பிரதமர் பயணத்தால் ஒப்பந்தம் கையெழுத்து : மணிப்பூரில் முடிவுக்கு வருகிறது இனமோதல்!
Jan 14, 2026, 09:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிரதமர் பயணத்தால் ஒப்பந்தம் கையெழுத்து : மணிப்பூரில் முடிவுக்கு வருகிறது இனமோதல்!

Murugesan M by Murugesan M
Sep 5, 2025, 08:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மணிப்பூர் மாநிலத்திற்குப் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ளும் நிலையில், அங்கு நிலவிவந்த இனமோதல் முடிவுக்கு வந்துள்ளன. 2023ம் ஆண்டு மூடப்பட்ட மணிப்பூர் – நாகாலாந்து இடையே தேசிய நெடுஞ்சாலை எண்-2ம் திறக்கப்பட உள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் தொடங்கி இரண்டு இனக் குழுக்கள் இடையே மோதல் இருந்து வருகிறது. இதில் 250-க்கும் மேற்பட்டோர்  கொல்லப்பட்டனர். 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர். வன்முறை  காரணமாக மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியும் அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் கடந்த சில நாட்களாக  குக்கி-ஜோ அமைப்பின் பிரதிநிதிகள், மணிப்பூர் அரசு, உள்துறை அமைச்சக அதிகாரிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

அதில் கடந்த 2023ம் ஆண்டு மூடப்பட்ட மணிப்பூர் – நாகாலாந்து இடையேயான தேசிய நெடுஞ்சாலை எண்-2 ஐ திறக்க உடன்பாடு ஏற்பட்டது. இந்த நெடுஞ்சாலை திறக்கப்பட்டால் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் நிலவும் சிக்கல் தீரும் என்றும், கலவரத்தால் புலம்பெயர்ந்த மக்கள், நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்த மக்களின் பிரச்னை தீரும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம், கையொப்பமிடப்பட்ட நாளிலிருந்து குறைந்தது ஓர் ஆண்டுக்கு, மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், பகைமையை நிறுத்தி, நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும், மோதல் ஏற்படக் கூடிய இடங்களில் இருந்து தங்களது 7 முகாம்களை இடமாற்றம் செய்யவும், முகாம்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், ஆயுதங்களைப் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கவும் குக்கி- ஜோ அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வரும் 13-ம் தேதி மிசோரம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களுக்குச் செல்ல வாய்ப்புள்ளதாக மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகக் கூறியிருந்தாலும், மத்திய அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை.

எனினும் பிரதமரின் வருகைக்கான தயார்நிலைக் குறித்து ஆய்வு செய்வதற்காக, மிசோரம் மாநில தலைமைச் செயலாளர்க் கில்லி ராம் மீனா, சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் ஆய்வு நடத்தியிருக்கிறார்.

மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறைக்குப் பிறகு முதல்முறையாகப் பிரதமர் மோடி வரும் 13-ம் தேதி செல்ல உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், குக்கி-ஜோ அடைப்பினருடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மணிப்பூரின் அமைதிக்கான முயற்சியில் புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

Tags: குடியரசுத் தலைவர் ஆட்சிPM Modimanipurமணிப்பூர்Agreement signed due to Prime Minister's visit: Communal conflict in Manipur is coming to an endமணிப்பூரில் முடிவுக்கு வருகிறது இனமோதல்
ShareTweetSendShare
Previous Post

தத்தளிக்கும் தொழில் நிறுவனங்கள் : மின் கட்டணத்தை குறைக்குமா தமிழக அரசு?

Next Post

ரஷ்யாவுக்கு ட்ரம்ப் ஆதரவு? : நேட்டோவை கை கழுவ திட்டம் – சிக்கலில் ஐரோப்பிய பாதுகாப்பு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies