விண்வெளியில் தொடங்கும் போர் : 'BODYGUARD SATELLITE-களை களமிறக்கும் இந்தியா!
Sep 24, 2025, 09:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

விண்வெளியில் தொடங்கும் போர் : ‘BODYGUARD SATELLITE-களை களமிறக்கும் இந்தியா!

Web Desk by Web Desk
Sep 23, 2025, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புவி சார் அரசியலின் அடுத்த போர் களமாக விண்வெளி மாறி வருகிறது. இதில், விண்வெளி செயற்கைக்கோள் பாதுகாப்பை இந்தியா தீவிரமாக்கி உள்ளது. பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள மெய்க்காப்பாளர்  செயற்கைக்கோள்களை உருவாக்கி வருகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

1980ம் ஆண்டுகளில், அப்போதைய அமெரிக்க அதிபர் ரீகன், சோவியத் அணுசக்தி பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தகர்க்க  செயற்கைக்கோள்களின் தொகுப்பை உருவாக்க வேண்டும் என்று கூறிய போது, அமெரிக்காவின் அதிபர்  கனவுலகில் இருந்து பேசுகிறார் என்று ஏளனம் செய்யப்பட்டார்.

கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா, ரீகனின் யோசனையை ஏற்றுக் கொண்டுள்ளது. கடந்த ஏப்ரலில், அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் ஸ்பிரிங்ஸ் நகரில்,சர்வதேச விண்வெளித் துறை மாநாடு நடந்தது.

இதில் சிறப்புரையாற்றிய அமெரிக்க விண்வெளிப் படைத் தளபதி ஜெனரல் ஸ்டீபன் வைட்டிங், இதுவரை எந்தப் போரும் விண்வெளியில் நடக்கவில்லை என்றும், இனி எல்லாப் போர்களும் விண்வெளியில் தான் நடக்கப் போகிறது என்றும் குறிப்பிட்டார்.

ஏற்கெனவே, விண்வெளியில் அமெரிக்காவின் செயற்கைக் கோள்கள் சுற்றுப்பாதைகள், அரிக்கப்பட்டு வருவதாக அமெரிக்கத் தேசிய கட்டளை ஆணையம் தெரிவித்தது. இதனையடுத்து, 2019-ல் அமெரிக்க விண்வெளிப் படை உருவாக்கப்பட்டது. “விண்வெளியில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துவதே இந்தப் படையின் நோக்கமாகும்.

விண்வெளித்துறையில் பெரிய சக்தியாக இருக்கும் அமெரிக்காவிடம் சுமார் 9,530 செயற்கைக் கோள்கள் உள்ளன. அடுத்தப்படியாக ரஷ்யாவிடம் 1,545 செயற்கைக் கோள்கள் உள்ளன. 900க்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களுடன் சீனா மூன்றாவது இடத்தில் உள்ளது. ஜப்பான் 205 செயற்கைக் கோள்களை வைத்துள்ளது. இந்தியா 100க்கும் மேற்பட்ட செயற்கைகோள்களை வைத்துள்ளது. பாகிஸ்தான் 8 செயற்கைக் கோள்களையே வைத்துள்ளது.

அமெரிக்கா விண்வெளியில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுப்பதில் மும்முரமாக உள்ள ரஷ்யாவும், சீனாவும், விண்வெளியில் செயற்கைக்கோள்களை அழிக்கக்கூடிய ஆயுதங்களை வெற்றிகரமாகப் பரிசோதனை செய்துள்ளது. கடந்த ஆண்டு, அண்டை நாட்டிலிருந்து வந்த விண்கலம், பூமியை மேப்பிங் செய்து கண்காணிக்கும் இராணுவ பயன்பாடுகளைக் கொண்ட இந்தியச் செயற்கைக்கோளுக்கு அருகில் 1 கிலோமீட்டர்  தூரத்துக்குள் வந்து சென்றது. இந்திய செயற்கைக் கோளுடன் மோதவில்லை என்றாலும், இந்தச் சம்பவம் ஒரு எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

இந்தச் சுழலில், தாக்குதல்களிலிருந்து செயற்கைக்கோள்களைப் பாதுகாக்கும் திறனை இந்தியாவும் மேம்படுத்தும் விதமாக, ‘Bodyguard’ செயற்கைக்கோள்களை உருவாக்கியுள்ளது. இந்த மெய்க்காப்பாளர்ச் செயற்கைக்கோள்கள் சீன விண்வெளிப் படைகளின் விண்வெளித் தாக்குதல்களுக்கு எதிராகப் பாதுகாக்கச் சுற்றுப்பாதையில் உள்ள இந்திய செயற்கைக்கோள்களுடன் இணைந்து பயன்படுத்தப்படும் கூட்டு சுற்றுப்பாதை  செயற்கைக்கோள்களாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்காக, சுமார் 50 கண்காணிப்பு செயற்கைக்கோள்களைத் தயாரிக்க 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் செயற்கைக்கோள்-பாதுகாப்பு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த தொடங்கியுள்ளது. இதில் முதலாவது ‘Bodyguard’ Satellite’ அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்,விண்வெளி அச்சுறுத்தல்களை விரைவாக அடையாளம் காண ஒளி கண்டறிதல் மற்றும் வரம்பு (LiDAR) செயற்கைக்கோள்களை ஏவுவதும் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், பூமி கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் மூலம் சுமார் 400க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் 24 மணி நேரமும் உழைத்ததாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே நாட்டின் சுமார் 7,000 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரை மற்றும் வடக்கு எல்லைகளைப் பாதுகாப்பதில் சுமார் 10 இந்திய செயற்கைக்கோள்கள் தற்போது 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன.

மற்ற நாடுகளின் உளவு செயற்கைக்கோள்களைக் கண்காணிக்கத் தனி செயற்கைக்கோள் கூட்டமைப்பை ( NETRA ) நேத்ரா Network for Tracking Space Objects and Analysis திட்டத்தின் கீழ் உருவாக்கி வருகிறது. உலகளாவிய விண்வெளி சக்தியாக உருவெடுத்துள்ள இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளுக்கு இணையாகச் செயற்கை கோள் எதிர்ப்பு செயற்கைகோள்களை விண்ணில் ஏவ உள்ளது.

Tags: விண்வெளிWar begins in space: India to launch 'BODYGUARD SATELLITES'BODYGUARD SATELLITEவிண்வெளியில் தொடங்கும் போர்ISROIndiachina
ShareTweetSendShare
Previous Post

பொக்கிஷமாக பார்க்கப்படும் மான் கொம்பு வண்டு : ஒரு வண்டு பல கோடி விலை போகுமாம்!

Next Post

லாலு குடும்பத்திற்குள் புதிய பூகம்பம் : லாலு, தேஜஸ்வியை UNFOLLOW செய்த மகள் ரோகிணி!

Related News

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் ஷாருக்கான்!

நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது – குடியரசு தலைவர் வழங்கினார்!

H-1B விசாவுக்கு போட்டியாக K விசா அறிமுகம் : அதிபர் ட்ரம்புக்கு அடிமேல் அடி கொடுக்கும் சீனா!

தற்சார்பு பாரதத்தை நோக்கி : GOOGLE MICROSOFT-க்கு மாற்றாக களமிறங்கும் ZOHO!

நடைமுறைக்கு வந்த ஜிஎஸ்டி 2.0 : 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கார்கள் விற்பனை!

“புவிசார் அரசியல் போர்” : H-1B விசா கட்டண உயர்வு ட்ரம்பிற்கு வலுக்கும் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

7 போர்களை நிறுத்தினேன், ஆனால் உக்ரைன் – ரஷ்யா போர்? – ட்ரம்ப் கவலை!

காஞ்சிபுரம் பட்டு ஜரிகைக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைப்பு – மூலப்பொருட்களின் செலவு 7 % குறையும் என தகவல்!

சிறந்த இசையமைப்பாளர் விருது – ஜி.வி.பிரகாஷூக்கு வழங்கினார் குடியரசு தலைவர்!

எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது!

குடியரசு துணை தலைவர் சிபி. ராதாகிருஷ்ணனுடன் தமிழக ஆளுநர் சந்திப்பு!

எண்ணெய்யை வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு இந்தியா, சீனா நிதி வழங்குகிறது – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடி கொடுத்த நவராத்திரி பரிசு தான் ஜிஎஸ்டி 2.0 – ஹெச். ராஜா பெருமிதம்!

தவெக தலைவர் விஜய்க்கு வருமானத்தை மறைத்ததற்காக ரூ.1.5 கோடி அபராதம் விதித்தது சரியே – உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வாதம்!

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நீலகிரியில் இ பாஸ் நடைமுறை நீக்கம் – இபிஎஸ் உறுதி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நவராத்திரி 2-ம் நாள் விழா – ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளிய ஆதிபராசக்தி தாயார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies