சிதிலமடைந்த சாலைகளால் கதறும் மக்கள் - அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது எப்போது?
Sep 29, 2025, 02:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிதிலமடைந்த சாலைகளால் கதறும் மக்கள் – அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது எப்போது?

Web Desk by Web Desk
Sep 29, 2025, 12:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மணியக்காரம் பாளையம் பகுதியில் சிதலமடைந்து காணப்படும் சாலைகளால் நேர விரயம் ஏற்படுவதாகவும், தங்கள் பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகள் கூட முறையாக வருவதில்லை என்றும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கோவை மணியக்காரம் பாளையம் மேட்டுப்பாளையம் சாலை மற்றும் சக்தி சாலையை இணைக்கும் பகுதியாக அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் கடந்த 6 ஆண்டுகளாகப் பாதாள சாக்கடை, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காகத் தோண்டப்பட்டுள்ள சாலைகள், இதுவரை முறையாக மூடப்படாமலும், செப்பனிடப்படாமலும் குண்டும், குழியுமாகக் காட்சியளிக்கிறது.

இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாகத் தங்கள் பகுதிக்கு வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்துகள் கூடச் சேதமடைந்த சாலைகளைக் காரணம் காட்டி, ஊருக்குள் வராமல் பிரதான சாலையிலேயே நின்றுவிட்டு திரும்பிச் செல்வதாக வேதனை தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.

தோண்டப்பட்ட குழிகளைத் தரமான கட்டுமான பொருட்களைக்கொண்டு நிரப்பிச் சாலைகள் போடப்படாததாலும், அவசர கதியில் அவ்வப்போது சாலைகள் போடப்படுவதாலும், சில நாட்களில் அவை பூமிக்குள் புகுந்து பள்ளங்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குறிப்பாகச் சாலை மார்க்கமாகப் பயணிக்கவே அஞ்சும் நிலை உருவாகியுள்ளதாகக் கூறும் குடியிருப்பு வாசிகள், சிதிலமடைந்த சாலைகளால் ஏற்படும் புழுதிக்கு நடுவே சிக்கி பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். தவிர்க்கமுடியாமல் இந்தச் சாலைகளைப் பயன்படுத்துவதால் தங்கள் வாகனங்களின் பெரும்பாலான பாகங்கள் சேதமடைந்து விடுவதாகக் கூறும் அப்பகுதி மக்கள், வாகங்களை நம்பி பிழைப்பு நடத்தும் மக்களுக்கு இதனால் வாழ்வாதாரமே பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு பணிகளுக்காகத் தோண்டப்படும் பள்ளங்கள் முறையாக மூடப்படாமல் சாலைகள் சிதிலமடைந்து கிடப்பதால், பல்வேறு சமயங்களில் விபத்துக்கள் ஏற்பட்டு பலர் உயிரிழக்கும் துயர சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

அண்மையில் காமராஜர் சாலை வழியாகத் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பெண் காவல் ஆய்வாளர், இதே போன்ற சாலை பள்ளத்தால் ஏற்பட்ட விபத்தில் சிக்கியே தனது உயிரை இழந்தார் என்பதையும் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.

மற்றொரு அசம்பாவிதம் நேர்வதற்குள் முறையாகச் சிதலமடைந்த சாலைகளைச் செப்பனிட்டு தரமான சாலைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

Tags: People are crying over dilapidated roads - when will the government take action?கதறும் மக்கள்அரசு நிர்வாகம்கோவை மணியக்காரம் பாளையம் பகுதிகோவை
ShareTweetSendShare
Previous Post

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

Next Post

உணவு சாப்பிட சென்று உயிரை விட்ட சோகம் : கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த கோர சம்பவம்!

Related News

நெல்லையில் ஆன்லைன் வர்த்தகம் செய்வதாக கூறி ரூ.22 லட்சம் மோசடி – இருவர் கைது!

கரூர் தவெக கூட்ட நெரிசல் சம்பவம் – நிர்மலா சீதாராமன் ஆறுதல்!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

ஷெபாஸ் ஷெரீப்பை தெறிக்கவிட்ட சிங்கப்பெண் : ஐ.நா.வில் முழங்கிய பெடல் கெலாட் யார்?

பள்ளிபாளையத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு – AI மூலம் உயிரிழந்தவரை உரையாற்ற வைத்து ஆனந்தம்!

லட்சங்களில் வருமானம் வழங்கும் ஆங்கில வெள்ளரி : புது முயற்சியால் பொள்ளாச்சியை கலக்கும் இளம் விவசாயி!

Load More

அண்மைச் செய்திகள்

உலகளாவிய பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் உள்ளது – ஜெய்சங்கர்

கனமழையால் தத்தளிக்கும் ஆந்திரா, தெலங்கானா!

கர்நாடகாவில் நகைக்கடை ஊழியரை கடத்தி ரூ.1.5கோடி நகைகள் கொள்ளை!

உலகிலேயே முதன்முறையாக நிலக்கரி சுரங்கத்தில் தானியங்கி மின்சார லாரிகளை பயன்படுத்ததும் சீனா!

நவராத்திரி பண்டிகை : நாடு முழுவதும் களைகட்டியுள்ள கொண்டாட்டங்கள்!

ஆயுதங்களைக் கீழே போட்டால் நக்சல்கள் மீது ஒரு தோட்டா கூடப் பாயாது – அமித்ஷா

அமெரிக்காவில் Pumpkin Nights கலைவிழா!

100 ஆண்டுகளாக தேச சேவையில் அயராது ஈடுபடும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு – பிரதமர் மோடி புகழாரம்!

700 டன் எடையுள்ள கப்பலை பற்களால் கயிறை கடித்தபடி இழுத்து எகிப்தை சேர்ந்த மல்யுத்த வீரர் உலக சாதனை!

திருப்பதி பிரம்மோற்சவம் 6-ம் நாள் விழா : அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies