வேதனையில் வாடும் விவசாயிகள் : அழிவை நோக்கி வெற்றிலை விவசாயம்!
Oct 23, 2025, 01:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேதனையில் வாடும் விவசாயிகள் : அழிவை நோக்கி வெற்றிலை விவசாயம்!

Web Desk by Web Desk
Sep 2, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல்லில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகத் திமுக வழங்கிய வாக்குறுதி தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை என வெற்றிலை விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அழிவை நோக்கி நகரும் வெற்றிலை விவசாயத்தைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சிறப்புத் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல் அடுத்த பரமத்திவேலூர், பொன்மலர் பாளையம், வெங்கரை, பாண்டமங்கலம், குப்பிச்சிபாளையம் உள்ளிட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் வெற்றிலைச் சாகுபடி நடைபெற்று வருகிறது.

வெற்றிலைச் சாகுபடியில் ஈடுபட்டும் வரும் விவசாயிகளில் 90 சதவிகிதம் பேர் குத்தகை நிலத்திலேயே சாகுபடி செய்து வரும் நிலையில், இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரும்பாலான விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் திகழும் இந்த வெற்றிலை விவசாயத்தை மேம்படுத்தவோ, விவசாயிகளுக்கு உதவவோ தமிழக அரசு எந்ததிட்டத்தையும் அறிவிக்கவில்லை என்பது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் தமிழகத்திலிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்காக வெற்றிலை அனுப்பப்பட்ட நிலையும், படிப்படியாகக் குறைந்து வருவதால் விவசாயிகளின் வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் கடந்தும் நிறைவேற்றாமல் இருப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதிக மருத்துவக் குணம் கொண்ட வெற்றிலையில் இருந்து மருந்துகளைத் தயாரிக்க முன்வரவேண்டும் என்பதோடு, அழியும் தருவாயில் உள்ள வெற்றிலை விவசாயத்தைப் பாதுகாக்க மற்ற சாகுபடிக்கு வழங்கப்படுவதைப் போல வெற்றிலைச் சாகுபடிக்கும் கடன் உதவி வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதோடு தேர்தலுக்கு முன்பாகத் திமுக அளித்த வெற்றி ஆராய்ச்சி நிலைய வாக்குறுதி தற்போது வரை நிறைவேற்றப்படாத நிலையில், அதனை உடனடியாக நிறைவேற்ற முன்வர வேண்டும் எனவும் காவிரிக்கரை வெற்றிலை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: tn agricultureFarmers in agony: Betel farming heading for extinctionவேதனையில் வாடும் விவசாயிகள்வெற்றிலை விவசாயம்
ShareTweetSendShare
Previous Post

சீர்காழி அருகே 72 வயதில் டிப்ளமோ படிக்கும் முதியவர்!

Next Post

சாதனைக்கு உயரம் தடையில்லை : செயல்பாடுகளால் உச்சம் தொட்ட பெண் அதிகாரி!

Related News

78,000 கோடி நிதி எங்கு சென்றது : முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – அண்ணாமலை

தாம்பரம் – செங்கல்பட்டு 4-வது ரயில் வழித்தடத்திற்கு ஒப்புதல் – நயினார் நாகேந்திரன் நன்றி!

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவில் தங்கப்பட்டு சரிகையை யாக குண்டத்தில் இட்டு வழிபாடு!

திராவிட மாடல் ஆட்சிக்கு தீபாவளி மதுபான விற்பனை சாதனை – ஹெச்.ராஜா விமர்சனம்!

பட்டுக்கோட்டை அருகே 100 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்!

நுரை பொங்கி காட்சியளித்த சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை!

Load More

அண்மைச் செய்திகள்

பட்டாசு வெடிக்க செய்து, சிலம்பம் சுற்றிய இளைஞர்!

கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ நடனமாடிய வீடியோ வைரல்!

AWS சர்வர் பாதிப்பால் சூடான ஸ்மார்ட் மெத்தைகள்!

யமுனை நதியில் மிதக்கும் நுரைகளை அகற்றும் பணி தீவிரம்!

ஆந்திரா : சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நபர் தற்கொலை!

நவீன கடல் டிரோன்களை வெளியிட்டுள்ள உக்ரைன்!

சிவகங்கை : டிராவல்ஸ் உரிமையாளர் வெட்டி கொலை – 3 பேர் கைது!

கோவை : குப்பை வாகனங்களை சுடுகாட்டில் நிறுத்த வற்புறுத்தல் – வாகன ஓட்டுனர்கள் போராட்டம்!

இலங்கையில் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர சுட்டுக்கொலை!

மங்கோலியா : 13,500ஐ கடந்த தட்டம்மையால் பாதித்தவர்கள் எண்ணிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies