பெருமையை இழக்கும் ஈத்தாமொழி தேங்காய்கள் : வேதனையில் விவசாயிகள்!
Mar 15, 2026, 03:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பெருமையை இழக்கும் ஈத்தாமொழி தேங்காய்கள் : வேதனையில் விவசாயிகள்!

Murugesan M by Murugesan M
Sep 8, 2025, 06:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரு காலத்தில் தமிழகத்தில் தேய்காய் விவசாயத்திற்குப் பெயர் போன ஊராக இருந்த ஈத்தாமொழி, தற்போது பழைய பெருமைகளை எல்லாம் படிப்படியாக இழந்து வருகிறது. காரணம் என்ன? இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் நெட்டை ரகத் தென்னை மரங்களுக்குப் புவிசார் குறியீடு பெற்ற பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டத்தின் ஈத்தாமொழி விளங்கி வருகிறது. அதேபோன்று இங்கு விளையும் தேங்காய் அளவில் பெரிதாகவும், அதிக எடைக் கொண்டதாகவும் உள்ளது.

20 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஈத்தாமொழி, ராஜாக்கமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், ஒரு இளைஞருக்கு 500 தென்னை மரங்கள் இருந்தால், அவருக்குப் பெண் கொடுக்கப் பலரும் போட்டி போடும் நிலை இருந்தது. அந்த அளவுக்கு தென்னை மரங்கள், பொருளாதாரத்திற்கான முக்கிய ஆதாரமாக இருந்து வந்தன. ஆனால், இந்தச் சூழல் தற்போது மலையேறி விட்டது.

ஈத்தாமொழி தேங்காய்கள் தற்போது மதிப்பை இழந்து வருவதாகத் தென்னை விவசாயிகள் மற்றும் தேங்காய் வியாபாரிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். சமீப காலமாக வாடல் நோய், வண்டு தாக்குதல், வெள்ளைப்பூச்சு, இலை சுருட்டு போன்ற பாதிப்புகளால் தென்னை மரங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.

தொடர் நோய் தாக்குதல்களால் தென்னை மரங்களில் விளைச்சல் குறைந்து வருவதாகவும், 100 தேங்காய் விளைய வேண்டிய இடத்தில் வெறும் 30 தேங்காய் மட்டுமே கிடைப்பதாகவுவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக, தென்னை மரங்களைச் சார்ந்து செய்யப்படும், தேங்காய் கொப்பரையில் இருந்து எண்ணெய் எடுத்தல், கயிறு தயாரித்தல் உள்ளிட்ட பணிகளும் நலிவடைந்து வருகின்றன.

ஒரு காலத்தில் ஈத்தாமொழி தேங்காய் வெளிமாநிலங்களுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால், தற்போதோ, வெளி மாவட்டங்களில் இருந்து தேங்காய்களை இறக்குமதி செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு இதனை கருத்தில் கொண்டு தென்னை விவசாயத்தை ஊக்குவிக்க மானியமும், விவசாயிகளுக்குப் போதிய பயிற்சியும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், தென்னை மரங்களில் ஏற்படும் நோய் பாதிப்புகளுக்கு உரிய மருந்துகளை வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags: ஈத்தாமொழி தேங்காய்கள்வேதனையில் விவசாயிகள்Ithamozhi coconuts losing their pride: Farmers in pain!
ShareTweetSendShare
Previous Post

ராணுவ வீரர்களுக்கான பயிற்சி நிறைவு விழா – வியக்க வைத்த சாகச நிகழ்ச்சி!

Next Post

ராணிப்பேட்டை : இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies