இந்தோனேஷிய எம்பிகளுக்கு ஊதிய உயர்வால் வெடித்த கலவரம் : சொத்துக்கள் சூறை - அதிர்ச்சியில் அதிபர்!
Mar 15, 2026, 05:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

இந்தோனேஷிய எம்பிகளுக்கு ஊதிய உயர்வால் வெடித்த கலவரம் : சொத்துக்கள் சூறை – அதிர்ச்சியில் அதிபர்!

Murugesan M by Murugesan M
Sep 3, 2025, 08:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தோனேஷியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பள உயர்வு அந்நாட்டு மக்களைக் கொதித்தெழ செய்துள்ளது. தலைநகர் ஜகார்தாவைத் தாண்டி பல்வேறு இடங்களிலும் பரவிய போராட்டம், அதிபர்ப் பிரபோவோ சுபியாண்டோவின் பதவிக்கே வேட்டு வைப்பதாக மாறியுள்ளது. என்ன காரணம்… விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித் தொகுப்பில்..!

இந்தோனேஷியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அண்மையில் சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டது. எப்போதும் வழங்கப்படும் ஊதியத்தோடு, மாதாந்திர வீட்டு வாடகைப் படியாக 50 மில்லியன் ரூபியா… அதாவது மூவாயிரத்து 75 டாலர்கள் கூடுதலாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இது அந்நாட்டு மக்களைக் கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. இந்தோனேஷியாவில் தனிநபர் ஒருவரின் குறைந்தபட்ச வருமானத்தை விட பத்து மடங்கு கூடுதலாக வீட்டு வாடகைப் படி அறிவிக்கப்பட்டதே இதற்குக் காரணம்… உரிய வேலைவாய்ப்பு இல்லாமல் அன்றாட வாழ்க்கைக்கே தவித்து வரும்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தப் பணப்பலன் தேவைதானா என மக்கள் வீதியில் இறங்கிப் போராட, பின்னர் அது கலவரமாக மாறியது. போராட்டக்காரர்களும் போலீசாரும் மாறி மாறி தாக்கிக்கொள்ள, ஜகார்தாவே ரணகளமானது

ஏற்கனவே அதிபர் சுபியாண்டோவின் அரசாங்கம் மீது போராட்டக்காரர்கள் கடும் கோபத்தில் இருக்க, உணவு டெலிவரி ஊழியரின் மரணம் அவர்களை மேலும் கொதிப்படைச் செய்தது. 21 வயதான அஃபன் குர்னியவான் என்ற இளைஞர் கண்டன பேரணியில் பங்கேற்ற போது போலீசாரின் வாகனம் ஏறியதில் உயிரிழந்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த போது, போலீசார் திட்டமிட்டு இந்தக் கொலை சம்பவத்தை அரங்கேற்றியதாகக் குற்றம்சாட்டினர். இது ஊடகங்களில் மீண்டும் மீண்டும் ஒளிப்பரப்பட, ஒட்டுமொத்த போராட்டகாரர்களும் உணர்ச்சியில் பொங்கினர். எதிர்ப்பு குரல் எழுப்பினால் கொலை செய்வீர்களா என ஆவேசமான போராட்டக்காரர்கள், மாகாணங்களில் உள்ள நாடாளுமன்ற கட்டடங்களுக்குத் தீ வைத்தனர்.

தலைநகர் ஜகார்தாவை தாண்டி, சுலவெஷி, யோக்யா கர்தா உள்ளிட்ட நகரங்களிலும் போராட்டம் பரவ, என்ன செய்வதென்று தெரியாமல் சுபியாண்டோவின் அரசாங்கம் விழிபிதுங்கியது. சுலவேஷியில் ஏற்பட்ட கலவரத்தில் 3 பேரும், யோக்யா கர்தா கலவரத்தில் 7 பேரும் பலியானதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டது.

கலவரக்காரர்கள் ஆயிரத்து 240 பேர் கைது செய்யப்பட்டதாக அறிவித்த காவல்துறை, 55 பில்லியன் ரூபியா அளவுக்கு பொது சொத்துகள் சேதம் அடைந்திருப்பதாகத் தெரிவித்தது.

இதனிடையே காயம் அடைந்த போலீசாரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அதிபர் சுபியாண்டோ, இந்தோனேஷியாவின் வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் விஷமிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக கண்டனம் தெரிவித்தார். இளைஞர்  குர்னியவானின் மரணத்திற்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என உறுதியளித்த சுபியாண்டோ, 7 காவல் அதிகாரிகள் மீது விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

நாளுக்கு நாள் போராட்டத்தின் தன்மைத் தீவிரமடைந்ததை உணர்ந்த அதிபர்  சுபியாண்டோ, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பள உயர்வை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளார். இந்த அறிவிப்பால் கலவரம் சற்று தணியும் என எதிர்பார்க்கப்பட்டாலும், அதிபர்  சுபியாண்டோவுக்கு உள்நாட்டில் பயங்கர எதிர்ப்பு கிளம்பியிருப்பது இந்தப் போராட்டம் மூலம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

Tags: Riots erupt over salary hike for Indonesian MPs: Property looted - President in shockஇந்தோனேஷிய எம்பிகளுக்கு ஊதிய உயர்வால் வெடித்த கலவரம்
ShareTweetSendShare
Previous Post

அம்பலமான மாநகராட்சியின் பொய் : பறிபோன பெண்ணின் உயிர் – நிர்கதியான குடும்பம்!

Next Post

அமெரிக்காவிற்கு போர் எச்சரிக்கை? : படைபலத்தை பறைசாற்றிய சீன ராணுவ அணிவகுப்பு!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More

அண்மைச் செய்திகள்

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies