மந்த கதியில் பொருநை அரசு அருங்காட்சியக பணிகள் : துரித நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை!
Sep 6, 2025, 12:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மந்த கதியில் பொருநை அரசு அருங்காட்சியக பணிகள் : துரித நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை!

Web Desk by Web Desk
Sep 5, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையில் அரசு அறிவித்த நாளை  கடந்தும் பொருநை அரசு அருங்காட்சியகம் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பான ஒரு செய்தித் தொகுப்பைத் தற்போது காணலாம்.

திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டி நான்கு வழிச் சாலை அருகேயுள்ள சுமார் 13 ஏக்கர் நிலப்பரப்பில், 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொருநை அரசு அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனக் கடந்த 2021-ம் ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

சிவகலை, ஆதிச்சநல்லூர், கொற்கை  போன்ற இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட பண்டைய நாகரிகக் கலைப் பொருட்களை  காட்சிப்படுத்தும் பொருட்டு, பொதுப்பணித்துறைச் சார்பில் இந்த அருங்காட்சியகம் மிகப் பிரம்மாண்டமாக கட்டமைக்கப்பட்டு வருகிறது.

கட்டுமான பணிகள் 18 மாதங்களுக்குள் நிறைவடையும் எனத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் ஏ.வ வேலுவும் 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் அருங்காட்சியகம் மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும் என உறுதியாகத் தெரிவித்திருந்தார்.

ஆனால், கடந்த 2023-ம் ஆண்டே முதலமைச்சர் ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டுத் தொடங்கிய அருங்காட்சியகக் கட்டுமான பணிகள், 2 ஆண்டுகளைக் கடந்தும் தற்போது வரைத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோல, 33 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்ட கட்டுமான பணிகளும், தற்போது 56.36 கோடி ரூபாய் வரைச் சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அறிவிக்கப்பட்ட காலக்கெடு முடிந்து 5 மாதங்கள் கடந்தும் கட்டுமான பணிகள் இன்னும் முடிவடையாமல் இருப்பது, அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நான்கு வழிச்சாலையை ஒட்டி கட்டப்பட்டு வரும் இந்த அருங்காட்சியகத்திற்கு, அதிகாரிகள் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டையும் பொதுமக்கள் முன்வைத்துள்ளனர்.

மக்கள் வரியாகச் செலுத்தும் பணத்தில் பல கோடி ரூபாயைச் செலவு செய்து கட்டப்பட்டு வரும் அருங்காட்சியத்தைச் சுற்றி, ஒரு சிசிடிவி கேமரா கூட இல்லாத காரணத்தால் அப்பகுதியில் பல சட்டவிரோதச் செயல்கள் அரங்கேறி வருவதாகவும் அவர்கள் வேதனை  தெரிவிக்கின்றனர்.

தமிழக அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்காலும், மந்தமாக நடைபெற்று வரும் கட்டுமான பணிகளாலும், பொருநை அரசு அருங்காட்சியகம் மக்கள் பயன்பாட்டிற்கு வர இன்னும் ஒராண்டு வரை ஆகலாம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழக மக்களின் பண்டையகால பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை, வருங்கால சந்ததியினர் தெரிந்துகொள்ள பெருதவியாக இருக்கக்கூடிய இந்த அருங்காட்சியகத்தின் கட்டுமான பணிகளை, விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நெல்லை வாழ் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags: Government Museum work in progress: Request to the government to take urgent actionஅரசுக்கு கோரிக்கைஅரசு அருங்காட்சியக பணிகள்பொருநை அரசு அருங்காட்சியகம்
ShareTweetSendShare
Previous Post

டெண்டரில் மோசடி – தமிழக அரசுக்கு ரூ.90 கோடி இழப்பு!

Next Post

அடிப்படை வசதி எங்கே? : துயில்கொள்ளும் மாநகராட்சி – தீராத துயரத்தில் பயணிகள்!

Related News

எதிர்கால போருக்கு இந்தியா ரெடி : வெகு ஜோராக நடக்கும் நவீன தளவாட உற்பத்தி!

”ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடரும்” : யாரும் கட்டளையிட முடியாது – நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் – கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?

ரஷ்யாவுக்கு ட்ரம்ப் ஆதரவு? : நேட்டோவை கை கழுவ திட்டம் – சிக்கலில் ஐரோப்பிய பாதுகாப்பு!

பிரதமர் பயணத்தால் ஒப்பந்தம் கையெழுத்து : மணிப்பூரில் முடிவுக்கு வருகிறது இனமோதல்!

தத்தளிக்கும் தொழில் நிறுவனங்கள் : மின் கட்டணத்தை குறைக்குமா தமிழக அரசு?

Load More

அண்மைச் செய்திகள்

பயிற்சியாளருக்கு குருதட்சணை : பாண்ட்யா சகோதரர்களின் கருணை உள்ளம்…!

அடிப்படை வசதி எங்கே? : துயில்கொள்ளும் மாநகராட்சி – தீராத துயரத்தில் பயணிகள்!

மந்த கதியில் பொருநை அரசு அருங்காட்சியக பணிகள் : துரித நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை!

டெண்டரில் மோசடி – தமிழக அரசுக்கு ரூ.90 கோடி இழப்பு!

தஞ்சை : பெட்ரோல் குண்டு வீசி பேரூராட்சி தலைவரை கொல்ல முயற்சி!

வேதனையில் வாடும் விவசாயிகள் : உழவர் சந்தைகளுக்கு வெளியே சட்டவிரோதமாக செயல்படும் கடைகள்!

வர்த்தக பிரச்னைகளில் அமெரிக்க தரப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் : வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்

இந்திய உறவை சீனாவிடம் இழந்து விட்டோம் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

பாமக நிர்வாகியை கொலை செய்ய முயற்சி : குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

அனுமதியின்றி தனது பாடல்கள் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் பயன்பாடு : உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies