பொதுமக்களின் 70 % செலவு குறைப்பு ; மருத்துவத்துறையில் கலக்கும் மகாராஷ்ட்ரா - சிறப்பு கட்டுரை!
Oct 2, 2025, 09:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொதுமக்களின் 70 % செலவு குறைப்பு ; மருத்துவத்துறையில் கலக்கும் மகாராஷ்ட்ரா – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Oct 2, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். மகாராஷ்ட்ரா மக்களுக்கு அத்தகைய செல்வத்தை வழங்குவதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கிறது அம்மாநில அரசு. நல்ல படிப்பும் நல்ல மருத்துவமும் COSTLY ஆகிவிட்ட காலத்தில் SONOGRAPHY, X-RAY, ECG, CT SCAN, MRI, DIALYSIS போன்றவற்றை இலவசமாக எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்து மக்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி.

மக்களின் உடல்நலனை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட மருத்துவமனைகள் மட்டுமின்றி கிராமப்புறங்களில் உள்ள சுகாதார நிலையங்களிலும் CT SCAN, MRI போன்ற உயர் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம். அதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இத்தகைய திட்டங்களால் மருத்துவத்துக்கு செலவழிக்கும் தொகையில் 70 விழுக்காட்டை சேமிக்கலாம்.

கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் 9 முதல் 14 வயது வரை உள்ள சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவமனைகளில் பணிகள் எந்தளவுக்கு நிறைவடைந்துள்ளன என்பதை கண்காணிக்க தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் கட்டுமானப் பணிகளை விரைவுப்படுத்துவதோடு தரத்தையும் உறுதிப்படுத்த முடியும். மாரடைப்பால் திடீரென சுவாசம் நின்றுவிட்டால் வழங்கப்படும் CPR சிகிச்சை குறித்து மருத்துவப் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பாக சேவையாற்றும் ஊழியர்களை கவுரவிக்கவும் மகாராஷ்ட்ரா அரசு தவறவில்லை. NURSING HOME-களுக்கு ஆன்லைன் மூலம் அனுமதி வழங்கும் திட்டத்தையும் தேவேந்திர பட்னாவிஸ் அரசு தொடங்கியுள்ளது. MAHATMA JYOTIRAO PHULE JAN AROGYA YOJANA என்ற காப்பீட்டுத் திட்டத்தையும் அரசு விரிவுப்படுத்தியுள்ளது.

மகாராஷ்ட்ராவில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்கள் மூலம் கிராமப்புறங்களில் TB நோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.

5 குடும்பங்களை கண்காணிக்க ஒரு மாணவர் என்ற அடிப்படையில் 3 ஆண்டுகளுக்கு இந்தப்பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி சாத்தியமான அனைத்து வழிகளிலும் மகாராஷ்ட்ர மக்களின் உடல்நலத்தைப் பேண நடவடிக்கை எடுத்து வருகிறது பா.ஜ.க. அரசு.

Tags: Devendra Fadnavis-led BJP governmentSONOGRAPHYX-RAYECGCT SCANMRIDIALYSISMAHATMA JYOTIRAO PHULE JAN AROGYA YOJANA.medicineMAHARASHTRAdisease-free life
ShareTweetSendShare
Previous Post

நேபாளம் – 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு!

Next Post

ஆயுத பூஜை விடுமுறை – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

Related News

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

ஆயுத பூஜை விடுமுறை – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

நேபாளம் – 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

சென்னை மதுரவாயல் நெடுஞ்சாலையில் தடுப்புகள் மீது கார் மோதி விபத்து – இருவர் பலி!

பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.எம்.தமிழ்குமரன் நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பொதுமக்களின் 70 % செலவு குறைப்பு ; மருத்துவத்துறையில் கலக்கும் மகாராஷ்ட்ரா – சிறப்பு கட்டுரை!

தேசியவாதிகளை வழக்குகளாலும் கைதுகளாலும் முடக்கிவிட முடியாது – நயினார் நாகேந்திரன்

சென்னையில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது – அண்ணாமலை கண்டனம்!

மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் ஆர்எஸ்எஸ் பணிகளால் ஈர்க்கப்பட்டனர் – ராம்நாத் கோவிந்த்

ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞர் – தர்ம அடி கொடுத்து போலீசிலில் ஒப்படைத்த பொதுமக்கள்!

தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு – கொடைக்கானல் மக்கள் கவலை!

பட்டாசு விற்பனை மந்தம் – சிவகாசி வியாபாரிகள் கவலை!

மகாத்மா காந்தி இறப்புக்கு பிறகு சுதேசியை மறந்து விட்டோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி உரை!

அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விக்கிரவாண்டி அருகே கார் விபத்து – சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies