ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது சர்வாதிகார அடக்குமுறையின் உச்சம் - இந்து முன்னணி கண்டனம்!
Mar 15, 2026, 10:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது சர்வாதிகார அடக்குமுறையின் உச்சம் – இந்து முன்னணி கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 3, 2025, 08:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர்களை தமிழக அரசு கைது செய்திருப்பது சர்வாதிகார அடக்குமுறையின் உச்சம் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரததேசத்தில் RSS 100 வருடமாக தேசப்பணியை செய்து வருகிறது. நாட்டில் பேரிடர் நிகழ்வு எங்கு நடந்தாலும் அங்கு முதலில் ஓடோடி சேவை செய்யும் அமைப்பு ஆர்.எஸ்.எஸ். தன்னலமற்ற சேவை பணியை ஆற்றி வரும் ஆர் எஸ் எஸ் இந்த வருடம் நூற்றாண்டு விழா கண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் ஆர் எஸ் எஸ் ஆரம்பித்த தினமான விஜயதசமி அன்று சென்னை ஐயப்பன் தாங்கலில் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றதாக தெரிவித்துள்ளார்.

அங்கு சென்ற காவல்துறை அங்கு இருந்தவர்களை கைது செய்துள்ளது. இதேபோன்று திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சிறப்பு சந்திப்பு ஏற்பாடு நடைபெறும் போதே தடுத்துள்ளது காவல்துறை என அவர் தெரிவித்துள்ளார்.

தினசரி சந்திப்பில், இயக்க நூற்றாண்டை முன்னிட்டு இன்று இந்த சிறப்பு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத தமிழக அரசு, ஆர் எஸ் எஸ் பொறுப்பாளர்களை கைது செய்துள்ளது.

தமிழகத்தில் ஜனநாயக விரோதமாக நடந்து கொள்ளும் திமுக அரசு
ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியின் சாதாரண ஒரு சந்திப்பு நிகழ்வையே பொறுத்துக் கொள்ள முடியாத சர்வாதிகார நிலை எடுத்து செயல்படுவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.

கடந்த வருடங்களில் ஆர்எஸ்எஸ் பொது நிகழ்விற்கு நீதிமன்றம் சென்று அனுமதி வாங்கி நிகழ்ச்சி நடத்த வேண்டிய சூழ்நிலை இருந்தது. தற்போது பெரிய நிகழ்ச்சியாக இது இல்லாமல், சிறிய அளவிலான எண்ணிக்கையில் சந்திப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது ஆர்எஸ்எஸ். இதற்கே நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை தமிழக அரசு கைது செய்திருப்பது கருத்துரிமைக்கு எதிரான செயல் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள தேச பக்தர்கள் அனைவரும் திமுகவின் பாரபட்சமான அடக்குமுறையைக் கண்டிக்க முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.

தமிழக அரசு ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர்கள் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags: hindu munnanitamil nadu governmentHindu Munnani state president Kadeshwara SubramaniamRSS leaders arrest
ShareTweetSendShare
Previous Post

மைசூரு தசரா விழா – ஜம்பு சவாரி கோலாகலம்!

Next Post

பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு தமிழக அரசு மற்றும் காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies