தொழிலாளர்கள் கைது எதிரொலி : தென்கொரியாவில் ட்ரம்பிற்கு வலுக்கும் எதிர்ப்பு!
Jul 24, 2026, 10:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

தொழிலாளர்கள் கைது எதிரொலி : தென்கொரியாவில் ட்ரம்பிற்கு வலுக்கும் எதிர்ப்பு!

Murugesan M by Murugesan M
Sep 13, 2025, 09:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜார்ஜியாவில் அமெரிக்கக் குடியேற்ற அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 300க்கும் மேற்பட்ட தென்கொரிய தொழிலாளர்களை எட்டு நாட்களுக்குப் பிறகு, தனிவிமானத்தில் அந்நாட்டு அரசு பத்திரமாக அழைத்து வந்துள்ளது. அதிபரின் தலைமைத் தளபதி காங் ஹூன்-சிக், இஞ்சியோன் சர்வதேச விமான நிலையத்துக்கு நேரிலேயே சென்று தொழிலாளர்களை வரவேற்றுளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள ஹூண்டாய்-எல்ஜி பேட்டரி தொழிற்சாலையில், பல தென்கொரிய தொழிலாளர்கள் பணி புரிந்து வந்தனர். கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி, அமெரிக்கக் குடியேற்ற துறை அதிகாரிகள் அந்தத் தொழிற்சாலையில் திடீர்  சோதனையில் ஈடுபட்டனர்.

மொத்தம் 475 தொழிலாளர்கள் சட்ட விரோதமாக உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 300க்கும் மேற்பட்டோர்  தென் கொரிய தொழிலாளர்கள் உட்பட கைது செய்யப் பட்ட அனைவரும், கைகள், கணுக்கால் மற்றும் இடுப்பில் சங்கிலிகளால் கட்டப்பட்ட நிலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.

இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. தனது முக்கிய நட்பு நாடான தென் கொரியாவின் தொழிலாளர்களைப் போர்க் கைதிகளைப் போல அமெரிக்கா நடத்தி இருப்பது, தென் கொரிய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உடனே அமெரிக்காவுக்குச் சென்ற தென் கொரிய வெளியுறவு அமைச்சர்  சோ ஹியூன் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோவைச் சந்தித்து, தொழிலாளர்கள் கைது செய்யப்பட்ட வீடியோ பகிரங்கமாக வெளியிடப்பட்டதால், தனது நாட்டு மக்கள் “பெரும் வேதனைகளையும் அதிர்ச்சியும்” அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், ​​தென் கொரிய தொழிலாளர்களுக்குப் புதிய விசா வகையை அறிமுகப்படுத்த தென் கொரியா-அமெரிக்கக் கூட்டுப் பணிக்குழுவை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்தச் சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கைது செய்யப்பட்ட தென் கொரிய தொழிலாளர்களுக்கு ஒரு சலுகையை வழங்கினார். அதன்படி, அவர்கள் அமெரிக்காவிலேயே தங்கி, அமெரிக்கர்களுக்குப் பயிற்சி அளிக்க முன்வந்தால், அவர்களுக்குத் தொடர்ந்து அங்கு தங்க அனுமதி வழங்கப்படும் என ட்ரம்ப் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், ட்ரம்பின் இந்தச் சலுகையை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் தாயகம் திரும்புவதற்கே விருப்பம் தெரிவித்தனர் என்று தென் கொரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தாயகம் திரும்பிய 330 தொழிலாளர்களில், ஹூண்டாய் நிறுவனத்தைச் சேர்ந்த 66 தொழிலாளர்களும், 264 எல்ஜி நிறுவனத் தொழிலாளர்களும் இருந்தனர். எல்ஜி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த பேருந்துகள் மூலம் தொழிலாளர்கள் வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தொழிலாளர்களுக்கு ஒரு மாத கால சம்பளத்துடன் விடுப்பும், உடல் மற்றும் மன நலனுக்கான கூடுதல் சுகாதார சிகிச்சையும் அளிக்கப்படும் என அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதிபராக 100வது நாளைக் குறிக்கும் செய்தியாளர்  கூட்டத்தில் பேசிய தென்கொரிய அதிபர் லீ, தென் கொரிய தொழிலாளர்களைக் கைது செய்தது, இருநாடுகளுக்கும் இடையே நிச்சயமற்ற வர்த்தக-வணிகச் சூழலை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இனி, தென் கொரிய நிறுவனங்களை அமெரிக்காவில் முதலீடு செய்வதை மறுபரிசீலனைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தங்கள் நாட்டுக்குள் சுற்றுலா விசாக்களில் வந்த அமெரிக்கர்கள், மொழி நிறுவனங்களில் ஆங்கிலம் கற்பிப்பதைச் சரியானது என்று தென்கொரியா நினைக்கிறது. ஆனால், அமெரிக்கா மட்டும் தென்கொரிய தொழிலாளர்களைச் சட்ட விரோதக் குடியேற்றமாக கருதி கடுமையாக நடவடிக்கை எடுக்கிறது.

இனி பொருத்தமான விசா இல்லாமல் தென்கொரியாவில் அமெரிக்கர்கள் ஆங்கிலம் கற்பிப்பது சட்டவிரோதமாக்கப்படும் என்றும், அதற்கு அபராதம், நாட்டை விட்டு வெளியேறும் உடனே உத்தரவுகள் மற்றும் மறு நுழைவுத் தடைகள் ஏற்படுத்தப்படும் என்றும் தெளிவுப்படுத்தியுள்ளார்.

மேலும், அமெரிக்காவின் 25 சதவீத வரியை 15 சதவீதமாகக் குறைப்பதற்கான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில், தேசிய நலன்களுக்கு எதிரானதாகக் கருதப்படும் எந்த முடிவையும் அரசு எடுக்காது என்றும் தென்கொரிய அதிபர் லீ உறுதிப்படுத்தியுள்ளார்.

Tags: Donald Trumpதென்கொரியாWorkers' arrests spark strong opposition to Trump in South Koreaதொழிலாளர்கள் கைது எதிரொலிதென்கொரியாவில் ட்ரம்பிற்கு வலுக்கும் எதிர்ப்பு
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவை அதிரவைத்த சார்லி கிர் கொலை – குற்றவாளி சிக்கியது எப்படி?

Next Post

பின்லாந்தில் வாழ ஆசையா? : உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாட்டில் பொன்னான வாய்ப்பு!

Related News

தரகர் கூலியாக 10 பில்லியன் டாலர் நிதி உதவி : அமெரிக்காவிடம் கையேந்தும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

ஜனநாயக நாடுகளின் அமைதியை சீர்குலைக்கும் DEEP STATE : டெல்லி மாணவர் போராட்டத்தின் பின்னணியில் யார்? – சிறப்பு தொகுப்பு!

அரிய வகை கனிமங்கள் : ஜப்பானுக்கு ஏற்றுமதியை நிறுத்திய சீனா – சிறப்பு தொகுப்பு!

பாகிஸ்தானுக்கு அடுத்த’செக்’ : சிந்து நதியில் நீர்வளத் திட்டங்களை தீவிரப்படுத்தும் இந்தியா -சிறப்பு தொகுப்பு!

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை… நாட்டை சிதைக்காதீர்கள் – இந்திரேஷ் குமார்

மத்திய அமைச்சர்களுடன் கரப்பான் பூச்சி கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு!

மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் மீது தகுதி நீக்க நடவடிக்கை – சபாநாயகரிடம் அமமுக சார்பில் மனு!

எதிர்க்கட்சிகள் அமளி : திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை ஒடுக்கும் பாகிஸ்தான் – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு!

தூத்துக்குடி அருணாச்சலம் மரணத்திற்கு காரணமாக காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

காவிரி நீர் பங்கீடு விவகாரம் : ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு 70,485 பேர் விண்ணப்பம்!

இன்றைய தங்கம் விலை!

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணி தாமதம் – ரயில்வே அமைச்சகம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies