அமெரிக்காவிற்கு போர் எச்சரிக்கை? : படைபலத்தை பறைசாற்றிய சீன ராணுவ அணிவகுப்பு!
Jan 14, 2026, 04:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அமெரிக்காவிற்கு போர் எச்சரிக்கை? : படைபலத்தை பறைசாற்றிய சீன ராணுவ அணிவகுப்பு!

Murugesan M by Murugesan M
Sep 3, 2025, 08:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இரண்டாம் உலகப்போர் வெற்றியின் 80-ஆண்டு நிறைவையொட்டி சீனாவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில், நூற்றுக்கணக்கான போர் விமானங்கள், பீரங்கிகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுஆயுத ஏவுகணைகள் உள்ளிட்ட பேரழிவு ஆயுதங்கள் இடம்பெற்றிருந்தன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ரஷ்யாவும், அமெரிக்காவும் தங்கள் சொந்த இராணுவ அணிவகுப்புகளை நடத்தின. ரஷ்யாவின் இராணுவ அணிவகுப்பு பாரம்பரிய சடங்காகவே நடந்தது. அதே போல இந்த ஆண்டு நடந்த அமெரிக்காவின் இராணுவ அணிவகுப்பு அதிபர் ட்ரம்பின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகவே அமைந்திருந்தது.

ஆனால், சீனாவின் இராணுவ அணிவகுப்பு, அந்நாட்டின் இராணுவ வலிமையை,அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்குப் பறை  சாற்றுவதாகவே அமைந்திருந்தது. 2012-ல் சீன அதிபராகப் பொறுப்பேற்றதிலிருந்து, ஜி ஜின்பிங் தியான்மென் சதுக்கத்தில் இராணுவ அணிவகுப்பை மேற்பார்வையிடுவது இது மூன்றாவது முறையாகும்.

இந்த ஆண்டு, மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இராணுவ அணிவகுப்பில், தியான்மென் சதுக்கத்தின் வழியாக, சீன ராணுவத்தின் 45 பிரிவுகளின் ராணுவ வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சீருடையில் அணிவகுத்துச் சென்றனர்.

ரஷ்ய அதிபர்  புதின், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்கள் பங்கேற்ற இவ்விழாவில், சுமார் 50,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். இரண்டாம் உலகப் போரில் சீன வெற்றியின் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 80,000 புறாக்கள் மற்றும் 80,000 பல வண்ண பலூன்கள் பறக்க விடப்பட்டன.

இந்த இராணுவ அணிவகுப்பில் சீனாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுசக்தி ஏவுகணை DF-5C இடம் பெற்றிருந்தது. 13,000 கிலோமீட்டர் வரைச் சென்று தாக்கக் கூடிய இந்த ஏவுகணை, இரண்டு அணு ஆயுதங்களை வெவ்வேறு இலக்குகளுக்கு ஒரே சமயத்தில் சுமந்து செல்லும் திறன் கொண்டதாகும்.

சீனாவில் இருந்தபடியே அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளைத் தாக்க முடியும். மேலும், இந்த ஏவுகணை, இரண்டாம் உலகப் போரில், ஜப்பான் மீது அமெரிக்கா பயன்படுத்திய அணுகுண்டைக் காட்டிலும் 200 மடங்கு வீரியமும் ஆற்றலும் கொண்டதாகும். தற்போது சீனாவிடம் 600 அணு ஆயுதங்கள் உள்ளன. வரும் 2030-க்குள் மேலும் 400 அணு ஆயுதங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.

அணிவகுப்பில் இடம்பெற்ற இன்னொரு ஆயுதம், இரட்டை-திறன் கொண்ட இடைநிலை-தூர பாலிஸ்டிக் ஏவுகணை DF-26 ஆகும். இது எட்டு சக்கரச் சாலை மொபைல் லாஞ்சரிலிருந்து செலுத்த கூடிய வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.

சுமார் 5,000-கிலோமீட்டர்  தூரம் வரைச் சென்று தாக்கக் கூடிய DF-26 ஏவுகணையால், குவாம் மற்றும் வடகிழக்கு ஆசியாவில் உள்ள முக்கியமான அமெரிக்கத் தளங்களையும், ரஷ்யாவின் பெரிய பகுதிகள் மற்றும் முழு இந்தியாவையும் குறிவைத்துத் தாக்க முடியும்.

குறிப்பாக, அமெரிக்காவின் ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளான பேட்ரியாட், THAAD மற்றும் Aegis போன்ற தற்காப்பு அமைப்புகளைத் தடுக்கச் சீனாவின் சக்தி மிக்க ஆயுதமாகும். ஏழு படைப்பிரிவுகளில் 250 DF-26 ஏவுகணைகளைச் சீனா வைத்துள்ளது.

Transporter-Erector-Launcher என அழைக்கப்படும், DF-61 என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய சாலை-மொபைல் ஏவுகணையையும் சீனா காட்சிப் படுத்தியுள்ளது. ஏற்கெனவே சீனா உருவாக்கிய DF-41 அணுசக்தி தடுப்பு ஆயுதக் களஞ்சியத்தின் மேம்பட்ட ஆயுதமாக இந்த ஏவுகணைப் பார்க்கப் படுகிறது. DF-61 ஏவுகணைச் சுமார் 15,000 கிலோமீட்டர்  தூரம் வரைச் சென்று தாக்கக் கூடியதாகும்.

சீனாவின் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையான YJ-17, YJ-19, மற்றும் YJ-20 ஆகிய அதிநவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளும் இந்த அணிவகுப்பில் இடம் பெற்றிருந்தன. இவை இந்திய பசிபிக் பகுதியில் சீனாவின் ஆளுமையை  காட்டுகிறது. மேலும், இரண்டு நீர்மூழ்கி ட்ரோன்களும் காட்சிப்படுத்தப்பட்டன.

உலகம் ரோபோ நாய்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் வேளையில், சீன இராணுவ அணிவகுப்பில் ‘ரோபோ ஓநாய்கள்’ இடம்பெற்று உலகையே ஆச்சரியப்படுத்தியது. ‘ரோபோ ஓநாய்கள்’ உளவு பார்க்கும் – வீரர்களுக்கு ஆயுதங்களை எடுத்துக் கொடுக்கும்- இலக்குகளுக்கு எதிராகத் துல்லியமான தாக்குதல்கள் நடத்தும்.

இது நவீனகால போர்க் களத்தில் போர் வீரர்களின் உயிரிழப்புகளைக் குறைக்க ஆபத்தான சூழ்நிலைகளில் இந்த ‘ரோபோ ஓநாய்கள்’ பயன்படும் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்காவின் உயர் மொபிலிட்டி பீரங்கி ராக்கெட் அமைப்புக்குச் சவால் விடும் வகையில் சீனா உருவாக்கியுள்ள PHL-16 என்ற modular launch சிஸ்டம் இராணுவ அணிவகுப்பில் இடம்பெற்றிருந்தது.

இதில், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் பல்வேறு மேம்பட்ட பெரிய அளவிலான ராக்கெட்டுகளை ஏவ முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் முதல் ஐந்தாம் தலைமுறைப் போர் விமானமான J-20 மற்றும் 99B பீரங்கிகள் உள்ளிட்ட போன்ற பிற ராணுவ தளவாடங்களும் இந்த அணிவகுப்பில் இடம் பெற்றிருந்தது.

2027ம் ஆண்டு மக்கள் விடுதலை ராணுவத்தின் நூற்றாண்டு விழாவை  சீனா கொண்டாட உள்ளது. அதற்கு முன்னதாக, பென்டகனை விட 10 மடங்கு பெரியதான ராணுவ கட்டளை மையத்தை “பெய்ஜிங் இராணுவ நகரம்” என்ற பெயரில் சீனா உருவாக்கி வருகிறது.

தற்போது நடந்த சீன இராணுவ அணிவகுப்பு, அமெரிக்காவுக்கு ஒரு உறுதியான போர் எச்சரிக்கை என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Tags: இரண்டாம் உலகப்போர்china armyராணுவ அணிவகுப்புWar warning to America?: Chinese military parade shows off military mightஅமெரிக்காவிற்கு போர் எச்சரிக்கை?சீன ராணுவ அணிவகுப்பு
ShareTweetSendShare
Previous Post

இந்தோனேஷிய எம்பிகளுக்கு ஊதிய உயர்வால் வெடித்த கலவரம் : சொத்துக்கள் சூறை – அதிர்ச்சியில் அதிபர்!

Next Post

பாக். பிரதமருக்கு குடைச்சல் கொடுக்கும் ஹெட்செட் : மீம்ஸ் போட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

Related News

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

Load More

அண்மைச் செய்திகள்

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies