கிடப்பில் போடப்பட்ட "மரப்பாலம்" பணிகள் : போக்குவரத்து மாற்றத்தால் மக்கள் அவதி!
Jan 14, 2026, 02:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கிடப்பில் போடப்பட்ட “மரப்பாலம்” பணிகள் : போக்குவரத்து மாற்றத்தால் மக்கள் அவதி!

Murugesan M by Murugesan M
Sep 8, 2025, 05:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மதுக்கரை மரப்பாலம் விரிவாக்கப் பணிகள் கடந்த 5 மாதங்களாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் இன்னல்களை  சந்தித்து வருகின்றனர். அது குறித்த செய்தி தொகுப்பை  தற்போது பார்க்கலாம்.

கோவை மதுக்கரை மரப்பாலம் சேலம், கொச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள முக்கிய பகுதியாகும். இந்தப் பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை ஒன்றும் அமைந்துள்ளது.

இந்தப் பாலம் ஆங்கிலேயர்க் காலத்தில் மரத்தினால் கட்டப்பட்டதால் மரப்பாலம் என அழைக்கப்படுகிறது. பிறகு அந்தப் பாலம் கான்கிரீட் பாலமாக மாற்றப்பட்டது.

அந்த வழியில் தினமும் சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் கடந்து சென்று வந்தன. பாலத்தின் அகலம் குறைவாக இருப்பதால் ஒரு சமயத்தில் ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடியும். எதிர்  திசையில் வரும் வாகனங்கள் அதுவரை காத்திருந்து தான் கடக்க முடியும்.

இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. ஒவ்வொரு நாளும் வேலை, தொழில், கல்வி நிமித்தமாக ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கும் நிலையில், பாலத்தை அகலப்படுத்த தொடர்க் கோரிக்கைகள் எழுந்து வந்தன.

இதன் காரணமாகக் கடந்த மார்ச் மாதத்தில் பாலத்தை அகலப்படுத்த, மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில், 102 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டது. தொடர்ந்து பாலத்தின் இரு புறமும் குழிகள் தோண்டப்பட்டுப் பணிகள் தொடங்கப்பட்டன.

ஆனால் குடிநீர், மின் வாரியத்திடம் அனுமதி பெறாததால் பணிகள் மேற்கொள்ளப்படாமல் கடந்த 5 மாதங்களாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

மரப்பாலம் பகுதியை சுற்றி ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. பணிகளுக்காகப் பாலம் மூடப்பட்டதால் தினமும் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.

கிடப்பில் போடப்பட்ட இந்தப் பால பணிகளால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனைத் தெரிவிக்கின்றனர் அந்தப் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள். மேலும் வருமானம் இன்றித் தவிப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பணிகள் துவங்கும் முன்பே குடிநீர் வாரியம், மின் வாரியத்துடன் பேசி முறையாக அனுமதி பெற்றிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்று தெரிவிக்கும் மக்கள் உரிய தீர்வு காண வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: மக்கள் அவதி"Tree bridge" work put on hold: People suffer due to traffic changesமரப்பாலம்" பணிகள்கோவை மதுக்கரை மரப்பாலம் விரிவாக்கப் பணிகள்
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

Next Post

நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து இளைஞர்கள் போராட்டம்!

Related News

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

Load More

அண்மைச் செய்திகள்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies