புரட்டாசி மகாளய அமாவாசை - முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்!
Sep 21, 2025, 03:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புரட்டாசி மகாளய அமாவாசை – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்!

Web Desk by Web Desk
Sep 21, 2025, 12:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி, சென்னை மயிலாப்பூரில் உள்ள
கபாலீஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் மகாளய அமாவாசையின்போது மக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில் சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள், தெப்பக்குளத்தில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

அப்போது முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி அவர்கள் வழிபட்டனர். இந்த வழிபாட்டால் வாழ்வில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அமைதி கிடைக்க முன்னோர்களின் ஆன்மா உதவும் என மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

மகாளய அமாவாசையையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். காவிரி ஆற்றில் புனித நீராடிய மக்கள், தங்கள் முன்னோர்கள் நினைவாக வழிபட்டு தர்ப்பணம் கொடுத்தனர்.

இதேபோன்று, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர், ராமநாத சுவாமி கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாத சுவாமி மற்றும் ஸ்ரீபர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.

தென்னகத்து காசி என்றழைக்கப்படும் ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் மகாளய அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

மகாளய அமாவாசையையொட்டி சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர். காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என்றும், கோயில் மலைப் பகுதியில் இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது எனவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: month of PurattasiteppakulamChennaiKapaleeswarar templemylaporeMahalaya Amavasya
ShareTweetSendShare
Previous Post

பாக்ராம் விமான தளத்தின் கட்டுப்பாட்டை ஒப்படைக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – ஆப்கனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

Next Post

சென்னையில் சேவா பாரதி தமிழ்நாடு அமைப்பு சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டி!

Related News

அக்டோபர் 11 முதல் மதுரையில் இருந்து தேர்தல் சுற்றுப்பயணம் – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!

குறுகிய அரசியல் பார்வை உள்ளவர்களே மொழியை பிரச்னையாக மாற்றுகின்றனர் – தர்மேந்திர பிரதான்

சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!

பழனி ஆண்டவர் கலை கல்லூரி, தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் – ABVP கண்டனம்!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் சுதாகர் ரெட்டி மரியாதை!

இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் சேவா பாரதி தமிழ்நாடு அமைப்பு சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டி!

புரட்டாசி மகாளய அமாவாசை – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்!

பாக்ராம் விமான தளத்தின் கட்டுப்பாட்டை ஒப்படைக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – ஆப்கனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

தவெக தலைவர் விஜய் பொது இடங்களில் மற்ற கட்சி தலைவர்களை ஒப்பிட்டு பேசுவது சரியல்ல – நயினார் நாகேந்திரன்

முதற்கட்ட புல்லட் ரயில் சேவை 2027 டிசம்பர் மாதம் தொடங்கும் – அஸ்வினி வைஷ்ணவ்

கோவை அருகே இணைப்பு விழா – நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!

நாளை முதல் அமலுக்கு வருகிறது புதிய ஜிஎஸ்டி விதிமுறை – அத்தியாவசிய பொருட்களின் விலை குறைகிறது!

எச்-1பி விசா கட்டண உயர்வு புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் – வெள்ளை மாளிகை அறிவிப்பு!

H1-B விசாவின் கட்டண உயர்வு இன்று முதல் அமல் – விமான கட்டணங்கள் உயர்வு!

H1-B விசா கட்டண உயர்வால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆராய்ந்து வருகிறோம் – வெளியுறவுத்துறை அமைச்சகம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies