சிதிலமடைந்த சாலைகளால் கதறும் மக்கள் - அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது எப்போது?
Sep 13, 2026, 12:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிதிலமடைந்த சாலைகளால் கதறும் மக்கள் – அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது எப்போது?

Murugesan M by Murugesan M
Sep 30, 2025, 07:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை மணியக்காரம் பாளையம் பகுதியில் சிதலமடைந்து காணப்படும் சாலைகளால் நேர விரயம் ஏற்படுவதாகவும், தங்கள் பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகள் கூட முறையாக வருவதில்லை என்றும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கோவை மணியக்காரம் பாளையம் மேட்டுப்பாளையம் சாலை மற்றும் சக்தி சாலையை இணைக்கும் பகுதியாக அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் கடந்த 6 ஆண்டுகளாகப் பாதாள சாக்கடை, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காகத் தோண்டப்பட்டுள்ள சாலைகள், இதுவரை முறையாக மூடப்படாமலும், செப்பனிடப்படாமலும் குண்டும், குழியுமாகக் காட்சியளிக்கிறது.

இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாகத் தங்கள் பகுதிக்கு வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்துகள் கூடச் சேதமடைந்த சாலைகளைக் காரணம் காட்டி, ஊருக்குள் வராமல் பிரதான சாலையிலேயே நின்றுவிட்டு திரும்பிச் செல்வதாக வேதனை தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.

தோண்டப்பட்ட குழிகளைத் தரமான கட்டுமான பொருட்களைக்கொண்டு நிரப்பிச் சாலைகள் போடப்படாததாலும், அவசர கதியில் அவ்வப்போது சாலைகள் போடப்படுவதாலும், சில நாட்களில் அவை பூமிக்குள் புகுந்து பள்ளங்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குறிப்பாகச் சாலை மார்க்கமாகப் பயணிக்கவே அஞ்சும் நிலை உருவாகியுள்ளதாகக் கூறும் குடியிருப்பு வாசிகள், சிதிலமடைந்த சாலைகளால் ஏற்படும் புழுதிக்கு நடுவே சிக்கி பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். தவிர்க்கமுடியாமல் இந்தச் சாலைகளைப் பயன்படுத்துவதால் தங்கள் வாகனங்களின் பெரும்பாலான பாகங்கள் சேதமடைந்து விடுவதாகக் கூறும் அப்பகுதி மக்கள், வாகங்களை நம்பி பிழைப்பு நடத்தும் மக்களுக்கு இதனால் வாழ்வாதாரமே பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு பணிகளுக்காகத் தோண்டப்படும் பள்ளங்கள் முறையாக மூடப்படாமல் சாலைகள் சிதிலமடைந்து கிடப்பதால், பல்வேறு சமயங்களில் விபத்துக்கள் ஏற்பட்டு பலர் உயிரிழக்கும் துயர சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

அண்மையில் காமராஜர் சாலை வழியாகத் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பெண் காவல் ஆய்வாளர், இதே போன்ற சாலை பள்ளத்தால் ஏற்பட்ட விபத்தில் சிக்கியே தனது உயிரை இழந்தார் என்பதையும் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.

மற்றொரு அசம்பாவிதம் நேர்வதற்குள் முறையாகச் சிதலமடைந்த சாலைகளைச் செப்பனிட்டு தரமான சாலைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

Tags: கோவை மணியக்காரம் பாளையம் பகுதிகோவைPeople are crying over dilapidated roads - when will the government take action?கதறும் மக்கள்அரசு நிர்வாகம்
Share
Tweet
SendShare
Previous Post

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா : நினைவு அஞ்சல் தலை, நாணயத்தை நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

Next Post

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies