அதிமுக MLA-க்கள் நிதியில் கட்டிய ரேஷன் கடைகள் மூடல் - திமுகவினரின் கார் பார்க்கிங் ஆக மாறியதால் அதிர்ச்சி!
Mar 15, 2026, 06:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அதிமுக MLA-க்கள் நிதியில் கட்டிய ரேஷன் கடைகள் மூடல் – திமுகவினரின் கார் பார்க்கிங் ஆக மாறியதால் அதிர்ச்சி!

Murugesan M by Murugesan M
Sep 8, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாநகராட்சியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்களின் தொகுதி நிதியில் கட்டி கொடுத்த 4 ரேஷன் கடைகளை மூடிவிட்டு, திமுகவினர் வாடகை இடத்தில் கடைகளை நடத்தி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

சேலம் மாநகராட்சியின் 55வது வார்டில் 4 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. முன்னர், அதிமுக எம்எல்ஏக்களாக இருந்த வெங்கடாசலம், எம்.கே.செல்வராஜ், தற்போதைய எம்எல்ஏ பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட 4 பேர்  தங்களின் தொகுதி நிதியிலிருந்து புதியதாக ரேஷன் கடைகளை  கட்டி கொடுத்தனர்.

ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், இந்த ரேஷன் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு, வேறு பகுதியில் உள்ள வாடகை  கட்டடத்திற்கு மாற்றப்பட்டன. குறிப்பாக 73வது எண் கொண்ட ரேஷன் கடைக்குச் சுமார் 12 லட்சம் ரூபாயில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதே போல், மற்ற கட்டடங்களும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டன.

ஆனால், அவை அனைத்தும் தற்போது மூடப்பட்டுள்ளதால், மக்கள் வரிப்பணம் வீணாகி வருகிறது. இதுபோதாதென்று, 4 ரேஷன் கடைகளும் செயல்படும் கட்டடங்களுக்கு வாடகை வேறு தர வேண்டியுள்ளது.

ஒவ்வொரு கடைக்கும் 5,000 முதல் 7,000 ரூபாய் வரை வாடகை செலுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்தப் பணமும் மக்கள் வரிப்பணத்தில் இருந்துதான் கொடுக்கப்படுகிறது என்பதை குறிப்பிட தேவையில்லை.

சேலம் மாநகராட்சியின் 55வது வார்டில் இயங்கவேண்டிய கடைகள், அருகில் உள்ள வார்டுகளில் உள்ள கட்டங்களில் செயல்பட்டு வருவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ரேஷன் பொருட்களை வாங்க குறைந்தபட்சம் இரண்டு கிலோமீட்டர்  தூரம் வரை நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும் மக்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.

அதிமுக எம்எல்ஏக்கள் கட்டிக் கொடுத்த கட்டடங்கள் தற்போது திமுகவினரின் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தும் பகுதியாக மாறியுள்ளதாகக் குற்றம்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, 55வது வார்டில் உள்ள பல அரசு கட்டிடங்களில் நீண்ட நாட்களாகக் கார்கள் நிறுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

எனவே, இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, பழைய கட்டடங்களுக்கே ரேஷன் கடைகளை மாற்ற வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: அதிமுக MLA-க்கள் நிதியில் கட்டிய ரேஷன் கடைகள் மூடல்DMKADMKரேஷன் கடைRation shops built with funds from AIADMK MLAs are closed - Shocking as they have turned into car parking for DMK members
ShareTweetSendShare
Previous Post

முக்கியத்துவம் பெற்ற குடியரசு துணை தலைவர் தேர்தல்!

Next Post

கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies