சொந்த நாட்டு மக்கள் மீது குண்டு வீசிய பாகிஸ்தான் விமானப்படை : பெண்கள், குழந்தைகளின் உயிரை பறித்த சோக சம்பவம்!
Jul 28, 2026, 10:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

சொந்த நாட்டு மக்கள் மீது குண்டு வீசிய பாகிஸ்தான் விமானப்படை : பெண்கள், குழந்தைகளின் உயிரை பறித்த சோக சம்பவம்!

Murugesan M by Murugesan M
Sep 23, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் விமானப்படைச் சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்…

ஒவ்வொரு முறையும் இந்தியா மீது துல்லிய தாக்குதல் நடத்திவிட்டதாகப் பொய்களை பரப்பும் பாகிஸ்தான், தீவிரவாதிகளுக்குப் பதிலாக அப்பாவி மக்களைக் கொன்று குவித்துக் கையும் களவுமாக மாட்டியுள்ளது.

உலகின் மிக ஆபத்தான இடமாகக் கருதப்படும் கைபர்ப் பதுன்குவா மாகாணத்தில், தெஹ்ரிக் – இ – தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் இருந்து வருகிறது. பாகிஸ்தான் தலிபான்கள் என்ற பெயரில் இயங்கும் அவர்கள், நடப்பாண்டில் மட்டும் 605 தீவிரவாத தாக்குதல்களை நடத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதல்களில் பொதுமக்கள் 139 பேரும், காவல்துறையைச் சேர்ந்த 79 பேரும் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி, பாகிஸ்தான் ராணுவத்திற்கும், டிடிபி தீவிரவாதிகளுக்கும் காலம் காலமாக மோதல் நீடிக்க, அண்மைக் காலமாக அது மேலும் வலுத்துள்ளது. 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் தெஹ்ரிக் – இ – தலிபான் உடனான போர் நிறுத்தம் முறிந்ததில் இருந்து அங்கு தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசு, டிடிபி தீவிரவாதிகளுக்குப் புகலிடம் அளிப்பதாகப் பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்தச் சூழலில் தான் கைபர்  பதுன்குவா மாகாணத்தில் தெஹ்ரிக் – இ – தலிபான் ஒழிப்பு நடவடிக்கைகளைப் பாகிஸ்தான் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.

குறிப்பாக, மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள திரா பள்ளத்தாக்கில் தொடர்ச்சியான தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் கூட பாகிஸ்தான் ஈடுபடுமா? என்ற ஆச்சரியம் எழ, சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டுவீசி, பாகிஸ்தான் விமானப்படை அதற்கு முட்டுக்கட்டைப் போட்டுள்ளது.

திரா பள்ளத்தாக்கை ஒட்டி அமைந்துள்ள கிராமங்களில் தெஹ்ரிக் – இ – தலிபான்கள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த பொய்யான தகவலை நம்பி, LS-6 ரகக் குண்டுகள் வீசிய பாகிஸ்தான் விமானப்படை, 30 அப்பாவி மக்களின் உயிரிழப்புக்குக் காரணமாகி இருக்கிறது. ஏராளமானோர்  காயமடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

பெண்களும், குழந்தைகளும் பாகிஸ்தான் விமானப்படையின் பொறுப்பற்ற செயலுக்குப் பலியாகிவிட, சர்வதேச அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவு இரண்டு மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலால், தூக்கத்திலேயே அப்பாவி மக்கள் உயிரைத் துறக்க, பாதிப்பு தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி மனதைப் பதைபதைக்க வைக்கிறது.

ஒவ்வொரு முறையும் இந்தியாவை  சீண்டி பார்த்து வாங்கிக் கட்டிக்கொள்ளும் பாகிஸ்தான் ராணுவம், சட்டை மேல் மண் ஒட்டாத கதையாகப் பொய் செய்திகளைப் பரப்பியே காலத்தை ஓட்டி வரும் நிலையில், தற்போது சொந்த நாட்டு மக்களின் மீதே தாக்குதல் நடத்தி அவர்களின் நம்பிக்கையை இழந்திருக்கிறது.

Tags: Pakistan Air Force bombs its own people: Tragic incident that claimed the lives of women and childrenமக்கள் மீது குண்டு வீசிய பாகிஸ்தான் விமானப்படைpakistanpakistan news today
ShareTweetSendShare
Previous Post

சீனாவுடன் சமரசம் செய்துகொண்ட அதிபர் ட்ரம்ப் : டிக்டாக் செயலியை முன்னிறுத்தி வெற்றிகண்ட ஜி ஜின்பிங்!

Next Post

பொக்கிஷமாக பார்க்கப்படும் மான் கொம்பு வண்டு : ஒரு வண்டு பல கோடி விலை போகுமாம்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

இந்தியாவின் முதல் காலியம் நைட்ரைடு (GaN) சிப் : சாதித்த இந்திய ஆராய்ச்சியாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

விஸ்வரூபம் எடுக்கும் வினாத்தாள் கசிவு விவகாரம் : பஞ்சாப் அமைச்சர்கள் பதவி விலக போர்க்கொடி – சிறப்பு தொகுப்பு!

ராணுவ நடவடிக்கையா? ராஜதந்திரமா? : போரிலிருந்து வெளியேற அமெரிக்கா வியூகம் – சிறப்பு தொகுப்பு!

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies