இந்திய குடியரசுத் துணைத் தலைவராக தமிழர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது எனப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துச் சென்னையில் பேசியவர்,
குடியரசு துணைத் தலைவராக தமிழர் தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி என்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் அவையை சிறப்பாக நடத்துவார் என்பதில் ஐயமில்லை என அவர் குறிப்பிட்டார்.
2026 சட்டமன்ற தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப் பெறும் என்றும் அந்த தேர்தலோடு திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் என்றும் 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.