பிரதமர் பயணத்தால் ஒப்பந்தம் கையெழுத்து : மணிப்பூரில் முடிவுக்கு வருகிறது இனமோதல்!
Sep 5, 2025, 06:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிரதமர் பயணத்தால் ஒப்பந்தம் கையெழுத்து : மணிப்பூரில் முடிவுக்கு வருகிறது இனமோதல்!

Web Desk by Web Desk
Sep 5, 2025, 03:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மணிப்பூர் மாநிலத்திற்குப் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ளும் நிலையில், அங்கு நிலவிவந்த இனமோதல் முடிவுக்கு வந்துள்ளன. 2023ம் ஆண்டு மூடப்பட்ட மணிப்பூர் – நாகாலாந்து இடையே தேசிய நெடுஞ்சாலை எண்-2ம் திறக்கப்பட உள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் தொடங்கி இரண்டு இனக் குழுக்கள் இடையே மோதல் இருந்து வருகிறது. இதில் 250-க்கும் மேற்பட்டோர்  கொல்லப்பட்டனர். 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர். வன்முறை  காரணமாக மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியும் அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் கடந்த சில நாட்களாக  குக்கி-ஜோ அமைப்பின் பிரதிநிதிகள், மணிப்பூர் அரசு, உள்துறை அமைச்சக அதிகாரிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

அதில் கடந்த 2023ம் ஆண்டு மூடப்பட்ட மணிப்பூர் – நாகாலாந்து இடையேயான தேசிய நெடுஞ்சாலை எண்-2 ஐ திறக்க உடன்பாடு ஏற்பட்டது. இந்த நெடுஞ்சாலை திறக்கப்பட்டால் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் நிலவும் சிக்கல் தீரும் என்றும், கலவரத்தால் புலம்பெயர்ந்த மக்கள், நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்த மக்களின் பிரச்னை தீரும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம், கையொப்பமிடப்பட்ட நாளிலிருந்து குறைந்தது ஓர் ஆண்டுக்கு, மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், பகைமையை நிறுத்தி, நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும், மோதல் ஏற்படக் கூடிய இடங்களில் இருந்து தங்களது 7 முகாம்களை இடமாற்றம் செய்யவும், முகாம்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், ஆயுதங்களைப் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கவும் குக்கி- ஜோ அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வரும் 13-ம் தேதி மிசோரம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களுக்குச் செல்ல வாய்ப்புள்ளதாக மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகக் கூறியிருந்தாலும், மத்திய அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை.

எனினும் பிரதமரின் வருகைக்கான தயார்நிலைக் குறித்து ஆய்வு செய்வதற்காக, மிசோரம் மாநில தலைமைச் செயலாளர்க் கில்லி ராம் மீனா, சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் ஆய்வு நடத்தியிருக்கிறார்.

மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறைக்குப் பிறகு முதல்முறையாகப் பிரதமர் மோடி வரும் 13-ம் தேதி செல்ல உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், குக்கி-ஜோ அடைப்பினருடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மணிப்பூரின் அமைதிக்கான முயற்சியில் புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

Tags: குடியரசுத் தலைவர் ஆட்சிPM Modimanipurமணிப்பூர்Agreement signed due to Prime Minister's visit: Communal conflict in Manipur is coming to an endமணிப்பூரில் முடிவுக்கு வருகிறது இனமோதல்
ShareTweetSendShare
Previous Post

கட்சி ஒன்றுபட வேண்டும் என்பது தான் அதிமுக தொண்டர்கள், மக்களின் கருத்து – சசிகலா

Next Post

அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் திமுக ஆட்சியை அகற்ற முடியும் : நயினார் நாகேந்திரன்

Related News

தத்தளிக்கும் தொழில் நிறுவனங்கள் : மின் கட்டணத்தை குறைக்குமா தமிழக அரசு?

உத்தரப்பிரதேசம் : ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறி ஊரையே ஏமாற்றிய நபர் கைது!

உணவு டெலிவரி கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு!

ஆர்எஸ்எஸ் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்!

நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்!

மேற்கு வங்கம் : மத உணர்வுகளை புண்படுத்தியதாக பாடகர் அனிர்பன் மீது பாஜக புகார்!

Load More

அண்மைச் செய்திகள்

அனுமதியின்றி தனது பாடல்கள் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் பயன்பாடு : உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு!

இந்தியாவை விமர்சித்த ஆஸ்திரிய பொருளாதார நிபுணரின் எக்ஸ் பக்கம் முடக்கம்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன்னுக்கு மோஸ் அறுவை சிகிச்சை!

ஆப்கானிஸ்தான் : சக்திவாய்ந்த நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 2,200-ஐ கடந்தது!

கன்னியாகுமரி : குழித்துறையில் ஓணம் பண்டிகை!

பாமக நிர்வாகியை கொலை செய்ய முயற்சி : குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

அடிப்படை வசதி எங்கே? : துயில்கொள்ளும் மாநகராட்சி – தீராத துயரத்தில் பயணிகள்!

இஸ்லாமியர்கள் மட்டும் வசிப்பதற்காக அடுக்குமாடி குடியிருப்பு : இந்தியாவின் மதச்சார்பற்ற கட்டமைப்பை அச்சுறுத்துவதாக பாஜக கண்டனம்!

அமெரிக்கா : குற்றவாளிகள் தப்பிப்பதை தடுக்கும் Grappler தொழில்நுட்பம்!

பிரான்சின் ஹாட்ஸ்-ஆல்ப்ஸ் பகுதியில் பலத்த ஆலங்கட்டி மழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies