சீனாவின் ரகசிய திட்டம் - முளையிலேயே கிள்ளி எறிந்த இந்தியா!
Jan 14, 2026, 09:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சீனாவின் ரகசிய திட்டம் – முளையிலேயே கிள்ளி எறிந்த இந்தியா!

Murugesan M by Murugesan M
Sep 2, 2025, 09:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான கூட்டமைப்பாக ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை உருவாக்கும் சீனாவின் முயற்சிக்கு இந்தியா தடையாக இருக்கிறது. அதற்கான காரணம் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் மாநாட்டில் இந்தியா ஏற்படுத்திய தாக்கம் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. ரஷ்யாவும் சீனாவும் இந்தியாவுக்குக் கொடுத்த முக்கியத்துவமே அதற்குக் காரணம். விளாடிமிர்ப் புதினும், ஸி ஜின்பிங்கும் பிரதமர் மோடியுடன் காட்டிய நெருக்கம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

என்னதான் நண்பராக இருந்தாலும் சீனாவின் சில செயல்களுக்கு இந்தியா ஆதரவு கொடுப்பதில்லை. அதில் ஒன்றுதான் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சி. ஷாங்காய் மற்றும் பிரிக்ஸ் அமைப்புகளை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு எதிராகத் திருப்ப நினைக்கிறது சீனா.

ஒத்த சிந்தனைகொண்ட ரஷ்யா, வடகொரியா, ஈரான் உள்ளிட்ட தேசங்களைத் தங்களது லாபத்துக்காகப் பயன்படுத்த சீனா முயல்கிறது. ஆனால் மேற்கத்திய நாடுகள் அங்கம் வகிக்காத அமைப்புகளை அவற்றுக்கு எதிராகத் திருப்ப இந்தியா ஒப்புக்கொள்ளவில்லை.

ஷாங்காய் மற்றும் பிரிக்ஸைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டால் அவற்றை மேற்கத்திய நாடுகளுக்கு எதிராகக் களமிறக்கலாம் என்று சீனா திட்டம் போடுகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் இந்தியாவின் பார்வை வேறாக இருக்கிறது.

பிரிக்ஸ் நாடுகளுக்குக் கூடுதல் வரி விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தபோதும் இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அதேபோல் டாலருக்குப் போட்டியாக BRICS CURRENCY-ஐ கொண்டுவரும் எண்ணமும் இல்லை என்பதை இந்தியா தெளிவுப்படுத்திவிட்டது.

உலக அளவிலும் ஆசிய கண்டத்திலும் மிகவும் வலிமை வாய்ந்த நாடாக இருக்கும் இந்தியா ஷாங்காய், பிரிக்ஸ் மற்றும் குவாட் உள்ளிட்ட அமைப்புகளில் சீனாவின் ஆதிக்கத்துக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. தெற்குலகத் தேசங்களை மேம்படுத்துவது மட்டுமே இந்தியாவின் குறிக்கோள்.

அதற்கு மாறாகச் சீனா செயல்படுமேயானால் மேற்குக்கும் தெற்குக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்தும் பாலமாக இந்தியா விளங்கும் என்கிறார்கள் புவிசார் அரசியல் வல்லுநர்கள். தொழில்நுட்பத்திலும் பொருளாதாரத்திலும் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா கூடிய விரைவில் வல்லரசாக மாறிவிடும் என்பதால் அதற்கு முன்பே துண்டுபோட்டு இடம்பிடிக்கப் பார்க்கிறது சீனா. ஆனால் அது நடக்கப்போவதில்லை.

Tags: Indiatoday newschina newsChina's secret plan - India nipped it in the budசீனாவின் ரகசிய திட்டம்
ShareTweetSendShare
Previous Post

செமிகண்டக்டர் துறையில் சாதனை : உள்நாட்டில் தயாரித்த முதல் 32 BIT CHIP!

Next Post

சீன உர இறக்குமதியை குறைக்க திட்டம் : மேக் இன் இந்தியாவில் புதிய புரட்சி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies