பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டம் பெண்களை தொழில் முனைவோராக்கிய பாஜகவினர்!
Jan 14, 2026, 01:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டம் பெண்களை தொழில் முனைவோராக்கிய பாஜகவினர்!

Murugesan M by Murugesan M
Sep 22, 2025, 08:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மோடியின் தொழில் மகள் விழா என்ற பெயரில் பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி கோவையில் உதவி கிடைக்காத ஆயிரத்து 500 பெண்களை  பாஜகவினர் தொழில் முனைவோராக்கியுள்ளனர். அது பற்றிய செய்தி தொகுப்பை  தற்போது பார்க்கலாம்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 75 ஆவது பிறந்த நாளை நாடு முழுவதும் பலரும் கோலாகலமாகக் கொண்டாடினர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்குப் பாஜகவினர் நலத்திட்ட உதவிகளையும் செய்தனர்.

அந்த வகையில் கோவை மாநகரப் பாஜகவினரும் பிரதமர் மோடியின் பிறந்த நாளை உற்சாகமாகக் கொண்டாடினர். அதன் ஒரு பகுதியாக மாநகர் மாவட்ட பாஜகவினர் ஆயிரத்து 500 பெண்களைத் தொழில் முனைவோராக மாற்றும் திட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

அதன்படி உதவி கிடைக்காத ஆயிரத்து 500 பெண்களைத் தேர்ந்தெடுத்தனர். அதில் தேவைப்படுவோருக்குத் தொழில் பயிற்சியும் அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்குத் தொழில் புரிவதற்கான உபகரணங்கள் வழங்கும் விழா மோடியின் தொழில் மகள் விழா என்ற பெயரில் கோவைக் கணபதியில் உள்ள வாஜ்பாய் திடலில் நடைபெற்றது.

பெண்களை தொழில் முனைவோராக மாற்றும் இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், பாஜகத் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து பயனாளிகளுக்கு நிகழ்ச்சியில் தொழில் புரிவதற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன.

சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்பட்ட இந்த உதவி தங்கள் வாழ்வை மாற்றி அமைப்பதாகப் பயனாளிகள் தெரிவித்தனர். சொந்தக் காலில் நிற்க, வழிவகைச் செய்து கொடுத்த பாஜகவினருக்கு அவர்கள் நன்றித் தெரிவித்தனர்.

மாற்றுத் திறனாளியான தனது மகள் தையல் தொழில் தெரிந்தும் உதவி கிடைக்காமல் தவித்ததாகப் பயனாளியின் தாயார் ஒருவர் தெரிவித்தார். தன்னம்பிக்கையுடன் இருந்த தனது மகளுக்குப் பாஜகவினர் செய்த உதவி உத்வேகமாக இருப்பதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு திட்டங்களை வகுத்து வரும் பிரதமர் மோடிக்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் நன்றித் தெரிவித்தனர். மேலும் இந்த நாள் தங்களின் வாழ்வை மாற்றியமைக்கும் நாளெனப் பயனாளிகளுடன் வந்த குடும்பத்தினரும் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் உதவிக்காகக் காத்திருந்த பெண்களைத் தொழில் முனைவோராக்கிய பாஜகவினரின் செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Tags: kovaipm modi birthdayBJP turns women entrepreneurs into PM Modi's birthday celebration
ShareTweetSendShare
Previous Post

டவர் இல்லையா? NO PROBLEM! : வந்துவிட்டது BSNL-ன் சேட்டிலைட் போன்!

Next Post

உலகை விட்டு மறைந்த காந்த குரல் : ஜூபின் கர்க் மறைவால் கண்ணீர் கடலில் ரசிகர்கள்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies