மலையாளச் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வரும் பாசில் ஜோசப், புதிதாகத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.
கோதா, மின்னள் முரளி படங்களின் மூலம் பிரபலமான இயக்குநர் பாசில் ஜோசப், தற்போது முன்னணி நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்மேன், மரணமாஸ் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
தற்போது சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், பாசில் ஜோசப் எண்டர்டெயின்மெண்ட் என்ற பெயரில் தனது புதிய தயாரிப்பு நிறுவனத்தை அவர் தொடங்கியுள்ளார்.