3 பெண்களை கொன்ற போதைப்பொருள் கும்பல் : நேரலையில் படுகொலை - அதிர்ச்சியில் அர்ஜென்டினா!
Mar 15, 2026, 07:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3 பெண்களை கொன்ற போதைப்பொருள் கும்பல் : நேரலையில் படுகொலை – அதிர்ச்சியில் அர்ஜென்டினா!

Murugesan M by Murugesan M
Sep 29, 2025, 11:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அர்ஜென்டினாவில் 3 இளம்பெண்கள் இன்ஸ்டாகிராம் நேரலையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் உலுக்கிய இந்தக் கொடூர சம்பவம்குறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்..

அர்ஜென்டினாவில் காணாமல் போனதாக நம்பப்பட்ட3 இளம்பெண்களைப் போதைப்பொருள் கடத்தும் கும்பல் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்ததுடன் மட்டுமில்லாமல் அதனை இன்ஸ்டாகிராமில் நேரலை செய்த மிருகத்தனமான செயல், பொதுமக்களைக் கொதித்து எழச் செய்துள்ளது.

காவல்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, கொலை செய்யப்பட்ட 3 பெண்களும் கொலையாளிகளின் சதிச்செயலில் சிக்கி, சொகுசு வீட்டிற்கு வரவழைக்கப்பட்டதாகவும், அங்கு அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியானது.

பெண்களை கொடூரமான முறையில் கொலை செய்ததுடன், சுமார் 45 பேர் கொண்ட இன்ஸ்டாகிராம் குழுவிற்கு நேரலையில் ஒளிப்பரப்பியதை அடிப்படையாகக் கொண்டு விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீசார், குற்றச்செயலில் ஈடுபட்ட 12 பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இதனிடையே, குற்றம்சாட்டப்பட்ட 3 பெண்களுக்கும், போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்க, அது மக்களை மேலும் கோபப்படுத்தியுள்ளது.

போதைப்பொருளை திருட நினைத்தால் இதான் கதி எனக் கொலைகார கும்பல் தலைவன் பேசிய ஆதாரம் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவிக்க, அது விவாத பொருளாக மாறியுள்ளது. கொலை செய்யப்பட்ட மூன்று பெண்களும் விலை மாதர்கள் என ஊடங்களும் செய்தி வெளியிட, பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றம் சுமத்தும் நிலை என்றுதான் மாறுமோ? என மக்கள் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதோடு விட்டுவிடாமல், நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி சென்ற ஆயிரக்கணக்கான மக்கள், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

அதிபர் மிலெய் தலைமையிலான அரசு கடைப்பிடிக்கும் முதலாளித்துவ கொள்கையே இது போன்ற சம்பவங்களுக்கு முக்கிய காரணம் என்றும் மிலெய் ஆட்சிக்கு வந்தபிறகு நாட்டில் வேலையின்மை, பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் உச்சத்தில் உள்ளதாகவும் அதிருப்தி தெரிவித்தனர்.

மனிதக் கடத்தல், பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் திட்டத்தை மிலெய் கைவிட்டு விட்டதாகவும், போதைப்பொருள் கும்பல்கள் அட்டூழியத்தில் ஈடுபடுவதற்கு அதிபர் மிலெயின் அஜாக்கிரதையே காரணம் என்றும் குற்றம் சுமத்துகின்றனர். குற்றங்களை கட்டுப்படுத்தாமல் திரைமறைவில் உதவும் வேலையில் அரசு ஈடுபட்டால் விளைவுகள் வேறுமாதிரி இருக்கும் என்றும் போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: அர்ஜென்டினாDrug gang kills 3 women: Argentina in shock over live broadcast of murderநேரலையில் படுகொலை
ShareTweetSendShare
Previous Post

கழிவுநீர் ஓடையாகும் வைகை : மாநகராட்சி நிர்வாக அலட்சியத்தால் அவலம்!

Next Post

இதுதான் எதிர்காலம் : வியப்பில் அமெரிக்கர் – கவனத்தை ஈர்த்த சீனாவின் ரோபோ கால்கள்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies