தொழிலாளர்கள் கைது எதிரொலி : தென்கொரியாவில் ட்ரம்பிற்கு வலுக்கும் எதிர்ப்பு!
Sep 10, 2026, 06:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

தொழிலாளர்கள் கைது எதிரொலி : தென்கொரியாவில் ட்ரம்பிற்கு வலுக்கும் எதிர்ப்பு!

Murugesan M by Murugesan M
Sep 13, 2025, 09:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜார்ஜியாவில் அமெரிக்கக் குடியேற்ற அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 300க்கும் மேற்பட்ட தென்கொரிய தொழிலாளர்களை எட்டு நாட்களுக்குப் பிறகு, தனிவிமானத்தில் அந்நாட்டு அரசு பத்திரமாக அழைத்து வந்துள்ளது. அதிபரின் தலைமைத் தளபதி காங் ஹூன்-சிக், இஞ்சியோன் சர்வதேச விமான நிலையத்துக்கு நேரிலேயே சென்று தொழிலாளர்களை வரவேற்றுளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள ஹூண்டாய்-எல்ஜி பேட்டரி தொழிற்சாலையில், பல தென்கொரிய தொழிலாளர்கள் பணி புரிந்து வந்தனர். கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி, அமெரிக்கக் குடியேற்ற துறை அதிகாரிகள் அந்தத் தொழிற்சாலையில் திடீர்  சோதனையில் ஈடுபட்டனர்.

மொத்தம் 475 தொழிலாளர்கள் சட்ட விரோதமாக உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 300க்கும் மேற்பட்டோர்  தென் கொரிய தொழிலாளர்கள் உட்பட கைது செய்யப் பட்ட அனைவரும், கைகள், கணுக்கால் மற்றும் இடுப்பில் சங்கிலிகளால் கட்டப்பட்ட நிலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.

இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. தனது முக்கிய நட்பு நாடான தென் கொரியாவின் தொழிலாளர்களைப் போர்க் கைதிகளைப் போல அமெரிக்கா நடத்தி இருப்பது, தென் கொரிய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உடனே அமெரிக்காவுக்குச் சென்ற தென் கொரிய வெளியுறவு அமைச்சர்  சோ ஹியூன் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோவைச் சந்தித்து, தொழிலாளர்கள் கைது செய்யப்பட்ட வீடியோ பகிரங்கமாக வெளியிடப்பட்டதால், தனது நாட்டு மக்கள் “பெரும் வேதனைகளையும் அதிர்ச்சியும்” அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், ​​தென் கொரிய தொழிலாளர்களுக்குப் புதிய விசா வகையை அறிமுகப்படுத்த தென் கொரியா-அமெரிக்கக் கூட்டுப் பணிக்குழுவை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்தச் சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கைது செய்யப்பட்ட தென் கொரிய தொழிலாளர்களுக்கு ஒரு சலுகையை வழங்கினார். அதன்படி, அவர்கள் அமெரிக்காவிலேயே தங்கி, அமெரிக்கர்களுக்குப் பயிற்சி அளிக்க முன்வந்தால், அவர்களுக்குத் தொடர்ந்து அங்கு தங்க அனுமதி வழங்கப்படும் என ட்ரம்ப் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், ட்ரம்பின் இந்தச் சலுகையை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் தாயகம் திரும்புவதற்கே விருப்பம் தெரிவித்தனர் என்று தென் கொரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தாயகம் திரும்பிய 330 தொழிலாளர்களில், ஹூண்டாய் நிறுவனத்தைச் சேர்ந்த 66 தொழிலாளர்களும், 264 எல்ஜி நிறுவனத் தொழிலாளர்களும் இருந்தனர். எல்ஜி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த பேருந்துகள் மூலம் தொழிலாளர்கள் வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தொழிலாளர்களுக்கு ஒரு மாத கால சம்பளத்துடன் விடுப்பும், உடல் மற்றும் மன நலனுக்கான கூடுதல் சுகாதார சிகிச்சையும் அளிக்கப்படும் என அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதிபராக 100வது நாளைக் குறிக்கும் செய்தியாளர்  கூட்டத்தில் பேசிய தென்கொரிய அதிபர் லீ, தென் கொரிய தொழிலாளர்களைக் கைது செய்தது, இருநாடுகளுக்கும் இடையே நிச்சயமற்ற வர்த்தக-வணிகச் சூழலை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இனி, தென் கொரிய நிறுவனங்களை அமெரிக்காவில் முதலீடு செய்வதை மறுபரிசீலனைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தங்கள் நாட்டுக்குள் சுற்றுலா விசாக்களில் வந்த அமெரிக்கர்கள், மொழி நிறுவனங்களில் ஆங்கிலம் கற்பிப்பதைச் சரியானது என்று தென்கொரியா நினைக்கிறது. ஆனால், அமெரிக்கா மட்டும் தென்கொரிய தொழிலாளர்களைச் சட்ட விரோதக் குடியேற்றமாக கருதி கடுமையாக நடவடிக்கை எடுக்கிறது.

இனி பொருத்தமான விசா இல்லாமல் தென்கொரியாவில் அமெரிக்கர்கள் ஆங்கிலம் கற்பிப்பது சட்டவிரோதமாக்கப்படும் என்றும், அதற்கு அபராதம், நாட்டை விட்டு வெளியேறும் உடனே உத்தரவுகள் மற்றும் மறு நுழைவுத் தடைகள் ஏற்படுத்தப்படும் என்றும் தெளிவுப்படுத்தியுள்ளார்.

மேலும், அமெரிக்காவின் 25 சதவீத வரியை 15 சதவீதமாகக் குறைப்பதற்கான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில், தேசிய நலன்களுக்கு எதிரானதாகக் கருதப்படும் எந்த முடிவையும் அரசு எடுக்காது என்றும் தென்கொரிய அதிபர் லீ உறுதிப்படுத்தியுள்ளார்.

Tags: தென்கொரியாWorkers' arrests spark strong opposition to Trump in South Koreaதொழிலாளர்கள் கைது எதிரொலிதென்கொரியாவில் ட்ரம்பிற்கு வலுக்கும் எதிர்ப்புDonald Trump
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்காவை அதிரவைத்த சார்லி கிர் கொலை – குற்றவாளி சிக்கியது எப்படி?

Next Post

பின்லாந்தில் வாழ ஆசையா? : உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாட்டில் பொன்னான வாய்ப்பு!

Related News

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதி காக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி

கீவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசி தாக்குதல்; ரஷ்யா அதிரடி

இந்தியாவுக்கு எதிராக வெறுப்புப் பேச்சு; திருந்தாத ஹபீஸ் சயீதின் மகன் ஹபீஸ் தல்ஹா சயீத்,

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies