மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் லேக் டவுன் ஸ்ரீபள்ளி நலச்சங்கம் சார்பில் 10 லட்சம் செய்திதாள்களை கொண்டு துர்கா பூஜை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் பெங்காலிகளால் கொண்டாடப்படும் மிக முக்கிய விழாவாகத் துர்கா பூஜை உள்ளது.
இந்தாண்டிற்கான துர்கா பூஜையை ஒட்டி கொல்கத்தாவின் லேக் டவுன் ஸ்ரீபள்ளி நலச்சங்கம் சார்பில் 58வது ஆண்டாகப் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
10 லட்சம் செய்தி தாள்களை கொண்டு கொல்கத்தா நகரத்தில் வளர்ந்து வரும் வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் ‘நபிகரோன்’ என்ற கருப்பொருளை கொண்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.