நவராத்திரி விழா கொண்டாட்டம்... - சூடுபிடிக்கும் கொலு பொம்மை விற்பனை....!
Jan 14, 2026, 06:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நவராத்திரி விழா கொண்டாட்டம்… – சூடுபிடிக்கும் கொலு பொம்மை விற்பனை….!

Murugesan M by Murugesan M
Sep 18, 2025, 07:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் ராஜாஜி காதி பவனில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கொலு பொம்மைகள் விற்பனைக் களைகட்டியுள்ளது. இது குறித்து விவரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு…

இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளுள் ஒன்று நவராத்திரி விழா. மக்களை துன்புறுத்தி வந்த மகிசாசுரனுடன் 9 நாட்கள் கடும் போர் புரிந்த ஆதிபராசக்தி, அந்த அசுரனை 10-வது நாளில் வதம் செய்தார். மக்களைப் பெருங்களிப்பில் ஆழ்த்திய இந்த வெற்றியையே மக்கள் ஆண்டுதோறும் நவராத்திரி விழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நவராத்திரி விழாவையொட்டி மக்கள் தங்கள் வீடுகளிலும், கோவில்களிலும் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்துவது வாடிக்கை. அந்த வகையில் இந்த ஆண்டு நவராத்திரி விழா நாடு முழுவதும் செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 1-ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது.

இந்நிலையில், நவராத்திரி விழாவையொட்டி சேலம் மாவட்டத்திலுள்ள ராஜாஜி காதி பவனில் கொலுபொம்மை விற்பனை களைகட்டியுள்ளது. இதனால் பல வகையான கொலு பொம்மைகளை வாங்கிச் செல்ல அங்கு மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இங்கு விற்கப்படும் பொம்மைகள் அனைத்தும் கைவினைக் கலைஞர்களின் உழைப்பால் உருவாக்கப்பட்டவை என்பது தனிச் சிறப்பு. அதன் காரணமாகவே பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் இங்கு கூட்டம் கூட்டமாக வந்து கொலு பொம்மைகளை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

குறிப்பாக ஏராளமான தாய்மார்கள் அமெரிக்கா, லண்டன், ஜெர்மனி உள்ளிட்ட பல வெளிநாடுகளில் வசிக்கும் தங்கள் பிள்ளைகளுக்குக் கொலு பொம்மைகளை இங்கிருந்து வாங்கி அனுப்பி வருகின்றனர்.

வெளிநாடு மட்டுமின்றிப் பெங்களூர், ஓசூர், ஹைதராபாத், சென்னை போன்ற நகரங்களுக்கும், இங்கிருந்து அதிக அளவில் பொம்மைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இந்த ஆண்டு துவக்கத்திலேயே ராஜாஜி காதி பவனில் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டிய ஆர்டர்கள் அதிகரித்துள்ளதால் அதீத மகிழ்ச்சியில் இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

நவராத்திரி கொண்டாட்டத்தில் மக்கள் மனதில் மகிழ்ச்சியை பரப்பும் சேலம் ராஜாஜி காதி பவனின் கொலு பொம்மைகள், கைவினை கலைஞர்களின் திறமையையும், வாழ்வாதாரத்தையும் உலகளவில் காட்சிப்படுத்தியிருக்கின்றன என்றால் மிகையில்லை.

Tags: Navratri festival celebration... - Hot sale of Kolu dolls....!நவராத்திரி விழா கொண்டாட்டம்கொலு பொம்மை விற்பனை
ShareTweetSendShare
Previous Post

கழிவுநீரால் நிரம்பி வழியும் சாலைகள் : சொந்த வீடுகளை விட்டு வெளியேறும் மக்களின் அவலம்!

Next Post

ஊருக்குள் ஊடுருவும் யானைகளால் பரிதவிக்கும் மக்கள் – செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த அரசுக்கு கோரிக்கை!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies