சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் - பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!
Nov 1, 2025, 10:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Sep 10, 2025, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் கூட்ட நெரிசலை  பயன்படுத்தி பயணிகளின் செல்போன் மற்றும் பணத்தை  திருடிவந்த நவோனியா கும்பலைச் சேர்ந்த கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மிக நுணுக்கமான திட்டங்களுடன் செயல்பட்டுக் கைவரிசையை காட்டும் நவோனியா கும்பலிடம் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனக் காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னைச் சென்ட்ரல் மற்றும் புறநகர் மின்சார ரயில் நிலையங்களில் பயணிகள் தங்களின் பயணச்சீட்டைப் பெறுவதற்காக வரிசையில் காத்திருக்கும் போது, அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அவர்கள் மீது துணியை  போடுவது போல போட்டு அவர்களின் மொபைல்போன் மற்றும் பணத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் அண்மையில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இந்தக் கொள்ளைக் கும்பலின் கைவரிசை அடுத்தடுத்து அரங்கேறிய நிலையில் ரயில்வே போலீசார்  தனிப்படை அமைத்துத் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். அதே திருட்டுக் கும்பல் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னை மெரினா கடற்கரையில் அதிகளவு மக்கள் கூடுவதைச் சாதகமாக பயன்படுத்தி தங்களின் திருட்டு கைவரிசையைக் காட்டுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

அப்படியாகக் கடந்த ஞாயிற்றுக் கிழமைச் சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்களிடம் திருட்டு வேலையைக் காண்பிக்க முயன்ற கும்பலைக் காவல்துறையினர் கையும் களவுமாகப் பிடித்தனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் நவோனியா கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதும், பெரும்பாலும் ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

பல்வேறு மாநிலங்களில் உள்ள ரயில்நிலையங்கள் உட்பட பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களுக்குள் புகுந்து அசால்டாக மொபைல் போன் மற்றும் பணத்தை திருடிய இக்கும்பல் தற்போது தமிழகத்தில் நுழைந்துள்ளது.

திருட்டில் ஈடுபடும் போது அவர்களின் செயல்களை மறைக்கத் துண்டு, கைக்குட்டை அல்லது செய்தித் தாள்களைப் பயன்படுத்தி கையை மறைத்துத் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவதையே அவர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள் என்பது விசாரணையில் உறுதியாகியுள்ளது. பட்ட பகலிலும் கூட அருகில் இருப்பவர்களுக்குக் கூட சந்தேகம் வராமல் மொபைல்போன்களைத் திருடுவதில் கில்லாடிகள் என்பதும் அவர்களின் கடந்த கால திருட்டுச் சம்பவங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.

பொதுவாக ஒவ்வொரு திருட்டுச் சம்பவத்தின் போது 2 முதல் மூன்று பேர் சேர்ந்து ஈடுபடுவார்கள் எனவும், கூட்டமான இடங்களில் பொதுமக்களின் கவனத்தை ஒருவர் திசை திருப்பும் நேரம் பார்த்து மீதமிருக்கும் இருவர் திட்டமிட்ட படி தங்களின் திருட்டுத் தொழிலில் ஈடுபடுவார்கள் எனவும் கூறப்படுகிறது.

தேவை ஏற்படும் பட்சத்தில் சிறுவர்களையும் பன்படுத்தி, குறிப்பிட்ட நபர்களை இடிப்பது போல இடிப்பதும், அவர்களிடம் சண்டைப் போடுவது போலவும் சில திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றிருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

திருட்டில் ஈடுபடுவோர்ப் பெரும்பாலும் இளைஞர்கள் என்பதால் செல்போன் திருடுவதைப் பார்த்துவிட்டாலும் பிடிக்க முடியாத அளவிற்கு வேகமாகத் தப்பி ஓடிவிடுவதையும் நவோனியா கும்பல் வாடிக்கையாக வைத்துள்ளனர். ஒரு நகரத்தில் ஒரு வாரம் தங்கியிருந்து தங்களால் இயன்ற அளவு திருடிவிட்டு அடுத்த வாரம் வேறு ஒரு நகரத்திற்கு நவோனியா கும்பல் இடம்பெயருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

காவல்துறையினரிடம் சிக்காமல் இருக்கவே இந்தப் புதிய யுத்தியை நவோனியா கும்பல் கையாண்டு வருவதாகவும், இதுவரைப் பல்வேறு நகரங்களில் கைவரிசையைக் காட்டிவிட்டு சென்னைக்கு வந்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு கும்பல் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் மீதமிருக்கும் கும்பலைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

தமிழகத்தில் மொபைல் போன் திருட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், ரயில்வே பாதுகாப்பு படை, தமிழ்நாடு ரயில்வே போலீஸ் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் இணைந்து நவோனியா கும்பல் குறித்தும் பல்வேறு எச்சரிக்கைகளை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளனர்.

மிக நுணுக்கமாகத் திட்டமிட்டு கொள்ளையில் ஈடுபடும் கும்பலை கண்டறிவதும், கண்காணிப்பதும் மிகவும் கடினமானது என்பதால் பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: chennai policetn policeNavonia theft gang threatening Chennai - Police warn the public
ShareTweetSendShare
Previous Post

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

Related News

குண்டு வேண்டாம்… துப்பாக்கி வேண்டாம்… வால்வு ஒன்று போதும்… : இந்தியாவின் கையில் பாகிஸ்தானின் மரணக் கயிறு? – ஆஸி.,யின் ஷாக் ரிப்போர்ட்!

இந்தியாவை பகைத்ததால் வினை : துபாய் மூலம் இந்திய அரிசியை இறக்குமதி செய்யும் வங்கதேசம்!

முக்கிய கமாண்டர்களின் தொடர் கொலைகளில் விலகாத மர்மம் : உயிருக்கு அஞ்சி மறைந்து வாழும் லஷ்கர் தலைவர்!

இறுதி கட்டத்தை நெருங்கும்”மிஷன் 2026″ : அமித்ஷா சூளுரையால் கவனம் பெறும் பஸ்தர் பகுதி!

உலக புகழை துறந்து ஆன்மிக பாதைக்கு மாறிய “ஆஜானுபாகு” : பிருந்தாவன் ஆசிரமத்தில் தன்னார்வ சேவையாற்றிய வீடியோவால் நெகிழ்ச்சி!

இந்திய சந்தைகளில் புதிய உச்சத்தை தொட்ட ஆப்பிள் தயாரிப்புகள் : 4-வது காலாண்டில் 102.5 பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டி சாதனை!

Load More

அண்மைச் செய்திகள்

டிரம்பின் திடீர் அறிவிப்பால் உலகளாவிய பதற்றம் : மீண்டும் அணு ஆயுத சோதனைகளை தொடங்கும் அமெரிக்கா?

விண்ணில் சொர்க்க அரண்மனை : 4 எலிகளுடன் விண்வெளிக்கு பறந்த 3 சீன வீரர்கள்!

இந்து மனைவியின் மத நம்பிக்கையை மதிக்காத “ஜெ.டி.வான்ஸ்” : அவசரப்பேச்சால் அரசியல் வாழ்க்கையில் எழுந்த சர்ச்சை…!

பிற நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதி அதிகரிப்பு!

வாஜ்பாய் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி!

சபரிமலை மண்டல, மகரவிளக்கு சீசன் – ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

மாநிலத்தின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் – பிரதமர் மோடி

ஆசியக் கோப்பையை 48 மணி நேரத்துக்குள் ஒப்படைக்க வேண்டும் – மொஹ்சின் நக்விக்கு பிசிசிஐ எச்சரிக்கை!

புதுச்சேரியின் விடுதலை நாள் – தேசியக் கொடியை ஏற்றி வைத்த முதலமைச்சர் ரங்கசாமி!

ராஜஸ்தான் : பள்ளி வேனும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து – 2 மாணவிகள் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies