உரிய விலை கிடைக்காமல் உதிர்ந்து விழும் பூக்கள் - விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்குமா தமிழக அரசு?
Jun 15, 2026, 02:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உரிய விலை கிடைக்காமல் உதிர்ந்து விழும் பூக்கள் – விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்குமா தமிழக அரசு?

Murugesan M by Murugesan M
Sep 16, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் உரிய விலைக் கிடைக்காமல் அரளிப்பூ செடிகளில் இருந்து பூக்கள் உதிர்ந்து கிடப்பதால், விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி கிராமத்தில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் ஏராளமான பூக்கள் பயிரிடப்பட்டுள்ளன.

அதில் அரளி, நந்தியாவட்டம் பூக்கள் மட்டும் 250 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலையில், திருமண சீசன் முடிவதன் காரணமாக, இந்தப் பூக்கள் ஒரு கிலோவுக்கு 10 ரூபாயிலிருந்து 30 ரூபாய் வரை மட்டுமே விலைக் கிடைக்கிறது.

அதே வேளையில் பூக்களைப் பறிக்க வரும் ஒரு தொழிலாளிக்கு நாள் ஒன்றுக்கு, 50 ரூபாய் வரைக் கூலி கொடுக்க வேண்டி இருப்பதால் நஷ்டத்தைத் தவிர்க்க பூக்கள் பறிக்கும் பணியை விவசாயிகள் கைவிட்டுள்ளனர்.

தங்கள் உழைப்பின் பலனாக வளர்ந்த பூக்களுக்குச் சந்தையில் விலை இல்லாமல் போய்விட்டதாக விவசாயிகள் வேதனைத் தெரிவித்துள்ளனர். மேலும், தங்கள் பகுதியில் சென்ட் தொழிற்சாலை அமைத்துத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒருதரப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செடிகளில் பூத்துக் குலுங்கிய அரளிப் பூக்கள் பறிக்கப்படாமல் மண்ணோடு மண்ணாகி கிடப்பது, உழைப்பும், முதலீடும் வீணான விவசாயிகளின் ரத்தத்தைக் கொந்தளிக்க செய்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

தமிழக அரசு இந்த விவகாரத்தில் தனிக் கவனம் செலுத்தி, பனமரத்துப்பட்டியில் மலர்ச் சந்தை அமைத்துக் கொடுத்து தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என மற்றொரு தரப்பினர் இன்னொரு கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர்.

விலைக் கிடைக்காமல் வீணாகும் அரளிப் பூக்களால், சேலம் மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், இவர்களின் கோரிக்கைகளுக்குத் தமிழக அரசு செவி சாய்க்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Tags: தமிழக அரசுFlowers are falling off without getting the right price - will the Tamil Nadu government protect the livelihood of farmers?உதிர்ந்து விழும் பூக்கள்
ShareTweetSendShare
Previous Post

இந்திய- பசிபிக் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி – கடல் பாதுகாப்பு அரணாக இந்தியா!

Next Post

மழைநீர் வடிகால்களில் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு – அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார்!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More

அண்மைச் செய்திகள்

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies