கரும்பு சர்க்கரைக்கு வரவேற்பு : கலப்பட விற்பனையை தடுக்க கோரிக்கை!
Mar 15, 2026, 04:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கரும்பு சர்க்கரைக்கு வரவேற்பு : கலப்பட விற்பனையை தடுக்க கோரிக்கை!

Murugesan M by Murugesan M
Sep 3, 2025, 06:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொள்ளாச்சியில் தயாரிக்கப்படும் கரும்புச் சர்க்கரை எனும் நாட்டுச் சர்க்கரைக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறைவான லாபத்தில் நடைபெற்று வரும் கரும்புச் சர்க்கரை விற்பனையை அதிகரிக்க அரசு மானியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் பொதுமக்கள் பலரும் தங்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு ஆரோக்கியமான உணவு முறையை நாடத் தொடங்கியுள்ளனர். வெள்ளைச் சர்க்கரையைத் தவிர்த்துவிட்டு கரும்புச்சர்க்கரை எனும் நாட்டுச் சர்க்கரையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எலும்புகளை உறுதிபடுத்தவும், ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் என்பதால் தமிழக மக்கள் மத்தியில் கரும்புச் சர்க்கரை நல்ல வரவேற்பைப் பெறத் தொடங்கியுள்ளது.

பொள்ளாச்சி பகுதியில் செயல்பட்டு வரும் கரும்பு சர்க்கரை ஆலைகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் கரும்புகளில் இருந்து நாட்டுச் சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகின்றன. எந்தவித ரசாயனமும் இல்லாமல் கண்முன்னே தயாரிக்கப்படும் கரும்புச் சர்க்கரையைத் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

வெள்ளைச் சர்க்கரையில் தயாரிக்கப்படும் பெரும்பாலான உணவுப் பொருட்கள் தற்போது கரும்புச் சர்க்கரையிலும் தயாரிக்கப்படுவதால், ஆரோக்கிய விரும்பிகளின் அன்றாட உணவுப் பட்டியலில் கரும்புச்சர்க்கரைத் திண்பண்டங்கள் தவிர்க்க முடியாத உணவாக மாறியுள்ளது. கேரளத்தில் ஓணம் பண்டிகைக்கான கொண்டாட்டம் களைகட்ட தொடங்கியுள்ள நிலையில் அங்கிருந்து ஏராளமான பொதுமக்கள் பொள்ளாச்சிக்கு வருகைப் புரிந்து கரும்புச் சர்க்கரையை வாங்கிச் செல்கின்றனர்.

பக்குவமாகப் பார்த்து பார்த்துத் தயாரிக்கப்படும் கரும்புச் சர்க்கரைக்கு இணையாக, கலப்பட கரும்புச் சர்க்கரையின் விற்பனையும் நடைபெறுவதாகப் புகார் எழுந்துள்ளது. அதே நேரத்தில் கரும்பு சர்க்கரைக்கான பக்குவப்படுத்துதல், சந்தைப்படுத்துதல், வேலை ஆட்கள் ஊதியம் எனப் பல்வேறு செலவுகளுடன் தயாரிக்கப்படும் கரும்புச் சர்க்கரைக்கான விலைக் குறைவாக இருப்பதால் அதனையே நம்பியிருக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

குறைந்த லாபம் கிடைத்தாலும் அடுத்த தலைமுறைக்கு ஆரோக்கியமான உணவை வழங்குகிறோம் என்ற மனநிறைவோடு பணியாற்றும் கரும்பு சர்க்கரைத் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு மானியம் வழங்க அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கைப் பரவலாக எழுந்துள்ளது.

Tags: பொள்ளாச்சிWelcome to cane sugar: Request to prevent adulterated salesகரும்பு சர்க்கரைநாட்டு சர்க்கரை
ShareTweetSendShare
Previous Post

சமூக நீதி என அநீதி இழைக்கிறது திமுக அரசு : அண்ணாமலை

Next Post

ஒன்றிணையும் அதிமுக? : கதிகலங்கும் திமுக!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies