சாதனைக்கு உயரம் தடையில்லை : செயல்பாடுகளால் உச்சம் தொட்ட பெண் அதிகாரி!
Jul 29, 2026, 05:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சாதனைக்கு உயரம் தடையில்லை : செயல்பாடுகளால் உச்சம் தொட்ட பெண் அதிகாரி!

Murugesan M by Murugesan M
Sep 2, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜஸ்தான் மாநிலத்தில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், தனது திறமையால் பல்வேறு உச்சங்களைத் தொட்டு வருகிறார். மேலும், பலருக்கு முன்மாதிரியாகவும் இருந்து வருகிறார். யார் அவர்? இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

ஒருவரின் வெளித்தோற்றத்தைக் கொண்டு அவரின் திறமையை எடைபோடும் தவறான அணுகுமுறை உலகம் முழுவதுமே இருந்து வருகிறது. நிறத்தைக் கொண்டு, உருவத்தைக் கொண்டு, உடையைக் கொண்டு, குடும்ப பின்னணியைக் கொண்டு ஒருவரை மதிப்பிட முயல்வது எப்போதும் தவறாகதான் முடியும்.

இதனை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார், ஆர்த்தி டோக்ரா ஐஏஎஸ். வெறும் 3.2 அடி உயரம் மட்டுமே கொண்ட இவர், தனது துறையில் எட்டி பிடிக்காத உயரங்களே இல்லை. உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூனில் பிறந்த இவர், மிகவும் புகழ்பெற்ற வெல்ஹாம் பெண்கள் பள்ளியில் பயின்றார்.

தந்தை ராணுவத்தில் பணியாற்றியதாலும், தாய் பள்ளி முதல்வராக இருந்ததாலும் ஆர்த்தி டோக்ராவைச் சிறு வயதுமுதலே துணிச்சலான பெண்ணாக வளர்த்தனர். உயரம் குறைவாக உள்ளதால் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையையும் நீக்கினர்.

பள்ளி படிப்பைத் தொடர்ந்து டெல்லியில் பொருளாதாரப் பட்டம் பெற்ற ஆர்த்தி டோக்ரா, இந்தியாவின் கடினமான தேர்வுகளில் ஒன்றான சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத முடிவெடுத்தார். அவரது உயரத்தைக் கொண்டு பலர் அவரைச் சாதாரணமாகத்தான் எடைப் போட்டார்கள். இருப்பினும் முழுமூச்சாகப் படித்த அவர் முதல் முயற்சியிலேயே, ஐஏஎஸ் அதிகாரியாகத் தேர்வானார்.

தான் பணியாற்றிய மாவட்டங்களில் எல்லாம் முன்மாதிரியான பல திட்டங்களை அவர்  கொண்டு வந்தார். குறிப்பாக, திறந்தவெளியில் மலம் கழிப்பதைத் தடுக்கும் வகையில் ஆஜ்மீரில் அவர்  கொண்டு வந்த “புக்கா டாய்லெட்” திட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. நேபாளம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் பிரதிநிதிகள் வந்து அந்தத் திட்டம் குறித்து அறிந்து சென்றனர்.

ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலின்போது அஜ்மீர் மாவட்ட தேர்தல் ஆணையராகச் சிறப்பாக செயல்பட்டதற்காக, கடந்த 2019ம் ஆண்டு குடியரசுத் தலைவரிடம் இருந்து தேசிய விருதையும் அவர்  பெற்றார். மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்காக அவர்  தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்.

இப்படி, தனது சாதனைகளால் பலருக்கு அவர் ரோல்மாடலாக விளங்கி வருகிறார் . மேலும், உயரத்தைக் காரணம் காட்டி விமர்சித்தவர்களும் நிமிர்ந்து பார்க்கும் அளவுக்கும் உயர்ந்துள்ளார் ஆர்த்தி டோக்ரா.

Tags: ஆர்த்தி டோக்ரா ஐஏஎஸ்iasராஜஸ்தான்Height is no barrier to achievement: A female officer who has reached the pinnacle through her activitiesபெண் அதிகாரிஆர்த்தி டோக்ரா
ShareTweetSendShare
Previous Post

வேதனையில் வாடும் விவசாயிகள் : அழிவை நோக்கி வெற்றிலை விவசாயம்!

Next Post

நாட்டில் உள்ள அனைத்து தாய்மார்களையும் காங்கிரஸ், ஆர்ஜேடி அவமதித்துவிட்டனர் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More

அண்மைச் செய்திகள்

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies