சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 12 வயது சிறுவனை வளர்ப்பு நாய் கடித்தது. அம்மம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்.
இவரது மகன் ரட்சதன், தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தனது நண்பரை பார்ப்பதற்காக சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென வந்த வளர்ப்பு நாய் ரட்சதனின் தலை, முகம், கை, கால் உள்ளிட்ட இடங்களில் கடித்துக் குதறியது.
அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.