கரும்பு சர்க்கரைக்கு வரவேற்பு : கலப்பட விற்பனையை தடுக்க கோரிக்கை!
Sep 12, 2026, 09:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கரும்பு சர்க்கரைக்கு வரவேற்பு : கலப்பட விற்பனையை தடுக்க கோரிக்கை!

Murugesan M by Murugesan M
Sep 3, 2025, 06:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பொள்ளாச்சியில் தயாரிக்கப்படும் கரும்புச் சர்க்கரை எனும் நாட்டுச் சர்க்கரைக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறைவான லாபத்தில் நடைபெற்று வரும் கரும்புச் சர்க்கரை விற்பனையை அதிகரிக்க அரசு மானியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் பொதுமக்கள் பலரும் தங்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு ஆரோக்கியமான உணவு முறையை நாடத் தொடங்கியுள்ளனர். வெள்ளைச் சர்க்கரையைத் தவிர்த்துவிட்டு கரும்புச்சர்க்கரை எனும் நாட்டுச் சர்க்கரையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எலும்புகளை உறுதிபடுத்தவும், ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் என்பதால் தமிழக மக்கள் மத்தியில் கரும்புச் சர்க்கரை நல்ல வரவேற்பைப் பெறத் தொடங்கியுள்ளது.

பொள்ளாச்சி பகுதியில் செயல்பட்டு வரும் கரும்பு சர்க்கரை ஆலைகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் கரும்புகளில் இருந்து நாட்டுச் சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகின்றன. எந்தவித ரசாயனமும் இல்லாமல் கண்முன்னே தயாரிக்கப்படும் கரும்புச் சர்க்கரையைத் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

வெள்ளைச் சர்க்கரையில் தயாரிக்கப்படும் பெரும்பாலான உணவுப் பொருட்கள் தற்போது கரும்புச் சர்க்கரையிலும் தயாரிக்கப்படுவதால், ஆரோக்கிய விரும்பிகளின் அன்றாட உணவுப் பட்டியலில் கரும்புச்சர்க்கரைத் திண்பண்டங்கள் தவிர்க்க முடியாத உணவாக மாறியுள்ளது. கேரளத்தில் ஓணம் பண்டிகைக்கான கொண்டாட்டம் களைகட்ட தொடங்கியுள்ள நிலையில் அங்கிருந்து ஏராளமான பொதுமக்கள் பொள்ளாச்சிக்கு வருகைப் புரிந்து கரும்புச் சர்க்கரையை வாங்கிச் செல்கின்றனர்.

பக்குவமாகப் பார்த்து பார்த்துத் தயாரிக்கப்படும் கரும்புச் சர்க்கரைக்கு இணையாக, கலப்பட கரும்புச் சர்க்கரையின் விற்பனையும் நடைபெறுவதாகப் புகார் எழுந்துள்ளது. அதே நேரத்தில் கரும்பு சர்க்கரைக்கான பக்குவப்படுத்துதல், சந்தைப்படுத்துதல், வேலை ஆட்கள் ஊதியம் எனப் பல்வேறு செலவுகளுடன் தயாரிக்கப்படும் கரும்புச் சர்க்கரைக்கான விலைக் குறைவாக இருப்பதால் அதனையே நம்பியிருக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

குறைந்த லாபம் கிடைத்தாலும் அடுத்த தலைமுறைக்கு ஆரோக்கியமான உணவை வழங்குகிறோம் என்ற மனநிறைவோடு பணியாற்றும் கரும்பு சர்க்கரைத் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு மானியம் வழங்க அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கைப் பரவலாக எழுந்துள்ளது.

Tags: பொள்ளாச்சிWelcome to cane sugar: Request to prevent adulterated salesகரும்பு சர்க்கரைநாட்டு சர்க்கரை
Share
Tweet
SendShare
Previous Post

சமூக நீதி என அநீதி இழைக்கிறது திமுக அரசு : அண்ணாமலை

Next Post

ஒன்றிணையும் அதிமுக? : கதிகலங்கும் திமுக!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies