பின்லாந்தில் வாழ ஆசையா? : உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாட்டில் பொன்னான வாய்ப்பு!
Jul 24, 2026, 10:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பின்லாந்தில் வாழ ஆசையா? : உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாட்டில் பொன்னான வாய்ப்பு!

Murugesan M by Murugesan M
Sep 14, 2025, 09:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடான பின்லாந்து, நிரந்தரக் குடியேற்றத்துக்கான கதவுகளைத் திறந்து வைத்துள்ளது. நிரந்தரமாகக் குடியேற விரும்பும் இந்தியர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பை அந்நாடு வழங்கத் தொடங்கியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா அனைத்துத் துறைகளிலும் சர்வ தேச அளவில் முன்னணியில் உள்ளது. விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாகும் என்று கணிக்கப் பட்டுள்ளது.

இருந்தாலும், வெளிநாட்டில் நிரந்தரக் குடியுரிமை பெறும் விருப்பம் இந்தியர்களிடையே அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்திய குடியுரிமையைத் துறந்துள்ளனர்.

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இருந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இது குறைவு தான் என்றாலும் வெளிநாட்டுக் குடியுரிமையை ஏற்றுக்கொள்ளும் இந்தியர்களின் மனநிலையையே இந்தப் புள்ளிவிவரம் காட்டுகிறது.

வெளிநாடுகளில் குடியேற விரும்பும் இந்தியர்களில் அமெரிக்கா, கனடா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளே முதலிடத்தைப் பிடித்துள்ளன. அதற்கு அடுத்த இடத்தில் பின்லாந்து உள்ளது.

ஆயிரக்கணக்கான ஏரிகள் மற்றும் காடுகளுடன் கூடிய இயற்கை அழகு, சுத்தமான, பாதுகாப்பான மற்றும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட நகரங்கள், வடக்கு விளக்குகள் மற்றும் வெள்ளைக் கோடை இரவுகள், சிறந்த சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி மற்றும் சமூகப் பாதுகாப்பை ஆதரிக்கும் காரணங்களால்,பின்லாந்து உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 8-வது ஆண்டாக முதலிடத்தில் இருக்கிறது.

இந்நிலையில், பின்லாந்து, இந்தியர்களுக்கான நிரந்தரக் குடியேற்றத்துக்கான வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்த நிரந்தரக் குடியிருப்பு அனுமதி, எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் அந்நாட்டில் தங்க அனுமதி அளிக்கிறது.

பின்லாந்தில் காலவரையின்றி வேலைச் செய்யவும், குடும்பத்தை ஸ்பான்சர்ஷிப்பின் மூலம் அழைத்துக் கொள்ளவும், சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு, பள்ளிகள் மற்றும் ஓய்வூதியங்களைப் பெற்றுக்கொள்ளவும், ஷெங்கன் நாடுகளுக்கு விசா இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் பயணம் செய்யவும், அரசின் நிதியுதவி மற்றும் சலுகைகள், அரசின் வீட்டுவசதி உதவிகள் மற்றும் அரசு வங்கிகளில் கடன்களைப் பெற்றுக் கொள்ளவும் பின்லாந்து அனுமதி அளித்துள்ளது.

அந்நாட்டின் A-வகைக் குடியிருப்பு அனுமதிப்பத்திரத்தில் குறைந்தது 4 ஆண்டுகள் தொடர்ந்து பின்லாந்தில் தங்க இருக்கும் இந்தியர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை தரப்படுகிறது. இது வரும் ஜனவரியில் இருந்து 6 ஆண்டுகளாக மாற்ற படுகிறது. அதில் குறைந்தது தொடர்ந்து 2 ஆண்டுகள் பின்லாந்திலேயே தங்கியிருந்திருக்க வேண்டும்

குறைந்தபட்ச ஆண்டு வருமானம் 41.3 லட்சம் அல்லது பின்லாந்தில் அங்கீகரிக்கப்பட்ட முதுகலைப் பட்டம், இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம், அல்லது அந்நாட்டு உயர்நிலை மொழித் திறன் இருக்கும் இந்தியர்கள் இந்த நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, காவல்துறைக் குற்றப் பதிவுகள் இல்லாமல் இருக்கவேண்டும். தற்போது மாணவர் விசா அல்லது தற்காலிக விசாவில் இருப்பவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Tags: Want to live in Finland? : A golden opportunity in the happiest country in the worldபின்லாந்தில் வாழ ஆசையா?
ShareTweetSendShare
Previous Post

தொழிலாளர்கள் கைது எதிரொலி : தென்கொரியாவில் ட்ரம்பிற்கு வலுக்கும் எதிர்ப்பு!

Next Post

சென்னையில் கனமழை!

Related News

தரகர் கூலியாக 10 பில்லியன் டாலர் நிதி உதவி : அமெரிக்காவிடம் கையேந்தும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை… நாட்டை சிதைக்காதீர்கள் – இந்திரேஷ் குமார்

மத்திய அமைச்சர்களுடன் கரப்பான் பூச்சி கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு!

எதிர்க்கட்சிகள் அமளி : திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை ஒடுக்கும் பாகிஸ்தான் – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு!

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணி தாமதம் – ரயில்வே அமைச்சகம்

Load More

அண்மைச் செய்திகள்

மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் மீது தகுதி நீக்க நடவடிக்கை – சபாநாயகரிடம் அமமுக சார்பில் மனு!

தூத்துக்குடி அருணாச்சலம் மரணத்திற்கு காரணமாக காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

காவிரி நீர் பங்கீடு விவகாரம் : ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு 70,485 பேர் விண்ணப்பம்!

இன்றைய தங்கம் விலை!

ஜனநாயக நாடுகளின் அமைதியை சீர்குலைக்கும் DEEP STATE : டெல்லி மாணவர் போராட்டத்தின் பின்னணியில் யார்? – சிறப்பு தொகுப்பு!

கேரள ஆர்எஸ்எஸ் நிர்வாகி சீனிவாசன் கொலை வழக்கு – பிஎஃப்ஐ நிர்வாகி முகமது அலி கைது!

டெல்லி போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு மதமாற்ற அமைப்புகள் – அம்பலமான அதிர்ச்சி தகவல்!

சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரப்ப முயற்சி – டெல்லி காவல்துறை எச்சரிக்கை!

நீண்ட தூர இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட ‘குஷா’ ஏவுகணை – முதற்கட்ட சோதனை வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies