ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது சர்வாதிகார அடக்குமுறையின் உச்சம் - இந்து முன்னணி கண்டனம்!
Sep 12, 2026, 02:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது சர்வாதிகார அடக்குமுறையின் உச்சம் – இந்து முன்னணி கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 3, 2025, 08:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர்களை தமிழக அரசு கைது செய்திருப்பது சர்வாதிகார அடக்குமுறையின் உச்சம் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரததேசத்தில் RSS 100 வருடமாக தேசப்பணியை செய்து வருகிறது. நாட்டில் பேரிடர் நிகழ்வு எங்கு நடந்தாலும் அங்கு முதலில் ஓடோடி சேவை செய்யும் அமைப்பு ஆர்.எஸ்.எஸ். தன்னலமற்ற சேவை பணியை ஆற்றி வரும் ஆர் எஸ் எஸ் இந்த வருடம் நூற்றாண்டு விழா கண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் ஆர் எஸ் எஸ் ஆரம்பித்த தினமான விஜயதசமி அன்று சென்னை ஐயப்பன் தாங்கலில் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றதாக தெரிவித்துள்ளார்.

அங்கு சென்ற காவல்துறை அங்கு இருந்தவர்களை கைது செய்துள்ளது. இதேபோன்று திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சிறப்பு சந்திப்பு ஏற்பாடு நடைபெறும் போதே தடுத்துள்ளது காவல்துறை என அவர் தெரிவித்துள்ளார்.

தினசரி சந்திப்பில், இயக்க நூற்றாண்டை முன்னிட்டு இன்று இந்த சிறப்பு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத தமிழக அரசு, ஆர் எஸ் எஸ் பொறுப்பாளர்களை கைது செய்துள்ளது.

தமிழகத்தில் ஜனநாயக விரோதமாக நடந்து கொள்ளும் திமுக அரசு
ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியின் சாதாரண ஒரு சந்திப்பு நிகழ்வையே பொறுத்துக் கொள்ள முடியாத சர்வாதிகார நிலை எடுத்து செயல்படுவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.

கடந்த வருடங்களில் ஆர்எஸ்எஸ் பொது நிகழ்விற்கு நீதிமன்றம் சென்று அனுமதி வாங்கி நிகழ்ச்சி நடத்த வேண்டிய சூழ்நிலை இருந்தது. தற்போது பெரிய நிகழ்ச்சியாக இது இல்லாமல், சிறிய அளவிலான எண்ணிக்கையில் சந்திப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது ஆர்எஸ்எஸ். இதற்கே நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை தமிழக அரசு கைது செய்திருப்பது கருத்துரிமைக்கு எதிரான செயல் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள தேச பக்தர்கள் அனைவரும் திமுகவின் பாரபட்சமான அடக்குமுறையைக் கண்டிக்க முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.

தமிழக அரசு ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர்கள் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags: hindu munnanitamil nadu governmentHindu Munnani state president Kadeshwara SubramaniamRSS leaders arrest
Share
Tweet
SendShare
Previous Post

மைசூரு தசரா விழா – ஜம்பு சவாரி கோலாகலம்!

Next Post

பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு தமிழக அரசு மற்றும் காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies