அடிப்படை வசதி எங்கே? : துயில்கொள்ளும் மாநகராட்சி - தீராத துயரத்தில் பயணிகள்!
Jul 29, 2026, 06:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அடிப்படை வசதி எங்கே? : துயில்கொள்ளும் மாநகராட்சி – தீராத துயரத்தில் பயணிகள்!

Murugesan M by Murugesan M
Sep 5, 2025, 08:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தும் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை எனப் புகார் எழுந்துள்ளது. மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் மதுரைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, திருச்சி, சிவகங்கை, சிவகாசி, விருதுநகர், திருச்செந்தூர் என பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள், மதுரை மாட்டுத்தாவணி எம் ஜி ஆர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.

சராசரியாக நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரையிலான மக்கள் பயன்படுத்தும் இந்தப் பேருந்து நிலையத்தில் பண்டிகைக் காலம் என்றால் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் இந்தப் பேருந்து நிலையத்தில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.

பராமரிப்பு எனும் பெயரில் பூட்டப்பட்ட ஆண்களுக்கான கழிப்பறை கடந்த ஆறு மாதங்களாகத் திறக்கப்படாததால் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். பேருந்து நிலையத்தின் கழிப்பறைகள் மூடியிருப்பதை சாதகமாக பயன்படுத்தி தனியார் கழிப்பறைகள் அதிகக் கட்டணத்தை வசூலித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பேருந்து நிலையத்தின் கழிவுநீர்க் கால்வாய்கள் முறையாகத் தூர்வாரப்படாததன் காரணமாகக் கழிவுநீர் ஆங்காங்கே வெளியேறி சுகாதாரச் சீர்கேடு நிலவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. பயணிகளுக்காக மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுச் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வழங்கும் இயந்திரமும் யாருக்கும் பயனற்ற நிலையில் காட்சிபொருளாகவே காட்சியளிக்கின்றன

தூங்காநகரம் எனப் பெயர்பெற்ற மதுரையில் அமைந்துள்ள மிகப்பெரிய பேருந்து நிலையத்தில் 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இப்படி இரவு பகலாக லட்சக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தும் பேருந்து நிலையம் அடிப்படை வசதிகளின்றிக் காணப்படுவது பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக  கவனம் செலுத்தி பேருந்து பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தருவதோடு, பேருந்து நிலையத்தை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Tags: மாநகராட்சிWhere are the basic amenities? : The slumbering corporation - commuters in endless miseryதீராத துயரத்தில் பயணிகள்மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம்
ShareTweetSendShare
Previous Post

மந்த கதியில் பொருநை அரசு அருங்காட்சியக பணிகள் : துரித நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை!

Next Post

பயிற்சியாளருக்கு குருதட்சணை : பாண்ட்யா சகோதரர்களின் கருணை உள்ளம்…!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies