மன்னிப்பு கேட்டாரா நடுவர் பைகிராஃப்ட்? : PCB வெளியிட்ட வீடியோ திட்டவட்டமாக மறுத்த ICC!
Nov 8, 2025, 08:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

மன்னிப்பு கேட்டாரா நடுவர் பைகிராஃப்ட்? : PCB வெளியிட்ட வீடியோ திட்டவட்டமாக மறுத்த ICC!

Web Desk by Web Desk
Sep 19, 2025, 02:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய அணி வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்க மறுத்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியது.

இதற்குப் போட்டி நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் மன்னிப்பு கேட்டதாகத் தவறாக சித்தரித்துப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வீடியோ வெளியிட்டிருப்பது பேசு பொருளாகியுள்ளது.

ஆசியக்கோப்பை  தொடரில் கடந்த 14ம் தேதி துபாயில் நடந்த போட்டியில் பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தி இமாலய வெற்றிப் பெற்றது இந்தியா.

போட்டிக்கு முன்னதாகவோ, போட்டிக்குப் பிறகோ இரு அணி வீரர்களுக்கும் ஒருவருக்கொருவர்  கைகுலுக்கவில்லை… டாஸ் போடும்போது, போட்டி அம்பயர் ஆண்டி பைகிராஃப்ட் கைகுலுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகப் பாகிஸ்தான் அணி குற்றம்சாட்டியது.

இந்நிலையில், ஆசிய கோப்பையின் சர்ச்சை நாயகனான ஜிம்பாப்வே முன்னாள் வீரரும் ஆசிய கோப்பை ஐசிசி அம்பயருமான ஆண்டி பைகிராப்ட், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா மற்றும் அணி மேலாளரிடம் மன்னிப்புக் கேட்டதாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

அத்துடன் செப்டம்பர் 14ம் தேதி நடந்த சம்பவம் தொடர்பாக நடத்தை விதிகள் மீறப்பட்டதா என்பதை விசாரிக்க ஐசிசி விருப்பம் தெரிவித்தது என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அறிக்கை  கூறியது.

இந்த அறிக்கையுடன் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா மற்றும் பயிற்சியாளர் ஹெசன் உடன் பைகிராப்ட் பேசிய வீடியோவையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எக்ஸ் தளத்தில் பகிர்ந்தது.

ஆனால் பாகிஸ்தான் கூற்றுக்களை ஐசிசி வட்டாரங்கள் மறுத்துள்ளன. கைலுக்கலை நிறுத்திய காரணத்திற்காகப் பாகிஸ்தான் கேப்டனிடமோ அல்லது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடமோ பைகிராஃப்ட் மன்னப்பு கோரவில்லை என்றும், தவறான தகவல் தொடர்புக்காக மட்டுமே அவர் வருத்தம் தெரிவித்திருந்தார் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது ஐசிசி.

அம்பயர் ஆண்டி பைகிராஃப்ட், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் வழிகாட்டுதல்படியே செயல்பட்டுள்ளதால், அவர் மீது எந்தத் தவறும் இல்லை என்றும், இந்த விஷயத்தில் ஆண்டி பைகிராஃபட் குற்றவாளி அல்ல என்றும் ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும் தவறான தகவல் தொடர்புக்கான பொறுப்பு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அரங்க மேலாளரிடம் உள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

கைகுலுக்கல் விவகாரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விசாரணை கோருவது ஒருபக்கம் இருந்தாலும், தகுந்த ஆதாரங்களை வழங்கினால் மட்டுமே எந்தவொரு விசாரணையும் நடைபெறும் என ஐசிசி வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்தியா – பாகிஸ்தான் போட்டியின்போது கைகுலுக்க வேண்டாம் என்ற கொள்கை பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நன்கு அறிந்திருந்ததாகவும், இருப்பினும் இந்த நாடகத்தை ஏன் உருவாக்கியது என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டுள்ளது.

Tags: Did umpire Bycroft apologize?: ICC categorically denies PCB's videoநடுவர் பைகிராஃப்ட்?
ShareTweetSendShare
Previous Post

ஐபோன் 17 சீரிஸ் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் -அதிகாலை முதலே குவிந்த இளைஞர்கள்!

Next Post

கிருஷ்ணகிரி : மறைந்த இந்து முன்னணி நிறுவனரின் 98வது பிறந்தநாள் விழா!

Related News

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரை கைப்பற்றுமா இந்தியா? – ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்

விற்பனைக்கு வரும் நடப்பு சாம்பியன் RCB? : SEBI அறிக்கையில் வெளியான தகவலால் அதிர்ச்சி – சிறப்பு தொகுப்பு!

ஜவுளி பூங்காவிற்கு பதில் சாயப்பட்டறை ஆலையா? : கொந்தளிக்கும் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

செமிகண்டக்டர் உற்பத்தியில் சீனாவை முந்தும் இந்தியா – சிறப்பு தொகுப்பு!

டிரம்பின் கருத்தால் சர்ச்சை – ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி வரும் பாக்.,?

உலகளாவிய உற்பத்தியில் வேகமான வளர்ச்சி – இந்தியாவை ஏற்றுமதி தளமாக மாற்றும் பன்னாட்டு நிறுவனங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

பீஹாரில் அதிக வாக்குப்பதிவு மீண்டும் என்டிஏ ஆட்சி அமையும் என்பதை உறுதிப்படுத்துகிறது – பிரதமர் மோடி

சமூகம் கருணையை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே செல்போன் டார்ச் அடித்து அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்!

கோவை மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

திரைப்பட புகழை நம்பி பெரிய அரசியல் கட்டமைப்பை உருவாக்கியதாக சிலர் நினைக்கிறார்கள் – கே.பி.முனுசாமி

வந்தே மாதரம் தாயை புகழ்ந்து பாடும் பாடல் – ஹெச்.ராஜா

4 வந்தே பாரத் ரயில் சேவை – இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

5 நாட்கள் பயணமாக இன்று ஆப்பிரிக்கா செல்கிறார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு!

தருமபுரம் ஆதீனம் மணிவிழா – யானை, குதிரை, பசு உள்ளிட்ட விலங்குகளுக்கு சிறப்பு பூஜை!

கடற்படையில் INS இஷாக் ஆய்வுக் கப்பல் இணைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies