புரட்டாசி மகாளய அமாவாசை - முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்!
Apr 29, 2026, 11:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புரட்டாசி மகாளய அமாவாசை – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 21, 2025, 12:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி, சென்னை மயிலாப்பூரில் உள்ள
கபாலீஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் மகாளய அமாவாசையின்போது மக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில் சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள், தெப்பக்குளத்தில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

அப்போது முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி அவர்கள் வழிபட்டனர். இந்த வழிபாட்டால் வாழ்வில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அமைதி கிடைக்க முன்னோர்களின் ஆன்மா உதவும் என மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

மகாளய அமாவாசையையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். காவிரி ஆற்றில் புனித நீராடிய மக்கள், தங்கள் முன்னோர்கள் நினைவாக வழிபட்டு தர்ப்பணம் கொடுத்தனர்.

இதேபோன்று, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர், ராமநாத சுவாமி கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாத சுவாமி மற்றும் ஸ்ரீபர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.

தென்னகத்து காசி என்றழைக்கப்படும் ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் மகாளய அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

மகாளய அமாவாசையையொட்டி சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர். காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என்றும், கோயில் மலைப் பகுதியில் இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது எனவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: mylaporeMahalaya Amavasyamonth of PurattasiteppakulamChennaiKapaleeswarar temple
ShareTweetSendShare
Previous Post

பாக்ராம் விமான தளத்தின் கட்டுப்பாட்டை ஒப்படைக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – ஆப்கனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

Next Post

சென்னையில் சேவா பாரதி தமிழ்நாடு அமைப்பு சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டி!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies