இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 - கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!
Sep 29, 2025, 10:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

Web Desk by Web Desk
Sep 29, 2025, 09:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேசன் சிந்தூரில் பாகிஸ்தானின் ஏவுகணைகள், விமானங்களை இடைமறித்துத் தாக்கிய எஸ்-400 வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்கி குவிப்பதில் இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது. அதுமட்டுமல்ல, நவீன எஸ்-500 வான் பாதுகாப்பு தளவாடங்கள்மீதும் கவனத்தை திருப்பியுள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

ஆப்ரேஷன் சிந்தூரில் இந்திய வான் எல்லையைக் காட்டிக்காத்த ஹீரோவாக எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பு செயல்பட்டது. RUSSIAN MADE TECHNOLOGY – ஆன எஸ் 400 வான் பாதுகாப்பு தளவாடம், பாகிஸ்தானின் போர் விமானங்களை 300 கிலோமீட்டர் தொலைவிலேயே தாக்கி அழித்துச் சிம்ம சொப்பமனமாக விளங்கியது.

எதிரி நாட்டு இலக்கை மிக நீண்ட தூரத்திலேயே தாக்கி அழித்த பெருமையையும் பெற்றது. போரின்போது பாகிஸ்தானை கலங்கடித்த எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்குவதில் தான் இந்தியா தற்போது ஆர்வம் காட்டி வருகிறது. எதிரி நாட்டு ஏவுகணைகள் 400 கிலோமீட்டர் தொலைவில் இருந்து ஏவப்பட்டாலும், அதனை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் படைத்துள்ளது எஸ் – 400 வான் பாதுகாப்பு அமைப்பு.

போர் விமானங்கள், ஏவுகணைகள், ட்ரான்கள் என எதுவும் இதன் பிடியில் இருந்து தப்பமுடியாது. எஸ்-300 தளவாடத்தை காட்டிலும், இரண்டரை மடங்கு அதிக வேகத்தில் இயங்கக்கூடியதாக எஸ் 400 வான்பாதுகாப்பு அமைப்பு உள்ளது கூடுதல் சிறப்பம்சம். நீண்ட தூர இலக்கை தாக்கி அழிக்கக்கூடிய எஸ் 400-ல், நவீன ரேடார் பொருத்தப்பட்டுள்ளது.

400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்குவதற்கு மட்டுமல்ல, 250, 120, 40 கிலோ மீட்டர்எனக் குறைந்தத இலக்கிற்கு ஏற்றவாறும் ஏவுகணைகளை பொருத்தும் வகையில் எஸ்-400 தயாரிக்கப்பட்டுள்ளது. எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பால் ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட எதிரி நாட்டுவிமானங்களைக் கண்காணிக்கக முடியும்.

அதில் 12 விமானங்களை ஒரே நேரத்தில் சுட்டு வீழ்த்தவும் முடியும். இந்தியாவுக்கு நாளுக்கு நாள் அச்சுறுத்தல்கள் அதிகரிக்கும் நிலையில், அதனை எதிர்கொள்ள எஸ்-400 கைகொடுக்கும் என நம்பப்படுகிறது. அதன் காரணமாக ரஷ்யா தயாரிப்பில் உருவான வான் பாதுகாப்பு தளவாடத்தை வாங்க மத்திய அரசு ஆர்வம் காட்டுகிறது. கடந்த 2018-ம் ஆண்டில் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் படி, மொத்தம் ஐந்து எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்க மத்திய அரசு முடிவு செய்தது.

அதில் மூன்று தளவாடங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு தளவாடங்கள், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்-400 மட்டுமல்ல, எஸ்-500 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்குவதிலும் இந்திய பாதுகாப்புத்துறை ஆர்வம் காட்டுகிறது.

ஆனால், தங்களின் தேவையை நிறைவேற்றிய பின்னரே, பிற நாடுகளுக்கு வழங்கப்படும் என ரஷ்யா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் கடுமையாக விலை உயர்ந்த போதும், ஆப்ரேஷன் சிந்தூரில் எல்லையைக் கட்டி காத்த எஸ்-400 வான் பாதுகாப்பு தளவாடத்தை எந்த விலை கொடுத்து வாங்கவும் இந்தியா தயாராகவே இருக்கும் எனப் பாதுகாப்புத்துறை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Tags: எஸ்-400 வான் பாதுகாப்புrussiaindian armyS-400 that protected Indian airspace - Plans to buy additional air defense equipment
ShareTweetSendShare
Previous Post

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

Related News

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies