அடிப்படை வசதி எங்கே? : துயில்கொள்ளும் மாநகராட்சி - தீராத துயரத்தில் பயணிகள்!
Jun 14, 2026, 01:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அடிப்படை வசதி எங்கே? : துயில்கொள்ளும் மாநகராட்சி – தீராத துயரத்தில் பயணிகள்!

Murugesan M by Murugesan M
Sep 5, 2025, 08:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தும் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை எனப் புகார் எழுந்துள்ளது. மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் மதுரைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, திருச்சி, சிவகங்கை, சிவகாசி, விருதுநகர், திருச்செந்தூர் என பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள், மதுரை மாட்டுத்தாவணி எம் ஜி ஆர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.

சராசரியாக நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரையிலான மக்கள் பயன்படுத்தும் இந்தப் பேருந்து நிலையத்தில் பண்டிகைக் காலம் என்றால் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் இந்தப் பேருந்து நிலையத்தில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.

பராமரிப்பு எனும் பெயரில் பூட்டப்பட்ட ஆண்களுக்கான கழிப்பறை கடந்த ஆறு மாதங்களாகத் திறக்கப்படாததால் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். பேருந்து நிலையத்தின் கழிப்பறைகள் மூடியிருப்பதை சாதகமாக பயன்படுத்தி தனியார் கழிப்பறைகள் அதிகக் கட்டணத்தை வசூலித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பேருந்து நிலையத்தின் கழிவுநீர்க் கால்வாய்கள் முறையாகத் தூர்வாரப்படாததன் காரணமாகக் கழிவுநீர் ஆங்காங்கே வெளியேறி சுகாதாரச் சீர்கேடு நிலவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. பயணிகளுக்காக மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுச் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வழங்கும் இயந்திரமும் யாருக்கும் பயனற்ற நிலையில் காட்சிபொருளாகவே காட்சியளிக்கின்றன

தூங்காநகரம் எனப் பெயர்பெற்ற மதுரையில் அமைந்துள்ள மிகப்பெரிய பேருந்து நிலையத்தில் 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இப்படி இரவு பகலாக லட்சக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தும் பேருந்து நிலையம் அடிப்படை வசதிகளின்றிக் காணப்படுவது பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக  கவனம் செலுத்தி பேருந்து பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தருவதோடு, பேருந்து நிலையத்தை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Tags: மாநகராட்சிWhere are the basic amenities? : The slumbering corporation - commuters in endless miseryதீராத துயரத்தில் பயணிகள்மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம்
ShareTweetSendShare
Previous Post

மந்த கதியில் பொருநை அரசு அருங்காட்சியக பணிகள் : துரித நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை!

Next Post

பயிற்சியாளருக்கு குருதட்சணை : பாண்ட்யா சகோதரர்களின் கருணை உள்ளம்…!

Related News

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies