாண்டியன்கோட்டைப் பகுதியில் சட்டவிரோதமாகக் கொட்டி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

இரவு நேரங்களில் குப்பைகளைக் கொட்டுவதோடு அதனை அவ்வப்போது தீயிட்டுக் கொளுத்துவதால் பாண்டியன்கோட்டைப் பகுதி முழுவதுமே புகை மண்டலமாகச் சூழ்ந்து பொதுமக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. குப்பைகள் அடிக்கடி தீ வைத்து எரிக்கப்படுவதால் அதில் இருந்து எழும் கரும்புகையால் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

குப்பைக் கிடங்கில் தான் குப்பைகளைக் கொட்ட வேண்டும் என்ற ஒப்பந்தம் போட்ட பின்னரும் குறிப்பிட்ட தனியார் நிறுவனம் குடியிருப்பு மற்றும் அரசுக்குச் சொந்தமான இடங்களை குப்பைகளைக் கொட்டி வருவதாகப் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் புகார்  தெரிவித்துள்ளனர். செப்டிங் டேங்க் கழிவுகள், கட்டுமான கழிவுகள், இறைச்சிக் கழிவுகள் என அனைத்துவிதமான கழிவுகளும் கொட்டப்படுவதால் பொதுமக்கள் மட்டுமல்லாது அக்கழிவுகளை உண்ணக்கூடிய கால்நடைகளும் நோய்வாய் பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சட்டத்திற்கு விரோதமாகவும், பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொள்ளும் தனியார் நிறுவனத்தின் செயல்கள் குறித்து பலமுறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் மீதும் பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி செயல்படும் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மீது கடுமையாக நடவடிக்கை எடுப்பதோடு பொது இடங்களில் கொட்டப்பட்ட கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை எழுந்துள்ளது.

Tags: Complaint against private company: Illegal dumping of waste causing disruptionதனியார் நிறுவனம் மீது புகார்கழிவுகளால் சீர்கேடு
ShareTweetSendShare
Previous Post

தடைகல்லாக நின்ற அமெரிக்கா : தடைகளை தகர்த்தெறிந்த இந்தியா!

Next Post

புலம்பும் அமெரிக்க நிறுவனங்கள் : இந்தியாவில் அமெரிக்க எதிர்ப்பு அலை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies