கிடப்பில் போடப்பட்ட "மரப்பாலம்" பணிகள் : போக்குவரத்து மாற்றத்தால் மக்கள் அவதி!
Sep 8, 2025, 08:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கிடப்பில் போடப்பட்ட “மரப்பாலம்” பணிகள் : போக்குவரத்து மாற்றத்தால் மக்கள் அவதி!

Web Desk by Web Desk
Sep 8, 2025, 05:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மதுக்கரை மரப்பாலம் விரிவாக்கப் பணிகள் கடந்த 5 மாதங்களாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் இன்னல்களை  சந்தித்து வருகின்றனர். அது குறித்த செய்தி தொகுப்பை  தற்போது பார்க்கலாம்.

கோவை மதுக்கரை மரப்பாலம் சேலம், கொச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள முக்கிய பகுதியாகும். இந்தப் பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை ஒன்றும் அமைந்துள்ளது.

இந்தப் பாலம் ஆங்கிலேயர்க் காலத்தில் மரத்தினால் கட்டப்பட்டதால் மரப்பாலம் என அழைக்கப்படுகிறது. பிறகு அந்தப் பாலம் கான்கிரீட் பாலமாக மாற்றப்பட்டது.

அந்த வழியில் தினமும் சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் கடந்து சென்று வந்தன. பாலத்தின் அகலம் குறைவாக இருப்பதால் ஒரு சமயத்தில் ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடியும். எதிர்  திசையில் வரும் வாகனங்கள் அதுவரை காத்திருந்து தான் கடக்க முடியும்.

இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. ஒவ்வொரு நாளும் வேலை, தொழில், கல்வி நிமித்தமாக ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கும் நிலையில், பாலத்தை அகலப்படுத்த தொடர்க் கோரிக்கைகள் எழுந்து வந்தன.

இதன் காரணமாகக் கடந்த மார்ச் மாதத்தில் பாலத்தை அகலப்படுத்த, மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில், 102 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டது. தொடர்ந்து பாலத்தின் இரு புறமும் குழிகள் தோண்டப்பட்டுப் பணிகள் தொடங்கப்பட்டன.

ஆனால் குடிநீர், மின் வாரியத்திடம் அனுமதி பெறாததால் பணிகள் மேற்கொள்ளப்படாமல் கடந்த 5 மாதங்களாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

மரப்பாலம் பகுதியை சுற்றி ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. பணிகளுக்காகப் பாலம் மூடப்பட்டதால் தினமும் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.

கிடப்பில் போடப்பட்ட இந்தப் பால பணிகளால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனைத் தெரிவிக்கின்றனர் அந்தப் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள். மேலும் வருமானம் இன்றித் தவிப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பணிகள் துவங்கும் முன்பே குடிநீர் வாரியம், மின் வாரியத்துடன் பேசி முறையாக அனுமதி பெற்றிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்று தெரிவிக்கும் மக்கள் உரிய தீர்வு காண வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: மக்கள் அவதி"Tree bridge" work put on hold: People suffer due to traffic changesமரப்பாலம்" பணிகள்கோவை மதுக்கரை மரப்பாலம் விரிவாக்கப் பணிகள்
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

Next Post

நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து இளைஞர்கள் போராட்டம்!

Related News

யாரும் நெருங்க முடியாதாம் : அமெரிக்காவின் 6-ம் தலைமுறை போர் விமானம்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

15 ஆண்டுகளாக செயின் திருடி வணிக வளாகம் கட்டிய திமுக பஞ். தலைவி : போலீசாரிடம் வாக்குமூலம்!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணை – சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

அதிமுக MLA-க்கள் நிதியில் கட்டிய ரேஷன் கடைகள் மூடல் – திமுகவினரின் கார் பார்க்கிங் ஆக மாறியதால் அதிர்ச்சி!

முக்கியத்துவம் பெற்ற குடியரசு துணை தலைவர் தேர்தல்!

விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் : நயினார் நாகேந்திரன்

பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலாப் பயணியின் காரை விரட்டிய யானை!

ராணிப்பேட்டை : இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!

பெருமையை இழக்கும் ஈத்தாமொழி தேங்காய்கள் : வேதனையில் விவசாயிகள்!

ராணுவ வீரர்களுக்கான பயிற்சி நிறைவு விழா – வியக்க வைத்த சாகச நிகழ்ச்சி!

கர்நாடகா : போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் மீது போலீசார் தடியடி!

கோவை : கிழக்கு புற வழி சாலைக்கு எதிர்ப்பு – ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies