பின்லாந்தில் வாழ ஆசையா? : உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாட்டில் பொன்னான வாய்ப்பு!
Jan 14, 2026, 11:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பின்லாந்தில் வாழ ஆசையா? : உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாட்டில் பொன்னான வாய்ப்பு!

Murugesan M by Murugesan M
Sep 14, 2025, 09:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடான பின்லாந்து, நிரந்தரக் குடியேற்றத்துக்கான கதவுகளைத் திறந்து வைத்துள்ளது. நிரந்தரமாகக் குடியேற விரும்பும் இந்தியர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பை அந்நாடு வழங்கத் தொடங்கியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா அனைத்துத் துறைகளிலும் சர்வ தேச அளவில் முன்னணியில் உள்ளது. விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாகும் என்று கணிக்கப் பட்டுள்ளது.

இருந்தாலும், வெளிநாட்டில் நிரந்தரக் குடியுரிமை பெறும் விருப்பம் இந்தியர்களிடையே அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்திய குடியுரிமையைத் துறந்துள்ளனர்.

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இருந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இது குறைவு தான் என்றாலும் வெளிநாட்டுக் குடியுரிமையை ஏற்றுக்கொள்ளும் இந்தியர்களின் மனநிலையையே இந்தப் புள்ளிவிவரம் காட்டுகிறது.

வெளிநாடுகளில் குடியேற விரும்பும் இந்தியர்களில் அமெரிக்கா, கனடா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளே முதலிடத்தைப் பிடித்துள்ளன. அதற்கு அடுத்த இடத்தில் பின்லாந்து உள்ளது.

ஆயிரக்கணக்கான ஏரிகள் மற்றும் காடுகளுடன் கூடிய இயற்கை அழகு, சுத்தமான, பாதுகாப்பான மற்றும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட நகரங்கள், வடக்கு விளக்குகள் மற்றும் வெள்ளைக் கோடை இரவுகள், சிறந்த சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி மற்றும் சமூகப் பாதுகாப்பை ஆதரிக்கும் காரணங்களால்,பின்லாந்து உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 8-வது ஆண்டாக முதலிடத்தில் இருக்கிறது.

இந்நிலையில், பின்லாந்து, இந்தியர்களுக்கான நிரந்தரக் குடியேற்றத்துக்கான வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்த நிரந்தரக் குடியிருப்பு அனுமதி, எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் அந்நாட்டில் தங்க அனுமதி அளிக்கிறது.

பின்லாந்தில் காலவரையின்றி வேலைச் செய்யவும், குடும்பத்தை ஸ்பான்சர்ஷிப்பின் மூலம் அழைத்துக் கொள்ளவும், சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு, பள்ளிகள் மற்றும் ஓய்வூதியங்களைப் பெற்றுக்கொள்ளவும், ஷெங்கன் நாடுகளுக்கு விசா இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் பயணம் செய்யவும், அரசின் நிதியுதவி மற்றும் சலுகைகள், அரசின் வீட்டுவசதி உதவிகள் மற்றும் அரசு வங்கிகளில் கடன்களைப் பெற்றுக் கொள்ளவும் பின்லாந்து அனுமதி அளித்துள்ளது.

அந்நாட்டின் A-வகைக் குடியிருப்பு அனுமதிப்பத்திரத்தில் குறைந்தது 4 ஆண்டுகள் தொடர்ந்து பின்லாந்தில் தங்க இருக்கும் இந்தியர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை தரப்படுகிறது. இது வரும் ஜனவரியில் இருந்து 6 ஆண்டுகளாக மாற்ற படுகிறது. அதில் குறைந்தது தொடர்ந்து 2 ஆண்டுகள் பின்லாந்திலேயே தங்கியிருந்திருக்க வேண்டும்

குறைந்தபட்ச ஆண்டு வருமானம் 41.3 லட்சம் அல்லது பின்லாந்தில் அங்கீகரிக்கப்பட்ட முதுகலைப் பட்டம், இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம், அல்லது அந்நாட்டு உயர்நிலை மொழித் திறன் இருக்கும் இந்தியர்கள் இந்த நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, காவல்துறைக் குற்றப் பதிவுகள் இல்லாமல் இருக்கவேண்டும். தற்போது மாணவர் விசா அல்லது தற்காலிக விசாவில் இருப்பவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Tags: Want to live in Finland? : A golden opportunity in the happiest country in the worldபின்லாந்தில் வாழ ஆசையா?
ShareTweetSendShare
Previous Post

தொழிலாளர்கள் கைது எதிரொலி : தென்கொரியாவில் ட்ரம்பிற்கு வலுக்கும் எதிர்ப்பு!

Next Post

சென்னையில் கனமழை!

Related News

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies