சிதிலமடைந்த சாலைகளால் கதறும் மக்கள் - அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது எப்போது?
Jan 14, 2026, 03:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிதிலமடைந்த சாலைகளால் கதறும் மக்கள் – அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது எப்போது?

Murugesan M by Murugesan M
Sep 30, 2025, 07:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மணியக்காரம் பாளையம் பகுதியில் சிதலமடைந்து காணப்படும் சாலைகளால் நேர விரயம் ஏற்படுவதாகவும், தங்கள் பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகள் கூட முறையாக வருவதில்லை என்றும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கோவை மணியக்காரம் பாளையம் மேட்டுப்பாளையம் சாலை மற்றும் சக்தி சாலையை இணைக்கும் பகுதியாக அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் கடந்த 6 ஆண்டுகளாகப் பாதாள சாக்கடை, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காகத் தோண்டப்பட்டுள்ள சாலைகள், இதுவரை முறையாக மூடப்படாமலும், செப்பனிடப்படாமலும் குண்டும், குழியுமாகக் காட்சியளிக்கிறது.

இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாகத் தங்கள் பகுதிக்கு வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்துகள் கூடச் சேதமடைந்த சாலைகளைக் காரணம் காட்டி, ஊருக்குள் வராமல் பிரதான சாலையிலேயே நின்றுவிட்டு திரும்பிச் செல்வதாக வேதனை தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.

தோண்டப்பட்ட குழிகளைத் தரமான கட்டுமான பொருட்களைக்கொண்டு நிரப்பிச் சாலைகள் போடப்படாததாலும், அவசர கதியில் அவ்வப்போது சாலைகள் போடப்படுவதாலும், சில நாட்களில் அவை பூமிக்குள் புகுந்து பள்ளங்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குறிப்பாகச் சாலை மார்க்கமாகப் பயணிக்கவே அஞ்சும் நிலை உருவாகியுள்ளதாகக் கூறும் குடியிருப்பு வாசிகள், சிதிலமடைந்த சாலைகளால் ஏற்படும் புழுதிக்கு நடுவே சிக்கி பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். தவிர்க்கமுடியாமல் இந்தச் சாலைகளைப் பயன்படுத்துவதால் தங்கள் வாகனங்களின் பெரும்பாலான பாகங்கள் சேதமடைந்து விடுவதாகக் கூறும் அப்பகுதி மக்கள், வாகங்களை நம்பி பிழைப்பு நடத்தும் மக்களுக்கு இதனால் வாழ்வாதாரமே பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு பணிகளுக்காகத் தோண்டப்படும் பள்ளங்கள் முறையாக மூடப்படாமல் சாலைகள் சிதிலமடைந்து கிடப்பதால், பல்வேறு சமயங்களில் விபத்துக்கள் ஏற்பட்டு பலர் உயிரிழக்கும் துயர சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

அண்மையில் காமராஜர் சாலை வழியாகத் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பெண் காவல் ஆய்வாளர், இதே போன்ற சாலை பள்ளத்தால் ஏற்பட்ட விபத்தில் சிக்கியே தனது உயிரை இழந்தார் என்பதையும் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.

மற்றொரு அசம்பாவிதம் நேர்வதற்குள் முறையாகச் சிதலமடைந்த சாலைகளைச் செப்பனிட்டு தரமான சாலைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

Tags: கோவைPeople are crying over dilapidated roads - when will the government take action?கதறும் மக்கள்அரசு நிர்வாகம்கோவை மணியக்காரம் பாளையம் பகுதி
ShareTweetSendShare
Previous Post

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா : நினைவு அஞ்சல் தலை, நாணயத்தை நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

Next Post

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies