பிரதமர் பயணத்தால் ஒப்பந்தம் கையெழுத்து : மணிப்பூரில் முடிவுக்கு வருகிறது இனமோதல்!
Sep 14, 2026, 04:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிரதமர் பயணத்தால் ஒப்பந்தம் கையெழுத்து : மணிப்பூரில் முடிவுக்கு வருகிறது இனமோதல்!

Murugesan M by Murugesan M
Sep 5, 2025, 08:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மணிப்பூர் மாநிலத்திற்குப் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ளும் நிலையில், அங்கு நிலவிவந்த இனமோதல் முடிவுக்கு வந்துள்ளன. 2023ம் ஆண்டு மூடப்பட்ட மணிப்பூர் – நாகாலாந்து இடையே தேசிய நெடுஞ்சாலை எண்-2ம் திறக்கப்பட உள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் தொடங்கி இரண்டு இனக் குழுக்கள் இடையே மோதல் இருந்து வருகிறது. இதில் 250-க்கும் மேற்பட்டோர்  கொல்லப்பட்டனர். 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர். வன்முறை  காரணமாக மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியும் அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் கடந்த சில நாட்களாக  குக்கி-ஜோ அமைப்பின் பிரதிநிதிகள், மணிப்பூர் அரசு, உள்துறை அமைச்சக அதிகாரிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

அதில் கடந்த 2023ம் ஆண்டு மூடப்பட்ட மணிப்பூர் – நாகாலாந்து இடையேயான தேசிய நெடுஞ்சாலை எண்-2 ஐ திறக்க உடன்பாடு ஏற்பட்டது. இந்த நெடுஞ்சாலை திறக்கப்பட்டால் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் நிலவும் சிக்கல் தீரும் என்றும், கலவரத்தால் புலம்பெயர்ந்த மக்கள், நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்த மக்களின் பிரச்னை தீரும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம், கையொப்பமிடப்பட்ட நாளிலிருந்து குறைந்தது ஓர் ஆண்டுக்கு, மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், பகைமையை நிறுத்தி, நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும், மோதல் ஏற்படக் கூடிய இடங்களில் இருந்து தங்களது 7 முகாம்களை இடமாற்றம் செய்யவும், முகாம்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், ஆயுதங்களைப் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கவும் குக்கி- ஜோ அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வரும் 13-ம் தேதி மிசோரம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களுக்குச் செல்ல வாய்ப்புள்ளதாக மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகக் கூறியிருந்தாலும், மத்திய அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை.

எனினும் பிரதமரின் வருகைக்கான தயார்நிலைக் குறித்து ஆய்வு செய்வதற்காக, மிசோரம் மாநில தலைமைச் செயலாளர்க் கில்லி ராம் மீனா, சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் ஆய்வு நடத்தியிருக்கிறார்.

மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறைக்குப் பிறகு முதல்முறையாகப் பிரதமர் மோடி வரும் 13-ம் தேதி செல்ல உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், குக்கி-ஜோ அடைப்பினருடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மணிப்பூரின் அமைதிக்கான முயற்சியில் புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

Tags: குடியரசுத் தலைவர் ஆட்சிPM Modimanipurமணிப்பூர்Agreement signed due to Prime Minister's visit: Communal conflict in Manipur is coming to an endமணிப்பூரில் முடிவுக்கு வருகிறது இனமோதல்
Share
Tweet
SendShare
Previous Post

தத்தளிக்கும் தொழில் நிறுவனங்கள் : மின் கட்டணத்தை குறைக்குமா தமிழக அரசு?

Next Post

ரஷ்யாவுக்கு ட்ரம்ப் ஆதரவு? : நேட்டோவை கை கழுவ திட்டம் – சிக்கலில் ஐரோப்பிய பாதுகாப்பு!

Related News

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies