சிதிலமடைந்த சாலைகளால் கதறும் மக்கள் - அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது எப்போது?
Mar 15, 2026, 02:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிதிலமடைந்த சாலைகளால் கதறும் மக்கள் – அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது எப்போது?

Murugesan M by Murugesan M
Sep 30, 2025, 07:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மணியக்காரம் பாளையம் பகுதியில் சிதலமடைந்து காணப்படும் சாலைகளால் நேர விரயம் ஏற்படுவதாகவும், தங்கள் பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகள் கூட முறையாக வருவதில்லை என்றும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கோவை மணியக்காரம் பாளையம் மேட்டுப்பாளையம் சாலை மற்றும் சக்தி சாலையை இணைக்கும் பகுதியாக அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் கடந்த 6 ஆண்டுகளாகப் பாதாள சாக்கடை, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காகத் தோண்டப்பட்டுள்ள சாலைகள், இதுவரை முறையாக மூடப்படாமலும், செப்பனிடப்படாமலும் குண்டும், குழியுமாகக் காட்சியளிக்கிறது.

இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாகத் தங்கள் பகுதிக்கு வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்துகள் கூடச் சேதமடைந்த சாலைகளைக் காரணம் காட்டி, ஊருக்குள் வராமல் பிரதான சாலையிலேயே நின்றுவிட்டு திரும்பிச் செல்வதாக வேதனை தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.

தோண்டப்பட்ட குழிகளைத் தரமான கட்டுமான பொருட்களைக்கொண்டு நிரப்பிச் சாலைகள் போடப்படாததாலும், அவசர கதியில் அவ்வப்போது சாலைகள் போடப்படுவதாலும், சில நாட்களில் அவை பூமிக்குள் புகுந்து பள்ளங்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குறிப்பாகச் சாலை மார்க்கமாகப் பயணிக்கவே அஞ்சும் நிலை உருவாகியுள்ளதாகக் கூறும் குடியிருப்பு வாசிகள், சிதிலமடைந்த சாலைகளால் ஏற்படும் புழுதிக்கு நடுவே சிக்கி பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். தவிர்க்கமுடியாமல் இந்தச் சாலைகளைப் பயன்படுத்துவதால் தங்கள் வாகனங்களின் பெரும்பாலான பாகங்கள் சேதமடைந்து விடுவதாகக் கூறும் அப்பகுதி மக்கள், வாகங்களை நம்பி பிழைப்பு நடத்தும் மக்களுக்கு இதனால் வாழ்வாதாரமே பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு பணிகளுக்காகத் தோண்டப்படும் பள்ளங்கள் முறையாக மூடப்படாமல் சாலைகள் சிதிலமடைந்து கிடப்பதால், பல்வேறு சமயங்களில் விபத்துக்கள் ஏற்பட்டு பலர் உயிரிழக்கும் துயர சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

அண்மையில் காமராஜர் சாலை வழியாகத் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பெண் காவல் ஆய்வாளர், இதே போன்ற சாலை பள்ளத்தால் ஏற்பட்ட விபத்தில் சிக்கியே தனது உயிரை இழந்தார் என்பதையும் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.

மற்றொரு அசம்பாவிதம் நேர்வதற்குள் முறையாகச் சிதலமடைந்த சாலைகளைச் செப்பனிட்டு தரமான சாலைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

Tags: கோவை மணியக்காரம் பாளையம் பகுதிகோவைPeople are crying over dilapidated roads - when will the government take action?கதறும் மக்கள்அரசு நிர்வாகம்
ShareTweetSendShare
Previous Post

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா : நினைவு அஞ்சல் தலை, நாணயத்தை நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

Next Post

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies