சீனாவுடன் சமரசம் செய்துகொண்ட அதிபர் ட்ரம்ப் : டிக்டாக் செயலியை முன்னிறுத்தி வெற்றிகண்ட ஜி ஜின்பிங்!
Nov 9, 2025, 09:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

சீனாவுடன் சமரசம் செய்துகொண்ட அதிபர் ட்ரம்ப் : டிக்டாக் செயலியை முன்னிறுத்தி வெற்றிகண்ட ஜி ஜின்பிங்!

Web Desk by Web Desk
Sep 23, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டிக்டாக் செயலிக்காக, சீனாவுடனான வர்த்தகத்தில் அதிபர் ட்ரம்ப் சமரசம் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில்.

சீனாவுடனான வர்த்தக விவகாரத்தில் அடம்பிடித்து வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்பை, டிக்டாக் செயலியை  காரணம் காட்டி ஜி ஜின்பிங் தன் வழிக்குக் கொண்டு வந்துள்ளார்.

அமெரிக்காவில் லட்சக்கணக்கான இளைஞர்களின் விருப்பமாக உள்ள டிக்டாக் செயலி, சீனாவை  தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. டிக் டாக் செயலி அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை  திருடுவதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அதிபர் ட்ரம்ப் கடுமையான நிபந்தனைகளை விதித்தார்.

அமெரிக்காவில் டிக்டாக் செயலி செயல்பட வேண்டும் என்றால், அதனை அமெரிக்க நிறுவனத்திடம் விற்க வேண்டும் அல்லது கணிசமான பங்கை அமெரிக்க நிறுவனத்திற்கு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த நிபந்தனைகளை ஏற்கவில்லை என்றால் டிக் டாக் செயலிக்கு முழுவதுமாகத் தடை விதிக்கப்படும் என்றும் அவர் அறிவிப்பு வெளியிட்டார்.

டிக் டாக் செயலிக்குத் தடை விதிப்பதற்கான கெடு மூன்று முறைத் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், டிக் டாக் விவகாரத்தில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒப்பந்தம் இறுதியாகி இருப்பதாகத் தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்திய அதிபர் ட்ரம்ப், டிக்டாக் செயலியை நிர்வகிக்கும் பொறுப்பை அமெரிக்க நிறுவனம் பெற்றுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார். சீனாவுடன் சிறந்ததொரு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் கருத்து தெரிவித்தார்.

ஆனால், சர்வதேச அரசியல் நிபுணர்கள் இந்த விவகாரத்தை வேறு விதமாகப் பார்க்கின்றனர். டிக்டாக் செயலி விவகாரத்தில் வெற்றிப் பெற்றுவிட்டதாக மார்த்தட்டி கொள்ளும் ட்ரம்ப், உண்மையில் தோல்வி மட்டுமே கண்டுள்ளதாக அவர்கள் அடித்துக் கூறுகின்றனர். சீன அதிபர் ஜி ஜின்பிங் அரசியல் சாணக்கியத்தில் கில்லாடி என்பதை நிரூபித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

தைவானுக்கு அமெரிக்கா வழங்கவிருந்த 400 மில்லியன் டாலர் நிதியுதவி நிறுத்தப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அரசியல் நிபுணர்கள், ஜி ஜின்பிங் செயலை ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.

டிக்டாக் செயலியை விட்டுக்கொடுப்பது போல் விட்டு கொடுத்து, தனது நாட்டிற்கு எதிரான அச்சுறுத்தலை ஜி ஜின்பிங் முறியடித்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். இது மட்டுமல்ல இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்திலும் அதிபர் ஜி ஜின்பிங் தனது தேவைகளை நிறைவேற்றிக் கொண்டுள்ளதாக அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

எப்படிப் பார்த்தாலும் சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடித்த கதையைத் தான் ஜி ஜின்பிங் அரங்கேற்றியிருப்பதாக அவர்கள் கிண்டலாகத் தெரிவிக்கின்றனர்.

Tags: அதிபர் ட்ரம்ப்டிக்டாக் செயலிஜி ஜின்பிங்President Trump reconciles with China: Xi Jinping wins by leveraging TikTok
ShareTweetSendShare
Previous Post

களைகட்டும் நவராத்திரி : கொலு பொம்மைகள் வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!

Next Post

சொந்த நாட்டு மக்கள் மீது குண்டு வீசிய பாகிஸ்தான் விமானப்படை : பெண்கள், குழந்தைகளின் உயிரை பறித்த சோக சம்பவம்!

Related News

பாகிஸ்தானின் கஹுதா அணுசக்தி தளம் மீது குண்டு வீச இந்திரா காந்தி அனுமதி அளிக்கவில்லை – ரிச்சர்ட் பார்லோ

இந்தியாவின் ஜெட் வேக பொருளாதார வளர்ச்சி : சொகுசு வீடுகளுக்கு டிமாண்ட் கொழிக்கும் ரியல் எஸ்டேட்!

தென்னாப்பிரிக்காவில் ஜி20 உச்சி மாநாடு : புறக்கணித்த ட்ரம்ப் – பின்னணி என்ன?

ஆஸி.க்கு எதிரான 5வது டி20 ரத்து – தொடரை வென்று இந்தியா அசத்தல்!

விமானச் சேவையை முடக்கிய GPS SPOOFING – டெல்லியில் இதுதான் முதல்முறை!

5 இந்தியர்களை கடத்திய தீவிரவாதிகள் – என்ன நடக்கிறது மாலியில்?

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வர் என்ன செய்கிறார்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 இறுதிப்போட்டி மழையால் ரத்து – தொடரை கைப்பற்றியது இந்தியா!

சமூகத்தை ஒன்றிணைக்கவே ஆர்எஸ்எஸ் அமைப்பு உருவானது – மோகன் பகவத்

சாதி, மதம் மூலம் மக்களிடையே காங்கிரஸ் பிளவை ஏற்படுத்துகிறது – ராஜ்நாத்சிங்

சாதி, பொருளாதார நிலையை பொருட்படுத்தாமல் அனைவரையும் நீதி சென்றடைய வேண்டும் – பிரதமர் மோடி

திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி – இபிஎஸ் விமர்சனம்!

தமிழ் இலக்கியத்திற்கு சமண மதம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது – சிபி.ராதாகிருஷ்ணன்

நவம்பர் 11-ம் தேதி பூடான் செல்கிறார் பிரதமர் மோடி – அந்நாட்டு மன்னர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்கிறார்!

அரசுமுறை பயணமாக அங்கோலா சென்ற குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு உற்சாக வரவேற்பு!

ஜேம்ஸ் டைசன் விருது வென்ற இந்திய மாணவர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies