மந்த கதியில் பொருநை அரசு அருங்காட்சியக பணிகள் : துரித நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை!
Oct 22, 2025, 03:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மந்த கதியில் பொருநை அரசு அருங்காட்சியக பணிகள் : துரித நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை!

Web Desk by Web Desk
Sep 5, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையில் அரசு அறிவித்த நாளை  கடந்தும் பொருநை அரசு அருங்காட்சியகம் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பான ஒரு செய்தித் தொகுப்பைத் தற்போது காணலாம்.

திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டி நான்கு வழிச் சாலை அருகேயுள்ள சுமார் 13 ஏக்கர் நிலப்பரப்பில், 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொருநை அரசு அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனக் கடந்த 2021-ம் ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

சிவகலை, ஆதிச்சநல்லூர், கொற்கை  போன்ற இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட பண்டைய நாகரிகக் கலைப் பொருட்களை  காட்சிப்படுத்தும் பொருட்டு, பொதுப்பணித்துறைச் சார்பில் இந்த அருங்காட்சியகம் மிகப் பிரம்மாண்டமாக கட்டமைக்கப்பட்டு வருகிறது.

கட்டுமான பணிகள் 18 மாதங்களுக்குள் நிறைவடையும் எனத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் ஏ.வ வேலுவும் 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் அருங்காட்சியகம் மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும் என உறுதியாகத் தெரிவித்திருந்தார்.

ஆனால், கடந்த 2023-ம் ஆண்டே முதலமைச்சர் ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டுத் தொடங்கிய அருங்காட்சியகக் கட்டுமான பணிகள், 2 ஆண்டுகளைக் கடந்தும் தற்போது வரைத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோல, 33 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்ட கட்டுமான பணிகளும், தற்போது 56.36 கோடி ரூபாய் வரைச் சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அறிவிக்கப்பட்ட காலக்கெடு முடிந்து 5 மாதங்கள் கடந்தும் கட்டுமான பணிகள் இன்னும் முடிவடையாமல் இருப்பது, அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நான்கு வழிச்சாலையை ஒட்டி கட்டப்பட்டு வரும் இந்த அருங்காட்சியகத்திற்கு, அதிகாரிகள் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டையும் பொதுமக்கள் முன்வைத்துள்ளனர்.

மக்கள் வரியாகச் செலுத்தும் பணத்தில் பல கோடி ரூபாயைச் செலவு செய்து கட்டப்பட்டு வரும் அருங்காட்சியத்தைச் சுற்றி, ஒரு சிசிடிவி கேமரா கூட இல்லாத காரணத்தால் அப்பகுதியில் பல சட்டவிரோதச் செயல்கள் அரங்கேறி வருவதாகவும் அவர்கள் வேதனை  தெரிவிக்கின்றனர்.

தமிழக அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்காலும், மந்தமாக நடைபெற்று வரும் கட்டுமான பணிகளாலும், பொருநை அரசு அருங்காட்சியகம் மக்கள் பயன்பாட்டிற்கு வர இன்னும் ஒராண்டு வரை ஆகலாம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழக மக்களின் பண்டையகால பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை, வருங்கால சந்ததியினர் தெரிந்துகொள்ள பெருதவியாக இருக்கக்கூடிய இந்த அருங்காட்சியகத்தின் கட்டுமான பணிகளை, விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நெல்லை வாழ் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags: Government Museum work in progress: Request to the government to take urgent actionஅரசுக்கு கோரிக்கைஅரசு அருங்காட்சியக பணிகள்பொருநை அரசு அருங்காட்சியகம்
ShareTweetSendShare
Previous Post

டெண்டரில் மோசடி – தமிழக அரசுக்கு ரூ.90 கோடி இழப்பு!

Next Post

அடிப்படை வசதி எங்கே? : துயில்கொள்ளும் மாநகராட்சி – தீராத துயரத்தில் பயணிகள்!

Related News

அமெரிக்க வரி விதிப்பை புதிய வாய்ப்பாக மாற்றிய இந்தியா : பிற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரித்து துணிச்சல் முயற்சி!

அதிநவீன கப்பல்களை தயாரித்து வரும் “கொச்சி ஷிப்யார்டு” : தன்னிறைவு நோக்கில் இந்திய கடற்படை ஓர் புது அத்தியாயம்…!

அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு : சானிடைசர்களுக்குத் தடை – ஐரோப்பிய ஒன்றியம் முடிவு?

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

சீனாவை சீண்டும் தைவான் : உள்நாட்டு சவால்களை சந்திக்க முடியாமல் திணறல்!

கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை : இந்திய தூதர் சொல்வது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

AWS கோளாறால் முடங்கியது இணைய உலகம் : செயலிகள் செயலிழப்பு – பயனர்கள் பரிதவிப்பு!

பிரான்ஸ் அதிபரை கோபத்தில் ஆழ்த்திய துணிகர கொள்ளை – நெப்போலியனின் நூற்றாண்டு பொக்கிஷம் மீட்கப்படுமா?

இஸ்ரேல்-காசா எல்லையை பிரிக்கும் மஞ்சள் கோடு : மக்களின் உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறிய சோகம் !

கடல் அரசன் INS விக்ராந்தில் பிரதமர் மோடி : கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…!

நாகை : தொடர் கனமழையால் 1000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு!

நாடு வளர வேண்டும் என்றால் மக்கள் இந்திய தயாரிப்புகளை வாங்க வேண்டும் – பிரதமர் மோடி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா – யாக சாலை பூஜையுடன் தொடக்கம்!

வங்க கடலில் புயல் உருவாகுமா? -வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பேட்டி!

மெக்சிகோ வெடித்து சிதறிய பாப்போகாடெபெடல் எரிமலை – டைம் லாப்ஸ் வீடியோ!

எச்-1பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies