தனியார் நிறுவனம் மீது புகார் : சட்டவிரோதமாக கொட்டப்படும் கழிவுகளால் சீர்கேடு!
Jul 23, 2026, 02:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தனியார் நிறுவனம் மீது புகார் : சட்டவிரோதமாக கொட்டப்படும் கழிவுகளால் சீர்கேடு!

Murugesan M by Murugesan M
Sep 1, 2025, 08:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளும் கழிவுகளும் பாண்டியன் கோட்டைப் பகுதியில் கொட்டப்படுவதால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு நிலவுவதாகப் புகார் எழுந்துள்ளது. சட்டத்திற்கு விரோதமாகக் கழிவுகளை கொட்டும் தனியார் ஒப்பந்த நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை அவனியாபுரம் அடுத்துள்ள வெள்ளக்கல் குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகின்றன. அந்தக் குப்பைகளை அள்ளி கிடங்குகளில் கொட்ட ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள அவர்லேண்ட் எனும் தனியார் நிற்வனம் அண்மைக்காலமாகவே திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாண்டியன்கோட்டைப் பகுதியில் சட்டவிரோதமாகக் கொட்டி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

இரவு நேரங்களில் குப்பைகளைக் கொட்டுவதோடு அதனை அவ்வப்போது தீயிட்டுக் கொளுத்துவதால் பாண்டியன்கோட்டைப் பகுதி முழுவதுமே புகை மண்டலமாகச் சூழ்ந்து பொதுமக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. குப்பைகள் அடிக்கடி தீ வைத்து எரிக்கப்படுவதால் அதில் இருந்து எழும் கரும்புகையால் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

குப்பைக் கிடங்கில் தான் குப்பைகளைக் கொட்ட வேண்டும் என்ற ஒப்பந்தம் போட்ட பின்னரும் குறிப்பிட்ட தனியார் நிறுவனம் குடியிருப்பு மற்றும் அரசுக்குச் சொந்தமான இடங்களை குப்பைகளைக் கொட்டி வருவதாகப் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் புகார்  தெரிவித்துள்ளனர். செப்டிங் டேங்க் கழிவுகள், கட்டுமான கழிவுகள், இறைச்சிக் கழிவுகள் என அனைத்துவிதமான கழிவுகளும் கொட்டப்படுவதால் பொதுமக்கள் மட்டுமல்லாது அக்கழிவுகளை உண்ணக்கூடிய கால்நடைகளும் நோய்வாய் பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சட்டத்திற்கு விரோதமாகவும், பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொள்ளும் தனியார் நிறுவனத்தின் செயல்கள் குறித்து பலமுறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் மீதும் பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி செயல்படும் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மீது கடுமையாக நடவடிக்கை எடுப்பதோடு பொது இடங்களில் கொட்டப்பட்ட கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை எழுந்துள்ளது.

Tags: Complaint against private company: Illegal dumping of waste causing disruptionதனியார் நிறுவனம் மீது புகார்கழிவுகளால் சீர்கேடு
ShareTweetSendShare
Previous Post

தடைகல்லாக நின்ற அமெரிக்கா : தடைகளை தகர்த்தெறிந்த இந்தியா!

Next Post

புலம்பும் அமெரிக்க நிறுவனங்கள் : இந்தியாவில் அமெரிக்க எதிர்ப்பு அலை!

Related News

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

Load More

அண்மைச் செய்திகள்

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

இன்றைய தங்கம் விலை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

ஆவின் பால் தட்டுப்பாடும் தவெக அரசின் அலட்சியமும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies