பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!
Mar 15, 2026, 06:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

Murugesan M by Murugesan M
Oct 4, 2025, 08:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராகப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக் களம் போர்க் களமாக மாறியிருக்கிறது… மக்கள் போராடுவதை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் பாகிஸ்தான் ராணுவம், அடக்குமுறையை கையாண்டுள்ளது. போராட்டத்திற்கான காரணம்.. அதன் பின்னணி குறித்து தற்போது பார்க்கலாம்.

பாகிஸ்தானில் வசிக்கும் காஷ்மீர் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட, 12 சட்டமன்ற தொகுதிகளை ரத்து செய்ய வேண்டும், மானிய விலையில் கோதுமை மாவு, நியாயமான மின்சார கட்டணம் உள்ளிட்ட 38 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் நீடித்து வருகிறது. இந்தப் போராட்டத்தை ஒடுக்கும் வகையில், பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு 12 அப்பாவி மக்கள் இரையாக்கப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதனால் வெகுண்டெழுந்த போராட்டக்காரர்கள், அரசு எவ்வளவு ஒடுக்குமுறையை கையாண்டாலும், நீதி கிடைக்கும் வரை போராட்டத்திலிருந்து விலகமாட்டோம் என்றும் முழங்கியுள்ளனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் வளர்ச்சிக்கு ஷெபாஸ் ஷெரீப் அரசு, துரும்பைக் கூடக் கிள்ளிபோடவில்லை என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர். பாகிஸ்தான் ராணுவம் கையாண்டுவரும் அடக்குமுறை சம்பவங்கள் ஷெபாஸ் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியை மேலும் தூண்டியுள்ளது.

மக்கள் விரோத போக்குடன் செயல்படும் பாகிஸ்தான் அரசையும், ராணுவத்தையும் அவாமி ஆக்ஷ்ன் கமிட்டி கடுமையாக விமர்சித்துள்ளது. காஷ்மீர் சுதந்திரமாக இருப்பதாகக் கூறும் ஆட்சியாளர்கள், சுரண்டலையும், அடக்குமுறைகளையுமே தடையின்றி வழங்கி வருவதாக அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. மின் கட்டண உயர்வு, உணவுப் பற்றாக்குறைக்கு எதிரான போராட்டம், தற்போது பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவத்தை நேரடியாக எதிர்கொள்ளும் ஒரு முழுமையான இயக்கமாக மாறியுள்ளது.

ஆனால் இதற்கு நியாயமான தீர்வு காண முடியாமல் தவிக்கும் பாகிஸ்தான் அரசோ, பஞ்சாப் மாகாணத்தில் இருந்து ஆயுதம் ஏந்திய படையினரையும், ஆயிரக்கணக்கான வீரர்களையும் தயாராக நிறுத்திவைத்துள்ளது. அண்மையில் கைபர் பக்துன்கவா பகுதியில் சொந்த நாட்டு மக்கள் மீதே பாகிஸ்தான் விமானப்படை நடத்திய தாக்குதலில் 30 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இது ஷெபாஸ் ஷெரீப் அரசுக்குக் கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Tags: பாகிஸ்தான் ஆக்கிரமிப்புpakistanRepression in Pakistan-occupied Kashmir: People riot against the government
ShareTweetSendShare
Previous Post

இளைஞர்களிடையே தேசப்பற்றை விதைத்தவர் சுப்ரமணிய சிவா – பிரதமர் மோடி

Next Post

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies