ராணுவ வீரர்களுக்கான பயிற்சி நிறைவு விழா - வியக்க வைத்த சாகச நிகழ்ச்சி!
Jun 21, 2026, 07:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ராணுவ வீரர்களுக்கான பயிற்சி நிறைவு விழா – வியக்க வைத்த சாகச நிகழ்ச்சி!

Murugesan M by Murugesan M
Sep 8, 2025, 06:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை  பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில், ராணுவ அதிகாரிகளின் அணிவகுப்பு மற்றும் பட்டமளிப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இது குறித்த செய்தித் தொகுப்பை பார்க்கலாம்.

சென்னை  பரங்கிமலையில் ராணுவ பயிற்சி மையம் உள்ளது. நாடு முழுவதும் இருந்து வீரர், வீராங்கனைகள் இங்கு ராணுவ பயிற்சி பெறுவது வழக்கம். அதன்படி, 130 ஆண் அதிகாரிகள், 25 பெண் அதிகாரிகள், இந்தியாவின் நட்பு நாடுகளைச் சேர்ந்த 21 பேர் என, மொத்தம் 176 பேர், 49 வாரப் பயிற்சியை முடித்தனர்.

அவர்களுக்கான பட்டமளிப்பு விழா ராணுவ மைதானத்தில் நடைபெற்றது. அப்போது, ராணுவ வீரர்கள் மேற்கொண்ட இருசக்கர வாகன அணிவகுப்பு அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

அதேபோல, ராணுவ வீரர்கள் தற்காப்புக் கலைகளை நிகழ்த்திக் காட்டினர். மேலும், குதிரை சவாரி செய்தும், மிடுக்காக அணிவகுத்தும் அசத்தினர்.

இந்தப் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர்ப் ப்ரீத் சிங் கலந்து கொண்டார். அவர் புதிதாக பொறுப்பேற்கவுள்ள அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்துப் பட்டங்களை வழங்கினார்.

இந்த நிகழ்வில், பயிற்சி முடித்த வீரர்களின் பெற்றோர்களும், உறவினர்களும் கலந்துகொண்டனர். அப்போது, அவர்கள் கண்கலங்கியபடி வீரர்களை  கட்டிப்பிடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

வடசென்னையைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகனான வரதராஜன் என்பவர், ராணுவ அதிகாரியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நாளை மறக்க முடியாது எனவும், நாட்டிற்காகச் சிறந்த முறையில் பணியாற்றுவேன் என்றும் அவர்  கூறினார்.

இதேபோல், ராணுவ அதிகாரியாகப் பணியைத் தொடரவுள்ள வரப்பிரசாத் என்பவர், தனது பெற்றோரின் தியாகமும், OTA-ல் பெற்ற பயிற்சியுமே தன்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்தார். தனது நாட்டுக்காக முழு மனதோடு சேவையாற்ற போவதாகவும் அவர்கூறினார்.

இப்படி, பயிற்சி முடித்த அனைத்து வீரர்களும், அவர்களது பெற்றோர்களும் மகிழ்ச்சியுடனும், உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் இருந்தனர். இந்த 176 வீரர்களின் பயற்சி மட்டும்தான் தற்போது முடிந்துள்ளது. நாட்டிற்கு அவர்கள் ஆற்றவுள்ள பணி இனிதான் தொடங்கவுள்ளது.

Tags: indian armyTraining Completion Ceremony for Army Soldiers - An Amazing Adventureசென்னை  பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையம்OTA
ShareTweetSendShare
Previous Post

கர்நாடகா : போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் மீது போலீசார் தடியடி!

Next Post

பெருமையை இழக்கும் ஈத்தாமொழி தேங்காய்கள் : வேதனையில் விவசாயிகள்!

Related News

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 7 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

Load More

அண்மைச் செய்திகள்

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லை – ஜே.டி. வான்ஸ் விமர்சனம்!

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies