நேபாள மக்களின் குறையாத கோபம் : அடக்கி வாசிக்கும் 'நெபோ கிட்ஸ்'!
Jan 14, 2026, 10:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

நேபாள மக்களின் குறையாத கோபம் : அடக்கி வாசிக்கும் ‘நெபோ கிட்ஸ்’!

Murugesan M by Murugesan M
Sep 12, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நேபாளத்தில் ஏற்பட்ட போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இருந்தபோதிலும், நெபோ கிட்ஸ்-கள் மீதான அந்நாட்டு மக்களின் கோபம் இன்னமும் குறைந்ததாகத் தெரியவில்லை. என்ன காரணம்?. இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

சில நாட்களுக்கு முன்பு நேபாளத்தில் ஏற்பட்ட போராட்டம் ஒட்டுமொத்த உலகையே அதிரச் செய்தது. இந்தப் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  படுகாயமடைந்தனர். இந்தப் போராட்டத்திற்கான பல காரணங்களில் ஒன்றாக அமைந்தவர்கள் நெபோ கிட்ஸ்.

நேபாளத்தில் வசிக்கும் நான்கில் ஒருவர் வறுமை  கோட்டிற்கு கீழ் உள்ளதாகக் கூறப்படுகிறது. அந்நாட்டு மக்களில் பலர்  படிப்புக்கு ஏற்ற வேலை  கிடைக்காமலும், உரிய கல்வி மற்றும் மருத்துவம் கிடைக்காமலும் தவித்து வருகின்றனர்.

ஆனால் மறுபுறம், அரசியல்வாதிகள் மற்றும் நேபாள மூத்த அதிகாரிகளின் குழந்தைகள் சொகுசான வாழ்க்கை நடத்தி வருகின்றனர். அவர்களில் பலர் நேபாளத்தில் நிலவும் வறுமையின் வாடையே தெரியாமல் வெளிநாடுகளில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

மேலும், வெளிநாடுகளில் தாங்கள் எங்கெல்லாம் பயணித்தோம், என்னென்ன உணவுகளை உட்கொண்டோம், எந்தெந்த பொருட்களை வாங்கினோம் என்பது குறித்து சோஷியல் மீடியாவில் அப்டேட் செய்வதை முக்கிய கடமையாகவே அவர்கள் மேற்கொண்டு வந்தனர்.

நேபாள இளைஞர்களின் கோபத்திற்கு இவையும் முக்கிய காரணமாக அமைந்தன. தற்போது போராட்டங்கள் ஓய்ந்துள்ள நிலையிலும், நெபோ கிட்ஸ்களின் வாழ்க்கைமுறைத் தொடர்ந்து பேசுபொருளாகவே இருந்து வருகிறது.

எந்தெந்த அமைச்சர்களின் குழந்தைகள், எத்தகைய ஆடம்பர வாழ்க்கை நடத்தினார்கள் என்பது குறித்த வீடியோவை  பலர் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். மேலும், நெபோ கிட்ஸ்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தபோது, நேபாளத்தில் சாதாரண மக்கள் எத்தகைய இன்னல்களை  சந்தித்து வந்தார்கள் என்பதையும் அந்த வீடியோவில் அவர்கள் விளக்கியுள்ளனர்.

நேபாளத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் Birodh Khatiwada, முன்னாள் பிரதமர் Sher Bahadur Deuba, நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் Pushpa Kamal Dahal, முன்னாள் சட்ட அமைச்சர் Bindu Kumar Thapa உள்ளிட்டோரின் மகன்களும், மகள்களும் அதிக விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளனர். தங்களின் ஆடம்பர வாழ்க்கை  குறித்து முந்தைய ஆண்டுகளில் அவர்கள் இணையத்தில் பகிர்ந்த புகைப்படங்கள், தற்போது மீண்டும் கவனம் பெற்று வருகின்றன.

நேபாள  போராட்டம் அந்நாட்டின் நெபோ கிட்ஸ்களை மட்டுமல்ல, வறுமை  சூழலில் உள்ள மற்ற நாடுகளின் நெபோ கிட்ஸ்களையும் கலக்கமடைய செய்துள்ளது. எனவே, தங்களது ஆடம்பர வாழ்க்கை  குறித்து இணையத்தில் பகிர்வதை அவர்கள் முடிந்தவரை  தவிர்த்து வருகின்றனர்.

Tags: nepalNepal issueThe unquenchable anger of the Nepali people: 'Nebo Kids' who suppress their angerநேபாள மக்களின் குறையாத கோபம்
ShareTweetSendShare
Previous Post

ஞான பாரதம் போட்டலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Next Post

அமெரிக்காவை அதிரவைத்த சம்பவம் : ஒற்றை தோட்டாவில் ட்ரம்ப்பின் நண்பர் சுட்டுக்கொலை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies