இந்தோனேஷிய எம்பிகளுக்கு ஊதிய உயர்வால் வெடித்த கலவரம் : சொத்துக்கள் சூறை - அதிர்ச்சியில் அதிபர்!
Sep 13, 2026, 01:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

இந்தோனேஷிய எம்பிகளுக்கு ஊதிய உயர்வால் வெடித்த கலவரம் : சொத்துக்கள் சூறை – அதிர்ச்சியில் அதிபர்!

Murugesan M by Murugesan M
Sep 3, 2025, 08:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தோனேஷியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பள உயர்வு அந்நாட்டு மக்களைக் கொதித்தெழ செய்துள்ளது. தலைநகர் ஜகார்தாவைத் தாண்டி பல்வேறு இடங்களிலும் பரவிய போராட்டம், அதிபர்ப் பிரபோவோ சுபியாண்டோவின் பதவிக்கே வேட்டு வைப்பதாக மாறியுள்ளது. என்ன காரணம்… விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித் தொகுப்பில்..!

இந்தோனேஷியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அண்மையில் சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டது. எப்போதும் வழங்கப்படும் ஊதியத்தோடு, மாதாந்திர வீட்டு வாடகைப் படியாக 50 மில்லியன் ரூபியா… அதாவது மூவாயிரத்து 75 டாலர்கள் கூடுதலாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இது அந்நாட்டு மக்களைக் கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. இந்தோனேஷியாவில் தனிநபர் ஒருவரின் குறைந்தபட்ச வருமானத்தை விட பத்து மடங்கு கூடுதலாக வீட்டு வாடகைப் படி அறிவிக்கப்பட்டதே இதற்குக் காரணம்… உரிய வேலைவாய்ப்பு இல்லாமல் அன்றாட வாழ்க்கைக்கே தவித்து வரும்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தப் பணப்பலன் தேவைதானா என மக்கள் வீதியில் இறங்கிப் போராட, பின்னர் அது கலவரமாக மாறியது. போராட்டக்காரர்களும் போலீசாரும் மாறி மாறி தாக்கிக்கொள்ள, ஜகார்தாவே ரணகளமானது

ஏற்கனவே அதிபர் சுபியாண்டோவின் அரசாங்கம் மீது போராட்டக்காரர்கள் கடும் கோபத்தில் இருக்க, உணவு டெலிவரி ஊழியரின் மரணம் அவர்களை மேலும் கொதிப்படைச் செய்தது. 21 வயதான அஃபன் குர்னியவான் என்ற இளைஞர் கண்டன பேரணியில் பங்கேற்ற போது போலீசாரின் வாகனம் ஏறியதில் உயிரிழந்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த போது, போலீசார் திட்டமிட்டு இந்தக் கொலை சம்பவத்தை அரங்கேற்றியதாகக் குற்றம்சாட்டினர். இது ஊடகங்களில் மீண்டும் மீண்டும் ஒளிப்பரப்பட, ஒட்டுமொத்த போராட்டகாரர்களும் உணர்ச்சியில் பொங்கினர். எதிர்ப்பு குரல் எழுப்பினால் கொலை செய்வீர்களா என ஆவேசமான போராட்டக்காரர்கள், மாகாணங்களில் உள்ள நாடாளுமன்ற கட்டடங்களுக்குத் தீ வைத்தனர்.

தலைநகர் ஜகார்தாவை தாண்டி, சுலவெஷி, யோக்யா கர்தா உள்ளிட்ட நகரங்களிலும் போராட்டம் பரவ, என்ன செய்வதென்று தெரியாமல் சுபியாண்டோவின் அரசாங்கம் விழிபிதுங்கியது. சுலவேஷியில் ஏற்பட்ட கலவரத்தில் 3 பேரும், யோக்யா கர்தா கலவரத்தில் 7 பேரும் பலியானதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டது.

கலவரக்காரர்கள் ஆயிரத்து 240 பேர் கைது செய்யப்பட்டதாக அறிவித்த காவல்துறை, 55 பில்லியன் ரூபியா அளவுக்கு பொது சொத்துகள் சேதம் அடைந்திருப்பதாகத் தெரிவித்தது.

இதனிடையே காயம் அடைந்த போலீசாரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அதிபர் சுபியாண்டோ, இந்தோனேஷியாவின் வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் விஷமிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக கண்டனம் தெரிவித்தார். இளைஞர்  குர்னியவானின் மரணத்திற்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என உறுதியளித்த சுபியாண்டோ, 7 காவல் அதிகாரிகள் மீது விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

நாளுக்கு நாள் போராட்டத்தின் தன்மைத் தீவிரமடைந்ததை உணர்ந்த அதிபர்  சுபியாண்டோ, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பள உயர்வை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளார். இந்த அறிவிப்பால் கலவரம் சற்று தணியும் என எதிர்பார்க்கப்பட்டாலும், அதிபர்  சுபியாண்டோவுக்கு உள்நாட்டில் பயங்கர எதிர்ப்பு கிளம்பியிருப்பது இந்தப் போராட்டம் மூலம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

Tags: Riots erupt over salary hike for Indonesian MPs: Property looted - President in shockஇந்தோனேஷிய எம்பிகளுக்கு ஊதிய உயர்வால் வெடித்த கலவரம்
Share
Tweet
SendShare
Previous Post

அம்பலமான மாநகராட்சியின் பொய் : பறிபோன பெண்ணின் உயிர் – நிர்கதியான குடும்பம்!

Next Post

அமெரிக்காவிற்கு போர் எச்சரிக்கை? : படைபலத்தை பறைசாற்றிய சீன ராணுவ அணிவகுப்பு!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies