அமெரிக்காவுக்கும் வெனிசுலாவுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், வெனிசுலா மக்களுக்குத் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவுக்கும், வெனிசுலா நாட்டுக்கும் இடையே நீண்ட காலமாகப் பிரச்சனை இருந்து வருகிறது. டிரம்ப் அதிபரானது முதல் இந்தப் பிரச்சனை மீண்டும் துளிர் விட்டுள்ளது.
இதனிடையே வெனிசுலாவில் உள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு எதிராக ஆளில்லா விமானங்கள் மூலம் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருவதாகச் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்க வெனிசுலாவும் தனது ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது.