இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 - கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!
Nov 14, 2025, 07:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

Web Desk by Web Desk
Oct 1, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேசன் சிந்தூரில் பாகிஸ்தானின் ஏவுகணைகள், விமானங்களை இடைமறித்துத் தாக்கிய எஸ்-400 வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்கி குவிப்பதில் இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது. அதுமட்டுமல்ல, நவீன எஸ்-500 வான் பாதுகாப்பு தளவாடங்கள்மீதும் கவனத்தை திருப்பியுள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

ஆப்ரேஷன் சிந்தூரில் இந்திய வான் எல்லையைக் காட்டிக்காத்த ஹீரோவாக எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பு செயல்பட்டது. RUSSIAN MADE TECHNOLOGY – ஆன எஸ் 400 வான் பாதுகாப்பு தளவாடம், பாகிஸ்தானின் போர் விமானங்களை 300 கிலோமீட்டர் தொலைவிலேயே தாக்கி அழித்துச் சிம்ம சொப்பமனமாக விளங்கியது.

எதிரி நாட்டு இலக்கை மிக நீண்ட தூரத்திலேயே தாக்கி அழித்த பெருமையையும் பெற்றது. போரின்போது பாகிஸ்தானை கலங்கடித்த எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்குவதில் தான் இந்தியா தற்போது ஆர்வம் காட்டி வருகிறது. எதிரி நாட்டு ஏவுகணைகள் 400 கிலோமீட்டர் தொலைவில் இருந்து ஏவப்பட்டாலும், அதனை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் படைத்துள்ளது எஸ் – 400 வான் பாதுகாப்பு அமைப்பு.

போர் விமானங்கள், ஏவுகணைகள், ட்ரான்கள் என எதுவும் இதன் பிடியில் இருந்து தப்பமுடியாது. எஸ்-300 தளவாடத்தை காட்டிலும், இரண்டரை மடங்கு அதிக வேகத்தில் இயங்கக்கூடியதாக எஸ் 400 வான்பாதுகாப்பு அமைப்பு உள்ளது கூடுதல் சிறப்பம்சம். நீண்ட தூர இலக்கை தாக்கி அழிக்கக்கூடிய எஸ் 400-ல், நவீன ரேடார் பொருத்தப்பட்டுள்ளது.

400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்குவதற்கு மட்டுமல்ல, 250, 120, 40 கிலோ மீட்டர்எனக் குறைந்தத இலக்கிற்கு ஏற்றவாறும் ஏவுகணைகளை பொருத்தும் வகையில் எஸ்-400 தயாரிக்கப்பட்டுள்ளது. எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பால் ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட எதிரி நாட்டுவிமானங்களைக் கண்காணிக்கக முடியும்.

அதில் 12 விமானங்களை ஒரே நேரத்தில் சுட்டு வீழ்த்தவும் முடியும். இந்தியாவுக்கு நாளுக்கு நாள் அச்சுறுத்தல்கள் அதிகரிக்கும் நிலையில், அதனை எதிர்கொள்ள எஸ்-400 கைகொடுக்கும் என நம்பப்படுகிறது. அதன் காரணமாக ரஷ்யா தயாரிப்பில் உருவான வான் பாதுகாப்பு தளவாடத்தை வாங்க மத்திய அரசு ஆர்வம் காட்டுகிறது. கடந்த 2018-ம் ஆண்டில் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் படி, மொத்தம் ஐந்து எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்க மத்திய அரசு முடிவு செய்தது.

அதில் மூன்று தளவாடங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு தளவாடங்கள், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்-400 மட்டுமல்ல, எஸ்-500 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்குவதிலும் இந்திய பாதுகாப்புத்துறை ஆர்வம் காட்டுகிறது.

ஆனால், தங்களின் தேவையை நிறைவேற்றிய பின்னரே, பிற நாடுகளுக்கு வழங்கப்படும் என ரஷ்யா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் கடுமையாக விலை உயர்ந்த போதும், ஆப்ரேஷன் சிந்தூரில் எல்லையைக் கட்டி காத்த எஸ்-400 வான் பாதுகாப்பு தளவாடத்தை எந்த விலை கொடுத்து வாங்கவும் இந்தியா தயாராகவே இருக்கும் எனப் பாதுகாப்புத்துறை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Tags: எஸ்-400 வான் பாதுகாப்புrussiaindian armyS-400 that protected Indian airspace - Plans to buy additional air defense equipment
ShareTweetSendShare
Previous Post

எதிரிகளுக்கு சவால் விடுக்கும் தேஜஸ் மார்க் 1-A : சீனா, பாகிஸ்தானை விட அசுர பலம் பெறும் இந்திய விமானப்படை!

Next Post

சமூக வலைதளத்தில் கருத்து – ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு!

Related News

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

Load More

அண்மைச் செய்திகள்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் ஏவிய ப்ளூ ஆரிஜின்!

புதுச்சேரி : காவல்துறை அதிகாரிகள் கள் குடித்துவிட்டு நடனம்?

சென்னை : தனியார் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் ஆர்ப்பாட்டம்!

சென்னை : ஒரே நாளில் இருமுறை குறைந்த தங்கத்தின் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies