ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நினைவு அஞ்சல் தலை மற்றும் நாணயத்தைப் பிரதமர் மோடி நாளை வெளியிடுகிறார்.
1925ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி நிறுவப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பு வரும் 2ஆம் தேதி 100 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தன்னலமற்ற சேவை மற்றும் ஒழுக்கத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு செயலிலும் தன்னார்வலர்கள் தேசத்திற்கு முன்னுரிமை அளிப்பதால் அந்த அமைப்பு எப்போதும் உயர்வாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
நாட்டை அறிவுசார் அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதற்காக ஆர்எஸ்எஸ் நிறுவப்பட்டதாகவும், அதன் பயணம் குறிப்பிடத்தக்கதாகவும் உள்ளது எனப் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே முன்னிலையில் அந்த அமைப்பின் நூற்றாண்டு நினைவு அஞ்சல் தலை மற்றும் நாணயத்தைப் பிரதமர் மோடி நாளை வெளியிடுவார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.