பிரிட்டனில் புலம்பெயர்ந்தோருக்கு வலுக்கும் எதிர்ப்பு - 1,50,000 பேர் பங்கேற்ற பேரணியால் குலுங்கிய லண்டன் மாநகரம்!
Mar 15, 2026, 03:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரிட்டனில் புலம்பெயர்ந்தோருக்கு வலுக்கும் எதிர்ப்பு – 1,50,000 பேர் பங்கேற்ற பேரணியால் குலுங்கிய லண்டன் மாநகரம்!

Murugesan M by Murugesan M
Sep 15, 2025, 12:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரிட்டனில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ஒன்றரை லட்சம் பேர் நடத்திய பிரமாண்ட பேரணியால் லண்டன் மாநகரமே அதிர்ந்து போனது. வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்களுக்கு எதிராக எதற்கு எதிர்ப்பு கிளம்புகிறது? விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

வெளிநாடுகளில் இருந்து இடம்பெயர்ந்த குடியேறிகளால் ஐரோப்பா முழுவதும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகப் பரவலாக பேசப்படுகிறது. குறிப்பாக, இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோருக்கு எதிர்ப்பு வலுவாக உள்ளது. அந்த வகையில், தீவிர வலதுசாரி ஆதரவாளரான டாமி ராபின்சன் தலைமையில் நடைபெற்ற பேரணியால் லண்டன் மாநகரமே குலுங்கியது.

லண்டன் நகரின் தேம்ஸ் நதிக்கரையை ஒட்டிய பிக் பென் பகுதி முதல் வாட்டர்லூ பகுதி வரை நடைபெற்ற மாபெரும் பேரணியில், சுமார் ஒன்றரை லட்சம் பேர்க் கலந்து கொள்ளத் திரும்பும் திசையெல்லாம் மனிதத் தலைகளாக காணப்பட்டன.

வெளிநாடுகளில் இருந்து குடியேறியவர்களுக்கு எதிராகவும், தேசத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் பேரணியில் பங்கேற்றவர்கள் முழக்கமிட அசாதரண சூழல் காணப்பட்டது.

டாமி ராபின்சனின் பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பாசிசத்துக்கு எதிரான பேரணி என்ற பெயரில் இனவெறிக்கு எதிரானவர்கள் போராட்டத்தை முன்னெடுக்க, அது போலீசாருக்குப் பெரும் தலைவலியாக மாறியது. எங்கள் நாட்டில் வந்து எங்களுக்கு எதிராகவே பேரணியா? என டாமி ராபின்சன் ஆதரவாளர்கள் கொந்தளிக்க நிலைமை கை மீறி போனது. ஒரு கட்டத்தில் டாமி ராபின்சன் ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்களை நெருங்கி விட, அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர்.

ஆனால் கோபத்தின் உச்சியில் இருந்த வலதுசாரி ஆதரவாளர்கள் போலீசார் மீதே தாக்குதல் நடத்த கலவரம் வெடித்தது. டாமி ராபின்சன் ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் 26 பேர் காயமடைந்துவிட, அமைதிக்குக் குந்தகம் விளைவித்தாக 25 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனிடையே போராட்டக்காரர்களுடன் ஆன்லைனில் பேசிய எலான் மஸ்க், பிரிட்டன் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும், புதிய அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டும் எனப் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கட்டுப்பாடற்ற புலம்பெயர்வு பிரிட்டனை அழித்துவிடும் என எலான் மஸ்க் எச்சரிக்க, விவகாரம் பூதாகரமாகி உள்ளது.

சமீப காலமாகவே, உலக நாடுகளில், ஆட்சியாளர்களுக்கு எதிரான அதிருப்தி, ஆட்சி மாற்றம் ஆகியவைத் தொடர் கதையாகி உள்ளன. சமீபத்தில், GEN-Z இளைஞர்கள் நடத்திய போராட்டத்தால் நேபாளத்தில் சர்மா ஒலி அரசாங்கம் கவிழ்ந்தது. அதே போன்றதொரு எழுச்சி போராட்டம் பிரிட்டனிலும் கிளம்பி இருக்க, பிரச்னையை அந்நாட்டு அரசாங்கம் எவ்வாறு கையாளப்போகிறது என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tags: LondonAnti-immigrant protests intensify in Britain - London rocked by rally attended by 15thousands people!லண்டன் மாநகரம்
ShareTweetSendShare
Previous Post

உலகிலேயே முதன்முறையாக, மூங்கில்களை கொண்டு எத்தனால் தயாரிக்கும் ஆலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

Next Post

அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று கூறியதற்கு பெரும் வரவேற்பு – செங்கோட்டையன்

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies