அம்பலமான மாநகராட்சியின் பொய் : பறிபோன பெண்ணின் உயிர் - நிர்கதியான குடும்பம்!
Jun 14, 2026, 02:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அம்பலமான மாநகராட்சியின் பொய் : பறிபோன பெண்ணின் உயிர் – நிர்கதியான குடும்பம்!

Murugesan M by Murugesan M
Sep 3, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை  சூளைமேடு அருகே முறையாக மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகால் கால்வாயில் விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் நடைபெற்ற உயிரிழப்புக்குப் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது.

சென்னை  சூளைமேடு வீரபாண்டி நகரில் முறையாக மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் ஒருவர் விழுந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

மழைநீர் வடிகாலுக்காகத் தோண்டப்படும் பள்ளங்களை முறையாக மூடுவதில்லை எனவும், பணிகள் நடைபெறுவதற்கான எச்சரிக்கைப் பலகைகள் கூட வைக்கப்படாததே தமது மகளின் உயிரிழப்புக்குக் காரணம் என உயிரிழந்த திபாவின் தாய் குற்றம் சாட்டியுள்ளார்.

முறையாக மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகாலில் விழுந்து ஏற்பட்ட உயிரிழப்பை மறைக்க, தீபா கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பரப்பிய உண்மைக்குப் புரம்பான தகவல் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

கணவர் இல்லாமல் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டு வேலை செய்து தனது குடும்பத்தைக் கவனித்து வந்த தீபா உயிரிழந்த நிலையில் குடும்பத்தினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

சூளைமேடு பகுதி மட்டுமல்லாமல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் எனும் பெயரில் தோண்டப்படும் பள்ளங்கள் மூடப்படாமலே கிடக்கின்றன. அதிலும் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்கும் பள்ளங்களில் சிக்கி அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி நிர்வாக்த்திடம் பலமுறைப் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் புகார்த் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் பருவமழை தொடங்கும் முன் 95 சதவிகிதம் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துவிட்டதாகச் சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்து வரும் நிலையில், திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்தும் பணிகள் நீடிப்பதோடு, அதற்காக ஒதுக்கப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி என்ன ஆனது என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முழுக்க முழுக்கச் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் நடைபெற்ற உயிரிழப்புக்கு உரிய நிவாரண நிதியை வழங்குவதோடு, சென்னை மாநகராட்சி முழுவதும் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பரவலாக எழுந்துள்ளது.

Tags: today newsThe Corporation's lies exposed: A woman's life lost - a family devastatedஅம்பலமான மாநகராட்சியின் பொய்
ShareTweetSendShare
Previous Post

அனைவருக்கும் ஐஐடி திட்டம் : அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நனவாகிய கனவு!

Next Post

இந்தோனேஷிய எம்பிகளுக்கு ஊதிய உயர்வால் வெடித்த கலவரம் : சொத்துக்கள் சூறை – அதிர்ச்சியில் அதிபர்!

Related News

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies