‘முண்டாசுக் கவிஞர்’ மகாகவி சுப்ரமணிய பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள ரமண மகரிஷி சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின் போது, தில்லி தமிழ்ச் சங்க நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டார்கள்.