இந்திய- பசிபிக் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி - கடல் பாதுகாப்பு அரணாக இந்தியா!
Sep 12, 2026, 02:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்திய- பசிபிக் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி – கடல் பாதுகாப்பு அரணாக இந்தியா!

Murugesan M by Murugesan M
Sep 16, 2025, 07:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பசிபிக் பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் முயற்சியில் சீனா தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது. இதன் எதிரொலியாக, இந்தியா, அமெரிக்கா,ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும், அப்பகுதியில் தங்கள் இராணுவப் பலத்தை அதிகரித்து வருகின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்தியப் பெருங்கடலும் பசிபிக் பெருங்கடலும் இணைக்கப்பட்ட பகுதியே இந்திய- பசிபிக். இந்த வார்த்தைக் கடந்த 10 ஆண்டுகளாகத் தான் அதிகம் பேசப்படுகிறது.

ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நான்கு கண்டங்களை உள்ளடக்கிய இந்தப் பெருங்கடல்கள் வழியாகவே உலகின் பெரும்பாலான வர்த்தகம் நடைபெறுகிறது.

உலகின் பாதி மக்களுக்கும், உலகின் பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கும், உலகின் மிகப்பெரிய ராணுவங்களில் ஏழுக்கும் தாயகமாக இந்தப் பகுதி உள்ளது

உற்பத்தி, தொழில்நுட்பம், நிதி, எரிசக்தி, விவசாயம், மீன்பிடித்தல் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட உலகளாவிய தொழில்களுக்கு இந்தப் பகுதி மிக முக்கியமானதாக விளங்குகிறது.

இதுமட்டுமில்லாமல், கடல்சார் ஹைட்ரோகார்பன்கள், கடற்பரப்பு கனிமங்கள் மற்றும் அரிய பூமி உலோகங்கள் உள்ளிட்ட கடல் வளங்களின் பரந்த இருப்புக்கள் இப்பகுதியில் உள்ளன. ஆகவே, அந்நிய நேரடி முதலீட்டுக்கான சிறந்த ஆதாரமாகவும் இந்தப் பகுதி விளங்குகிறது.

குறிப்பாக, இந்தியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் இப்பகுதியில் அமைந்துள்ளன.

“இரண்டு கடல்களின் சங்கமம்” என்ற தலைப்பில் முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே 2007-ல் இந்திய நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் தான் முதன்முறையாக, இந்தோ-பசிபிக் பகுதியின் நவீன விளக்கம் வெளிப்பட்டது. அதன் பிறகு, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளும் குவாத் என்ற அமைப்பை ஏற்படுத்தின.

2008-ல் இந்தியப் பெருங்கடலில் முதன்முதலில் கப்பல்களைத் தீவிரமாக நிலைநிறுத்தியதிலிருந்து, சீனா தன் ஆதிக்கத்தைக் கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியது.

2019-ல் சுதந்திரமான மற்றும் திறந்த இந்திய-பசிபிக்” என்ற கொள்கை ஆவணத்தை வெளியிட்டது இந்தியா. ஆசிய – பசிபிக் மண்டலத்தின் 14 ஆவது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, கடல்சார்ப் பாதுகாப்பை மேம்படுத்துவது முதல் கடல் வளங்களைப் பாதுகாத்தல் வரை ஒரு புதிய செயல்திட்டத்தை அறிவித்தார்.

தொடர்ந்து, 2022-ல் இந்திய-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பை அமெரிக்கா வெளியிட்டது. இந்தச் சூழலில், இப்பகுதி பெருமளவில் இராணுவ மயமாகி வருகிறது. சமீப காலமாக இந்தப் பகுதியில், ஏவுகணைப் பரிசோதனை நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.

சீனா தனது முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ICBM DF-41 ஏவுகணைச் சோதனையை நடத்தியது. 15,000 கிலோ மீட்டர் வரம்பு கொண்ட இந்த ஏவுகணை, அமெரிக்காவின் நிலப்பரப்பை அடைய கூடிய திறன் கொண்டதாகும்.

வட கொரியாவும் இப்பகுதியில் அமெரிக்காவைத் தாக்கக் கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைப் பரிசோதனையை வெற்றிகரமாகச் செய்துள்ளது.

கடந்த ஆண்டு, இந்தப்பகுதிக்கான மொத்த பாதுகாப்பு செலவில் சீனாவின் பங்கு 45 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. முன்னதாக, 2023-ல் பசிபிக் பகுதி இராணுவ பயிற்சிகளுக்கு மட்டும் சீனா 15.3 பில்லியன் டாலர்களைச் செலவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு, ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்த 55.9 பில்லியன் டாலர்களை ஜப்பான் அரசு ஒதுக்கியது. இது முந்தைய ஆண்டை விட 16.5 சதவீதம் அதிகமாகும்.

ஆசிய-பசிபிக் பகுதிக்கான தென் கொரியாவின் ராணுவச் செலவு ஆண்டுதோறும் 2 சதவீதம் அதிகரித்து, இன்னும் 5 ஆண்டுகளில், 50.1 பில்லியன் டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு செலவுகளுக்காக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்துக்கும் அதிகமாகச் செலவழிக்கும் தைவான் அதை அடுத்த 5 ஆண்டுகளில் 5 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

2021-ல் ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா மூன்று நாடுகளும் AUKUS ஒப்பந்தம் ஏற்படுத்தின. இந்த ஒப்பந்தத்தின் மூலம் சீனாவின் இந்திய -பசிபிக் பெருங்கடல் ஆக்கிரமிப்பை எதிர்க்கும் வகையில் ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் வழங்கப்பட உள்ளன.

இதற்காக, அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்க, 8 பில்லியன் டாலர் முதலீட்டில் கப்பல் கட்டுமான தளத்தை ஆஸ்திரேலியா அமைத்து வருகிறது.

பசிபிக் பாதுகாப்புக்காக 10.7 பில்லியன் டாலர்களும், குவாத் பாதுகாப்பு அமைப்புக்கு 200 மில்லியன் டாலர்களும், அமெரிக்க இந்திய -பசிபிக் கட்டளை உள்கட்டமைப்புக்கு ஒரு பில்லியன் டாலர்களும் வழங்க திட்டமிட்டுள்ள அமெரிக்கா, மொத்தமாக 150 பில்லியன் டாலர்த் தொகுப்பை இந்தப்பகுதி இராணுவச் செலவுக்கு ஒதுக்கீடு செய்ய உள்ளது.

தற்சார்பு மற்றும் தன்னம்பிக்கைப் பாரதம் என்ற குறிக்கோளுடன் செயல்படும் இந்தியாவின் கப்பல் கட்டும் தளங்களில் தற்போது 64 கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்டுமானத்தில் உள்ளன.

Tags: கடல் பாதுகாப்பு அரணாக இந்தியாIndiaindian navyChina is trying to dominate the Indo-Pacific Ocean - India as a bulwark of maritime securityஇந்திய- பசிபிக் பெருங்கடல்
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம், நாட்டின் வரலாற்றில் ஒரு அத்தியாயம் அல்ல, சகாப்தம் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

Next Post

உரிய விலை கிடைக்காமல் உதிர்ந்து விழும் பூக்கள் – விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்குமா தமிழக அரசு?

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies