வேதனையில் வாடும் விவசாயிகள் : அழிவை நோக்கி வெற்றிலை விவசாயம்!
Jan 14, 2026, 01:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேதனையில் வாடும் விவசாயிகள் : அழிவை நோக்கி வெற்றிலை விவசாயம்!

Murugesan M by Murugesan M
Sep 2, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல்லில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகத் திமுக வழங்கிய வாக்குறுதி தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை என வெற்றிலை விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அழிவை நோக்கி நகரும் வெற்றிலை விவசாயத்தைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சிறப்புத் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல் அடுத்த பரமத்திவேலூர், பொன்மலர் பாளையம், வெங்கரை, பாண்டமங்கலம், குப்பிச்சிபாளையம் உள்ளிட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் வெற்றிலைச் சாகுபடி நடைபெற்று வருகிறது.

வெற்றிலைச் சாகுபடியில் ஈடுபட்டும் வரும் விவசாயிகளில் 90 சதவிகிதம் பேர் குத்தகை நிலத்திலேயே சாகுபடி செய்து வரும் நிலையில், இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரும்பாலான விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் திகழும் இந்த வெற்றிலை விவசாயத்தை மேம்படுத்தவோ, விவசாயிகளுக்கு உதவவோ தமிழக அரசு எந்ததிட்டத்தையும் அறிவிக்கவில்லை என்பது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் தமிழகத்திலிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்காக வெற்றிலை அனுப்பப்பட்ட நிலையும், படிப்படியாகக் குறைந்து வருவதால் விவசாயிகளின் வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் கடந்தும் நிறைவேற்றாமல் இருப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதிக மருத்துவக் குணம் கொண்ட வெற்றிலையில் இருந்து மருந்துகளைத் தயாரிக்க முன்வரவேண்டும் என்பதோடு, அழியும் தருவாயில் உள்ள வெற்றிலை விவசாயத்தைப் பாதுகாக்க மற்ற சாகுபடிக்கு வழங்கப்படுவதைப் போல வெற்றிலைச் சாகுபடிக்கும் கடன் உதவி வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதோடு தேர்தலுக்கு முன்பாகத் திமுக அளித்த வெற்றி ஆராய்ச்சி நிலைய வாக்குறுதி தற்போது வரை நிறைவேற்றப்படாத நிலையில், அதனை உடனடியாக நிறைவேற்ற முன்வர வேண்டும் எனவும் காவிரிக்கரை வெற்றிலை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: tn agricultureFarmers in agony: Betel farming heading for extinctionவேதனையில் வாடும் விவசாயிகள்வெற்றிலை விவசாயம்
ShareTweetSendShare
Previous Post

சீர்காழி அருகே 72 வயதில் டிப்ளமோ படிக்கும் முதியவர்!

Next Post

சாதனைக்கு உயரம் தடையில்லை : செயல்பாடுகளால் உச்சம் தொட்ட பெண் அதிகாரி!

Related News

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

Load More

அண்மைச் செய்திகள்

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies